Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்த் கிரி: யார் இவர்? மறைந்த துறவி நரேந்திர கிரியுடன் இவரது உறவு எப்படி இருந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த் கிரி: யார் இவர்? மறைந்த துறவி நரேந்திர கிரியுடன் இவரது உறவு எப்படி இருந்தது?

  • அனந்த் பிரகாஷ்
  • பிபிசி செய்தியாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
காவலர்கள் படை சூழ வரும் ஆனந்த் கிரி

பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA

 
படக்குறிப்பு,

காவலர்கள் படை சூழ வரும் ஆனந்த் கிரி

அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரியின் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரது சீடர் ஆனந்த் கிரி மீது உத்தரபிரதேச போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

அதில், கடந்த சில காலமாக நரேந்திர கிரி, அவரது சீடர் ஆனந்த் கிரியால் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்ததாகவும் அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும், பாகம்பரி மடத்தின் நிர்வாகி அமர் கிரி, ஆனந்த் கிரி மீது குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் ஆனந்த் கிரி உட்பட பலரைக் காவலில் எடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். நரேந்திர கிரியின் உடலருகில் கிடைத்ததாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பில் ஆனந்த் கிரியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நிரஞ்சன் அகாடாவைச் சேர்ந்த துறவியும் பாகம்பரி மடத்தின் மஹந்த்துமான நரேந்திர கிரிக்கும் அவரது சீடர் ஆனந்த் கிரிக்கும் இடையே நீண்ட காலமாக சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

இந்து மதத்தில் தற்போது 13 அகாடாக்கள் உள்ளன. இவற்றில், ஆவாஹன் அகாடா, அடல் அகாடா, மஹாநிர்வாணி அகாடா, ஆனந்த் அகாடா, நிர்மோஹி அகாடா தஷ்நாமி, நிரஞ்சனி மற்றும் ஜூனா அகாடாக்கள் ஆகியவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

இந்த அகாடாக்கள் அந்தந்த மரபுப்படி சீடர்களுக்குப் பட்டங்களை வழங்குகின்றன. நரேந்திர கிரியும் ஆனந்த் கிரியும் நிரஞ்சனி அகாடாவைச் சேர்ந்தவர்கள். தவிர, கடந்த பல ஆண்டுகளாக, பாகம்பரி மடத்தின் பொறுப்புகளைக் கையாண்டு வந்தார்கள்.

யார் இந்த ஆனந்த் கிரி?

ஆனந்த் கிரியை வணங்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA

 
படக்குறிப்பு,

ஆனந்த் கிரியை வணங்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஆனந்த் கிரி, நல்ல உயரம், நீண்ட சிகை, மற்றும் ஃப்ரெஞ்சு தாடி கொண்டவர். இவர், ராஜஸ்தானில் 21 ஆகஸ்ட் 1980 இல் பிறந்தார். தனது பத்தாவது வயதில் நரேந்திர கிரியுடன் அறிமுகமாகி அவரால் ஹரித்வாருக்கு அழைத்து வரப்பட்டார்.

ஆனந்த் கிரி, தனது பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பல ஆண்டுகள் உத்தராகண்டில் வாழ்ந்து பின்னர் பிரயாக்ராஜுக்கு (அலகாபாத்) வந்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனந்த் கிரி தனது பாஸ்போர்ட்டில் கூட, தாயின் பெயருக்குப் பதிலாக, இந்து சமயப் பெண் தெய்வமான பார்வதி தேவியின் பெயரையும் தந்தை பெயருக்குப் பதிலாகத் தனது குருவின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். தான், பிரிட்டன் மற்றும் கனடா உட்பட உலகின் பல நாடாளுமன்றங்களில் உரையாற்றியுள்ளதாகக் கூறுகிறார்.

யோக குருவாக தனக்கென ஒரு முத்திரை பதித்த ஆனந்த் கிரி, பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். ஆனால் பொது வாழ்க்கையில், சமூகத்தில் அவருக்குக் கிடைத்த இந்த அந்தஸ்து மற்றும் கௌரவத்தில் பெரும் பங்கு பிரயாக்ராஜுக்கு உண்டு.

