Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பு ஜூலையின் நினைவழியா நாட்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலையின் நினைவழியா நாட்கள்!

இலங்கைத் தீவில் இரு வெவ்வேறு தனித்தேசியங்கள் உள்ளன என்பதைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் ஜனநாயக வாக்களிப்பு மூலம் வெளிப்படையாக அம்பலப் படுத்தும் முதல் நிகழ்வு 1977 ஜூலையில் நடந்த பொதுத் தேர்தலில்தான் இடம்பெற்றது.

இறையாண்மையுடைய தனித் தமிழ் அரசாகத் திகழ்வதற்கான ஆணையைத் தமிழ்த் தேசத்திடமிருந்து ஒட்டு மொத்தமாகப் பெற்ற அமைப்பாகத் தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி ஒருபுறத்திலும்

ஈழத் தமிழர்களின் தனி இறையாண்மை மற்றும் சுய நிர்ணய உரிமை அபிலாஷைகளை அடியோடு நிராகரித்து, சுதந்திரமாக வாழவிரும்பும் தமிழினத்தை அடிமைப்படுத்தி, தமிழர் தேசம் மீது மேலாண்மை செலுத்துவதற்கான முற்று முழுதான அரச அதிகாரம் கொண்ட சிங்களக் கட்சி மறு புறத்திலுமாக

பின்னாளில் இலங்கைத் தீவில் இடம்பெறப்போகும் கொடூர துவந்த யுத்தத்துக்குக் கட்டியங்கூறும் களமாக நாடாளுமன்றத்தில் இரு தரப்புகளும் நேரடி மோதலுக்கான சூழலில் எதிரும் புதிருமாக அமரும் சாத்தியம் 1977 பொதுத் தேர்தலில்தான் அரங்கேறியது.

அத்தேர்தல் முடிந்த கையோடு, அத்தேர்தல் பெறு பேறாக இலங்கைத் தீவில் இனமுரண்பாடு கூர்மையடைந்து, தீவிரமுற்று, உச்சம் பெற்றது. அதன் விளைவாக இலங்கைத்தீவு எங்கும் மோசமான இனக்கலவரம் வெடித்தது.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் 1956, 1958, 1961, 1974, 1977, 1981 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இடம்பெற்று வந்திருக் கின்றன.

தமிழர் சிங்களவர்கள் ஆகிய இரண்டு இனங்களுக்கு இடையில் கூர்மையடைந்த இன முரண்பாட்டின் பகை மையுறவின் விரோதப் போக்கின் வெளிப்பாடாகத் தானாகவே கிளர்ந்த வன்முறையாக இந்தக் கலவரங்களைக் கருதிவிட முடியாது. தமிழ் இனத்துக்கு எதிரான இந்த மிகக் கொடூரமான வன்முறை வெறியாட்டங்கள் எல்லாம் பெரும் பாலும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களினால் இன அழிப்பு என்ற கபட இலக்கின் அங்கமாக சதித்திட்டம் தீட் டப்பட்டு, ஏவிவிடப்பட்டவையாகும் என்பது உலகறிந்த பரகசியம்.

இந்த வன்முறை வரலாற்றில் 1977 இல் இடம்பெற்ற ஆவணி அமளியும், 1983 இல் இடம்பெற்ற ஆடிக்கலவர மும் மிக மோசமானவை; கொடூரமானவை.

அதிலும் 1983இல் இடம்பெற்ற இன அழிப்பு வெறி யாட்டம் முன்னர் நிகழ்த்தப்பட்ட எதனுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு மிக மோசமானதாக குரூரமானதாக அமைந்தது.

அந்த வன்முறைப் புயல் வீசிய கறுப்பு ஜூலையின் 24 ஆவது ஆண்டுப் பூர்த்தியில் மற்றொரு ஜூலை மாதத் தில் இப்போது நாம் நிற்கிறோம்.

தமிழ்த் தேசியத்தின் தேசத்தின் ஆன்மாவில் ஆழ மான நிரந்தர வடுவை ஏற்படுத்திய மோசமான துன்பியல் நிகழ்வாக அந்தக் கொடூரம் அரங்கேறியது. மீண்டும் என் றுமே சீர்செய்ய முடியாத அளவுக்கு இரு இனங்களிடையே யான உறவை சீர்குலைத்துத் துண்டிக்க இந்த இனவெறி யாட்டமே பலமான அத்திவாரமிட்டது.

