Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்காவில் பகுதியில் தொடரும் பாரிய கிரவல் அகழ்வு : அதிரடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்காவில் பகுதியில் தொடரும் பாரிய கிரவல் அகழ்வு : அதிரடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் பிரதேசத்தில் மிக பாரியளவில் கிரவல்  அகழ்வு இடம்பெற்றுவருவதோடு பாரிய வனப்பகுதியும் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துரையாடப்பட்டாலும் எந்தவித தீர்வுகளுமின்றி குறித்த கிரவல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறது.

received_175284461257328.jpeg

இங்கு பாரிய அளவில் அழிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் ஊடகங்களிலும் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை குறித்த கொக்காவில் பகுதிகளில் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

received_192149969446035.jpeg

இதன்போது கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற கிரவல் அகழ்வை பார்வையிட்டபோது அங்கு சட்டவரம்புகள் மீறப்பட்டு பாரிய அளவில் கிரவல் அகலப்பட்டதை   இரண்டு இடங்களில் மூன்று அகழ்வு பத்திர அனுமதிகளை பயன்படுத்தி இடம்பெற்ற  பாரிய சட்டமீறலை அவதானித்த நிலையில் உடனடியாக மூன்று அனுமதிப்பத்திர நபர்கள் மற்றும் 6 பக்கோ இயந்திரங்கள் 6 சாரதிகளையும் ஐயன்கன்குளம் பொலிசாரிடம்  முறையிட்டு ஒப்படைத்தனர்.

புவிச்சரிதவியல் திணைக்கள  அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய ஐயன்கன்குளம் பொலிசார்  6 பக்கோ இயந்திரங்களையும் பக்கோ இயந்திர சாரதிகள்  6 பேர் மற்றும் அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் மூவர் உள்ளடங்கலாக 9  பேரையும் கைது செய்துள்ளனர்.

received_350647019876229.jpeg

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐயன்கன்குளம் பொலிசார் இவர்களுக்கெதிராக நீதிமன்றம்  ஊடாக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய 5 டிப்பர் வாகனங்கள் சுமார் 5 மணிநேரமாக  தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் அவை கைது செய்யப்படவில்லை அவற்றிலிருந்த மண்ணை பறித்து விட்டு விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

received_1384080325296520.jpeg

received_536939327739467.jpeg

 

https://www.virakesari.lk/article/109546

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

குறித்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய 5 டிப்பர் வாகனங்கள் சுமார் 5 மணிநேரமாக  தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் அவை கைது செய்யப்படவில்லை அவற்றிலிருந்த மண்ணை பறித்து விட்டு விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

வாலும் இருக்கிறது, தலையும் இருக்கிறது ஆகவே ஆடுகிறது. ஆட்டத்தைப் பார்ப்பதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் சில தமிழ்த் தலைவர்களுக்கு ஆட்டம் பார்க்கக் கதிரைகள் போட்டுக் கொடுத்துள்ளார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.