Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்விக்கான உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயற்சி - மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்விக்கான உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயற்சி - மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளும் போக்கைக் காணமுடிகின்றது. 

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், கொழும்புத்துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுச்சட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தையும் நிறைவேற்றி இந்நாட்டுமக்களின் கல்வி உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயன்றுகொண்டிருக்கின்றது என்று மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவையின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

அங்கு அவர்கள் மேலும் கூறியதாவது:

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தினால் நாட்டின் இலவசக்கல்விக் கட்டமைப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக நாட்டிலுள்ள பொதுவான பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களுக்கும் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டவரையறைகளுக்கும் முரணான வகையில் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு இந்தச் சட்டமூலம் வாய்ப்பளிக்கின்றது. 

அத்தோடு இந்தச் சட்டமூலத்தின் ஊடாக மேற்படி பல்கலைக்கழகம் உயர்கல்வியமைச்சின் கீழிருந்து பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரப்படும்.

உரிய சட்டவரையறைகளின்படி நிறுவப்பட்ட கட்டமைப்புக்களின் ஊடாக இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறைசார் பயிற்சி வழங்கப்படுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. அத்தகைய பயிற்சி வழங்கல் கட்டமைப்புக்களின் மூலம் இராணுவ மற்றும் போர்ப்பயிற்சி மாத்திரமன்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் பாங்கு, பல்வேறு சமூகப்பிரிவுகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

இருப்பினும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் ஊடாக நிறுவுவதற்கு எதிர்பார்க்கும் கட்டமைப்பானது சாதாரண பல்கலைக்கழகங்களைப் போன்றதல்ல.

மாறாக அது இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறைசார் பயிற்சிகளை வழங்குவதை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக புதிய சட்டமூலத்தின் ஊடாக மேற்படி பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்படுபவர்கள் புத்திஜீவிகளும் கல்விமான்களும் அல்ல. 

மாறாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பல்கலைக்கழத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் ஒருவர், நிதியமைச்சினால் பெயர்குறிப்பிடப்படும் ஒருவர் உள்ளிட்ட தரப்பினரே இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகசபையில் அங்கம்வகிக்கப் போகின்றார்கள். ஆகவே பாதுகாப்பு அமைச்சின் கட்டளைகளே இந்த நிர்வாகசபையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளும் போக்கைக் காணமுடிகின்றது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், கொழும்புத்துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுச்சட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தையும் நிறைவேற்றி இந்நாட்டுமக்களின் கல்வி உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயன்றுகொண்டிருக்கின்றது. 

ஆகவே இந்தச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, நாட்டினதும் பொதுமக்களினதும் ஜனநாயகத்தன்மைக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர். 
https://www.virakesari.lk/article/109392

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலவச கல்விக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுப்போம் - சஜித்

(எம்.ஆர்.எம்.வசீம்)

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவச கல்விக்கு விடுக்கப்படும் பாரிய அச்சறுத்தலாகும். அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது தேசிய ரீதியிலான தேவையாக இருப்பதை நாங்கள் அனுமதிக்கின்றோம். 

sajith.jpg

என்றாலும் அந்த அடிப்படை தேவைக்கு அப்பாற்சென்று இலவசக் கல்வியை அழிப்பதற்கு உயர் கல்வி கட்டமைப்பிற்கு அப்பால் ஒரு நிறுவனம் ஸ்தாபிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையின் மூலம் உயர் கல்வியின் ஆராேக்கிய தன்மை தரம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இறையாண்மை முழுமையாக இல்லாமல்போவதுடன் இலவசக்கல்வியும் பாரிய பிரச்சினைக்கு ஆளாகும்.

அதேபோன்று அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பல்கலைக்கழக கட்டமைப்பின் அறிவுசார் சுதந்திரம் மற்றும் சுயாதீனத்தன்மை அச்சுறுத்தலுக்கு ஆளாவதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்துக்கு அப்பாற்சென்ற உயர் கல்வி நிறுவனங்கள் அமையலாம்.

அதனால் இலவசக்கல்வி மற்றும் அதன் உரிமையாயாளர்களின் சுதந்திரம் மற்றும் போராட்டங்களின் பெயரால் உத்தேச சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இலவச கல்விக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுப்போம் - சஜித் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.