பிரயாக்ராஜுடனான ஆனந்த் கிரியின் தொடர்பு

ஆனந்த் கிரி

பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA

 
படக்குறிப்பு,

ஆனந்த் கிரி

பிரயாக்ராஜ் (அலகாபாத் நகரம்) பகுதியில், ஆனந்த் கிரி ஒரு ராக்ஸ்டார் துறவி என்கிற அந்தஸ்து பெற்றிருப்பதாக அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுகிறார்கள். மக்கள் அவரைச் சிற்றரசர் என்றும் அழைக்கிறார்கள்.

கைப்பிடியைப் பிடிக்காமல் மோட்டர் சைக்கிள் ஓட்டுவது போன்ற சாகசச் செயல்கள் மூலம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பும் பெற்றுள்ளார். இதனால், அவர் இளைஞர்களின் ஐகான், ஸ்டைல் ஐகான் மற்றும் ஒரு சக்தி வாய்ந்த குருவாக அங்கீகரிக்கப்பட்டார்.

இருப்பினும், பிரயாக்ராஜ் மற்றும் பாகம்பரி மடம் குறித்து அறிந்த மூத்த பத்திரிகையாளர் ரதிபான் திரிபாதி, ஆனந்த் கிரியின் உண்மையான அடையாளம் அவர் நரேந்திர கிரியின் சீடர் என்பதுதான் என்று கூறுகிறார்.

"வசீகரமான ஆளுமை கொண்ட ஆனந்த் கிரி இளமைப் பருவத்திலிருந்தே நரேந்திர கிரியுடன் இருந்தார். நரேந்திர கிரி அவர்கள் அதிகம் பேசாத இயல்பு கொண்டவராதலால், அவர் தனது சீடர் ஆனந்த் கிரிக்கு பல சந்தர்ப்பங்களில் பேசுவதற்கு வாய்ப்பளித்தார்.

"நரேந்திர கிரியின் நெருங்கிய சீடர்களில் ஒருவராக ஆனந்த் கிரி கருதப்பட்டார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், ஆனந்த் தனது குருவை பாதுகாப்பதைப் பார்க்க முடிந்தது.

பேச்சு சாதுர்யம் உடைய ஆனந்த் கிரி படிப்படியாக தன்னை ஒரு யோக குருவாக நிலைநிறுத்திக் கொண்டார்," என்று அவர் கூறுகிறார்.

ஆனந்த் கிரி

பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA

 
படக்குறிப்பு,

ஆனந்த் கிரி

பிரயாக்ராஜ் நகரில் ஆனந்த் கிரியின் செல்வாக்கின் அளவு அவரது ஃபேஸ்புக் கணக்கில் உள்ள படங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

பல படங்களில், மூத்த காவல் துறை அதிகாரிகள் முதல் மத்திய அமைச்சர் வரையிலான தலைவர்கள் அவருக்கு முன்னால் கைகளைக் கூப்பியபடி காணப்படுகிறார்கள்.

மேலும் அவர் அளித்த பேட்டிகளில், மாநிலத் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவை கேஷவ் என்று அழைப்பது போல் காணப்படுகிறது.

ரதிபான் திரிபாதி, இந்தச் செல்வாக்கிற்கான காரணத்தை விளக்குகிறார். "ஆனந்த் கிரி பிரயாக்ராஜ் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் முக்கிய பங்கு வகிக்கிறார். அந்தப் பெரிய ஆஞ்சநேயர் பிரயாக்ராஜில் நகர தெய்வமாகப் போற்றப்படுகிறார். வெளிநாடுகளிலிருந்து கூட பிரபலங்கள் அங்கு வருகை தருகிறார்கள்.

கோயிலுக்கு வரும் பெரிய பிரமுகர்களுக்கு தரிசனம் செய்விப்பது முதல் ஆரத்தி வரையில் பல பணிகளில், அவர் தனது குரு நரேந்திர கிரியுடன் காணப்பட்டார். இதன் மூலம், அவருக்குப் பெரிய இடத்துத் தொடர்புகள் பெருகின."

ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உடன் ஆனந்த் கிரி

பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA

 
படக்குறிப்பு,

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உடன் ஆனந்த் கிரி

வெளிநாடுகளில் யோகா கற்றுத் தரும் ஆனந்த் கிரி, வெளிநாட்டுப் பயணத்தின் போது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளார்.

