Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: டாஸ்மாக், பள்ளிகள்..! - எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் ஜூன் மாதம் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் இங்கே பார்க்கலாம்...!

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் திங்கள்கிழமை காலையுடன் நிறைவடையும் நிலையில், நேற்று முதலவர் மருத்துவக்குழுவினருடன், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது தளர்வுகளிடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கினை நீட்டித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  • கடைகளின் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் கட்டாயமாக வைக்கப்பட்டிருப்பதோடு உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனையும் செய்ய வேண்டும்.

  • கடைகள் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

ஊரடங்கு
 
ஊரடங்கு
  • அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

  • கடைகளில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கு மற்றொரு நபருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்படவேண்டும்.

 

இந்த ஊரடங்கின்போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். நோய் பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டும், அதே சமயம் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மேற்காணும் 11 மாவட்டங்களில் கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் மட்டும் 14ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

  • தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ பதிவுடன் அனுமதிக்கப்படும்

  • மின் பணியாளர்கள் கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் வீட்டுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

  • மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்.

ஊரடங்கு
 
ஊரடங்கு
  • வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். வாடகை டாக்ஸி ஓட்டுனர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

  • வேளாண் உபகரணங்கள் பம்புசெட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வேளாண் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி!

  • ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள்.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து இதர பகுதி 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகள் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படும்.

  • மிக்ஸி கிரைண்டர் தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.

  • டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

டாஸ்மாக்
 
டாஸ்மாக்
  • செல்போன் மற்றும் அது சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • மிக்ஸி கிரைண்டர் டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

  • பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்படும்.

  • ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள் நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து செயல்படலாம்.

  • தற்போது தொழிற்சாலைகளும் 33 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்படும்.

  • தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் இரு சக்கர வாகனங்களிலும் மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அல்லது பத்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  • வீட்டுவசதி வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்கள் செயல்பட அனுமதிக்கப்படுவர்

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: டாஸ்மாக், பள்ளிகள்..! - எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்? | Tamilnadu new lock down rules announcement on 110-6-2021 - Vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.