Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பஸ்ஸில் பயணித்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டு.............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில் பயணித்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டு

வீரகேசரி நாளேடு

தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தைக்கு பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். லோகநாதப்பிள்ளை பானுகோபன் (வயது 28) என்பவரே கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பஸ்ஸை சோதனையிடுவதற்காக வழிமறித்த படையினர் குறித்த இளைஞரிடம் தன்னை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் இருந்தும் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த இளைஞன் தாக்கப்பட்ட நிலையிலேயே கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உறவினர்கள் இந்த இளைஞன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் எனவும் அதற்கான மருத்துவ சான்றிதழ்கள் இருந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனநோயாளியான தமிழ் இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு

[04 - July - 2007]

த.தர்மேந்திரா

மனநோயாளியான தமிழ் இளைஞன் ஒருவரை தாக்கியதாக இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த லோகநாதபிள்ளை பானுகோபன் (வயது 28) என்பவரின் விடுதலையை கோரி அவருடைய தந்தையான ரி.லோகநாத பிள்ளை இம்முறைப்பாட்டை செய்துள்ளார்.

அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாவது;

எனது மூத்த மகனான பானுகோபன் மனநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஒழுங்குமுறை தவறாது ஒவ்வொரு நாளும் உரிய மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நிச்சயம் குழப்பம் ஏற்படும். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 102 ஆம் இலக்க பஸ்ஸில் கொட்டாஞ்சேனையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு பயணமான போது கோட்டை பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் அன்றைய தினமே கறுவாக்காடு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார்.

சம்பவத்தை அறிந்த உடனேயே நான் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று மகன் குறித்த மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்து அவரை விடுவிக்குமாறு பொலிஸாரிடம் கோரினேன்.

ஆனால், பொலிஸார் அவரை கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜராக்கி நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.