காருண்ய மகான் புத்தபிரான் பௌத்த சீலம் போதித்த இந்தப் புண்ணிய பூமியில் மனிதத்துவமேயற்ற இத்தகைய கொடுமைகளைக் குரூரமாக சாதித்ததன் மூலம் உலகின் முன் மனிதாபிமானமேயற்ற கொடிய இனமாக சிங்களம் கூனிக்குறுகி நிற்கும் "கௌரவத்தை' இந்த ஆடிக் கலவர "சாதனை' அதற்குப் பெற்றுக் கொடுத்தது.

அதேசமயம், மடைவாயை உடைத்தோடும் வெள்ளம் போல உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே தமிழ்த் தேசிய உணர்வு பீறிட்டுப் பிரவாகம் எடுத்து ஓடச்செய்யும் மகத்தான விளைவை இத்துன்பியல் நிகழ்வு உருவாக்கத் தவறவில்லை.

நாடுகள், கண்டங்கள், பிரதேசங்கள் என்ற எல்லை களைக் கடந்து தமிழர்கள் அனைவரையும் இன உணர்வின் பால் ஒன்றுபடச் செய்து ஒரு தேசியமாக தேசமாக எழுச்சி பெறவைத்த கைங்கரியத்தையும் இந்த ஆடிக்கலவரமே அடிப்படையாக நின்று ஒப்பேற்றியது எனலாம்.

ஆடிக் கலவரக் கொடூரத்தால் கொதித்துப்போன தமிழர்களின் இளம் சமூகம், ஆயுதம் தரித்து விடுதலைப் போரில் ஆயிரக்கணக்கில் அணி திரள்வதற்கான உத்வேகத்தையும், உணர்ச்சியையும், உந்துதலையும் வழங்கி நின்றதும் இதன் விளைவுதான்.

இலங்கை விவகாரத்தில் நமது பிராந்திய வல்லாதிக்க சக்தியான இந்தியா நேரடியாகத் தலையீடு செய்வதற்குத் தேவையான இடைவெளியையும், புறநிலையையும், நியா யப்பாட்டையும், தகுந்த காரணத்தையும் கூட இக்கலவ ரமே ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன் வாயிலாக, இந்திய அரசின் மறைமுக உதவிகள் மற்றும் பயிற்சித் திட்டத்துடன் ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளி அமைப்புகள் பல உருவாக்கம் கொண்டு, விரி வாக்கம் கண்டு, விஸ்வரூபம் எடுப்பதற்கான வாய்ப்பை யும் அதுவே ஏற்படுத்தித் தந்தது.

ஆக ஒட்டு மொத்தத்தில், தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஒரு புதிய தளத்துக்குள் பிரவேசித்து, ஆயுதம் தாங்கிய சுதந்திரம் கோரிப் போராடுகின்ற விடுதலை வேள்வியாக பரிணாமம் அடைவதற்கான பின்புலப் புற நிலையை இந்த வன்முறைப் புயலாக வீசிய ஆடிக்கலவ ரமே கொடுத்தது.

அந்தக் கொடூரத்தின் மூலம் தான் விதைத்த வினையின் விளைவை தென்னிலங்கைச் சிங்களம் இன்றும் அறுத்துக் கொண்டிருக்கின்றது; இனியும் அறுக்க வேண்டியிருக்கும்.

தனது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்யும் வகை யில், ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை யும், அவர்களின் மனதில் ஆழ உறைந்து கிடக்கும் ஆதங் கங்களையும் உள்வாங்கி, நீதியான தீர்வை அவர்களுக்குத் தருவதற்குத் தென்னிலங்கைச் சிங்களம் முன்வரவேண் டும். இல்லையேல் விதைத்த வினைக்கான அறுவடை யைத் தொடர்ந்தும் அது அனுபவிக்க வேண்டியிருக்கும்.

முடிவு சிங்களத்தின் கைகளில்!

-உதயன்

BLACK JULY

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.