Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

195107788_330641368435966_8516855345141604643_n.jpg

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் இறுதிக்களம் முள்ளிவாய்க்கால் சமர்க்களத்திலும் எமது தேசியத்தலைவருடனே களத்தில் நின்றவர் தலைவருக்கு எப்போதும் உண்மையாகவும் விசுவாசமாகவும் செயல்படவேண்டும் என்பதையே இலக்கணமாக கொண்டு வாழ்ந்தவர். அவர்தான் கேணல் சுயாகி

23வருடங்கள் இவரின் பணி வெளியில் அறியப்படாத, ஏன் போராளிகளுக்குக் கூட பெரியளவில் அறிமுகமில்லாதவன். ஆனால் எமது ஆயுதபோராட்டத்தை தாங்கி நிற்கும் ஆணிவேர் போன்றவர். எமது தலைவரால் பாராட்டப்பட்டவர் தமிழீழவிடுதலைப்புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் பொறுப்பாளர் இவரே,

ஆரம்ப காலத்தில் மணலாற்றுக் காடுகளில் எமது தேசியத்தலைவருடன் இருந்த காலந்தொட்டு இறுதி முள்ளிவாய்க்கால் வரை தலைவரோடு நின்று ஒரே பணியை செய்தவன். அண்ணனின் நம்பிக்கைக்குரிய இரகசியக் காப்பாளன். அதனால்தான் 23வருடங்கள் போராட்ட வாழ்வும் தலைமையின் நேரடி வழிகாட்டலில் கடமையை செய்யும் பாக்கியம் கிடைத்தது.

தனது பணியில் மிகவும் கண்ணியமுடையவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தை இவர். இவரது வீட்டுத்தோட்டத்தில் காய்கறி மற்றும் பழவகைகளுக்குக் குறைவிருக்காது. எங்கு சென்றாலும் தன் வீட்டுப் பழவகை, காய்கறிகள் கொண்டு சென்று கொடுப்பது இவரது இயல்பு. இவருடைய பணி மிகவும் கடினமானது.

போராளிகளை தனது அன்பான வழி நடத்தலால் அப்பணிக்கு சுலபமாக்கியவன். அனைவரையும் மதித்து நடக்கும் ஒரு பண்பாளன். இம்மாவீரனது மூச்சும் முள்ளிவாய்க்கால் மண்ணில் அடங்கிப்போனது. (சிங்களப்படைகளால் வெளியிடப்பட்ட ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த புலிகளின் விரிப்பில் கேணல் சுயாகி என பதியப்பட்டுள்ளது. அதைபோன்று ஈழ ஆதரவு இணையங்களிலும் ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்ததாகவே பல பதிவுகள் உள்ளது. அது தவறு சுயாகி அண்ணா மே 18 2009 வரை முள்ளிவாய்க்கால் களத்தில் நின்றவர்)

வரலாற்று பகிர்வு,
செம்பறவை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.