Jump to content

ஐவர்மெக்டின்: கொரோனாவுக்கு இந்த மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள் என அமெரிக்க மருத்துவர் வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐவர்மெக்டின்: கொரோனாவுக்கு இந்த மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள் என அமெரிக்க மருத்துவர் வலியுறுத்தல்

22 நிமிடங்களுக்கு முன்னர்
ஐவர்மெக்டின் மருந்து

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

ஐவர்மெக்டின் மருந்து

குதிரைகளின் உடலில் புழுக்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் என்கிற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்ட பின், நோயாளிகளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கிறது என அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேசன் மெக்எலியா கூறியுள்ளார்.

ஐவர்மெக்டின் மருந்தை குறைந்த அளவில் மனிதர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.

"மருத்துவர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைத்து இருந்தால் மட்டுமே இம்மருந்து கிடைக்கும், காரணம் இது ஆபத்தான மருந்து" என்கிறார் மருத்துவர் ஜேசன் மெக்எலியா.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏற்கனவே கொரோனா நோயாளிகளால் அமெரிக்க மருத்துவமனைகள் திணறி வருகின்றன. ஐவர்மெக்டினை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்ட பலரும் சிகிச்சைக்கு வருவதால், மருத்துவமனைகள் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது என்று கூறினார மருத்துவர் ஜேசன்.

ஐவர்மெக்டின் என்கிற மருந்து, குதிரைகளின் உடலில் புழுக்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பயன்படுத்தப்படும். இந்த மருந்தை மனிதர்களில் ஒரு சில மருத்துவ நிலைகளில் சிறிய அளவில் பயன்படுத்தலாம்.

இந்த மருந்து இதுவரை கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் கொரோனா சிகிச்சைக்கும், கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கவும் உதவும் என இம்மருந்து விளம்பரப்படுத்தப்பட்ட போது பெரிதும் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐவர்மெக்டின் மருந்தை பலரும் பயன்படுத்துவதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவின் எஃப்.டி.ஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கடந்த மாதம், ஐவர்மெக்டினைப் பயன்படுத்த வேண்டாம் என ஒரு நீண்ட அறிக்கையையே வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

"நீங்கள் குதிரையோ, மாடோ அல்ல" என எஃப்.டி.ஏ அமைப்பு கூறி இருந்தது. அம்மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது மற்றும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரித்து இருந்தது" குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதை மறுக்கும் ஜோ ரோகன் என்பவர், தனக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டதிலிருந்து தான் ஐவர்மெக்டின் எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ்

அம்மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள், வாந்தி, தசை வலி, கண்பார்வையில் பிரச்னை போன்ற சிக்கல்களோடு மருத்துவமனை வருவதாக மருத்துவர் ஜேசன் கூறினார்.

"ஐவர்மெக்டினை அளவுக்கு அதிகமாக தவறாக எடுத்துக் கொள்வதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பை விட, மோசமாக அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என கே.எஃப்.ஓ.ஆர் என்கிற உள்ளூர் ஊடகத்திடம் கூறியுள்ளார் ஜேசன்.

"இந்த மருந்தை எடுத்துக் கொண்டு உடலில் வேறு ஏதாவது மோசமான உடல் உபாதை ஏற்பட்டால் நான் என்ன செய்வேன்? என்கிற கேள்வியை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மருந்தை எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்றால், அதை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அதிகமாக கொரோனா பரவி வரும் மாகாணங்களில் ஒக்லஹோமாவும் ஒன்று. கடந்த வாரம் மட்டும் 18,438 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.