"அவர் மக்களுக்கு யோகா கற்பிக்க வெளிநாடு செல்வார். சுமார் இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆஸ்திரேலியா சென்றார், அங்கு ஒரு பெண், தன்னை இவர் தவறான நோக்கத்துடன் சீண்டியதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவர், சிறையிலும் இருந்துள்ளார். கும்பமேளாவின் போது குருவின் சீடராக மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்.

குருவுடன் மோதல்

ஆனந்த் கிரியை நெருக்கமாக அறிந்தவர்கள், அவருக்கும் நரேந்திர கிரிக்கும் இடையே மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாகக் கூறுகிறார்கள்.

ஆனால் பாகம்பரி மடத்தின் நிலம் தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, குருவும் சீடரும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நரேந்திர கிரி, மடத்தின் நிலங்களை தனிப்பட்ட முறையில் விற்றதாக ஆனந்த் கிரி குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில், அவர் பிரதமர், ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி விசாரணை கோரியிருந்தார்.

ஆனால் இந்த விஷயத்தில் நிரஞ்சன் அகாடா உட்பட மற்ற அனைத்துத் துறவிகளும் நரேந்திர கிரியை ஆதரித்தனர். இதன் பிறகு அவர் பாகம்பரி மடத்தில் இருந்தும் நிரஞ்சன் அகாடாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.

குருவிடம் மன்னிப்பு கோரினார்

ஆனந்த் கிரி

பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA

 
படக்குறிப்பு,

ஆனந்த் கிரி

ஆனால் சிறிது காலத்தில், ஆனந்த் கிரி நரேந்திர கிரியிடம் மன்னிப்பு கேட்டார். அதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இதற்குப் பிறகும் ஆனந்த் கிரியை பாகம்பரி மடத்திற்கும் பெரிய ஆஞ்சநேயர் கோயிலுக்கும் நரேந்திர கிரி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அகாடா பரிஷத் குறித்து நெருக்கமான புரிதலைக் கொண்ட மூத்த பத்திரிகையாளர் ரவி உபாத்யாய், ஆனந்த் கிரியின் இந்த நிலைக்கு அவரது லட்சியமே காரணம் என்று கூறுகிறார்.

"ஆனந்த் கிரி மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் லட்சியம் மிக்க நபர் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தேர்ச்சி பெற்ற ஆனந்த் கிரி அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். கோயிலில் ஆரத்தி முதல் தரிசனம் வரை என்ன தேவை இருந்தாலும், பெரிய தலைவர்கள் கூட இவரை நேரடியாகத் தொடர்பு கொள்வதுண்டு. இது அவர்களுடனான இவரது நல்லுறவுக்கு வழி வகுத்தது.

அது மட்டுமல்லாமல், அவர் தன்னை ஒரு யோக குருவாக நிலைநிறுத்திக்கொள்ளவும் முயன்றார். கங்கா சேனாவை உருவாக்கியதன் மூலமும் மக மேளா மூலமும் தனது செல்வாக்கைப் பரவலாக்கினார். நரேந்திர கிரியின் மற்ற சீடர்களுக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை என்று நம்பப்படுகிறது. அவர்கள் நரேந்திர கிரியின் காதுகளில் இவர் குறித்த புகார்களைத் தெரிவிக்க, சீடருக்கும் குருவுக்கும் இடையிலான தூரம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது." என்று அவர் விளக்குகிறார்.

https://www.bbc.com/tamil/india-58648319

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர கிரி: உத்தர பிரதேச இந்து சாமியார் மரணம் - நரேந்திர மோதி, யோகி ஆதித்யநாத் இரங்கல்

  • சமீராத்மஜ் மிஷ்ரா
  • பி பி சி ஹிந்திக்காக
21 செப்டெம்பர் 2021
நரேந்திர கிரி

பட மூலாதாரம்,SAMIRATMAJ MISHRA/BBC

அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் மற்றும் பிரயாக்ராஜில் (அலகாபாத்) உள்ள பாகம்பரி மடத்தின் துறவி நரேந்திர கிரி அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அல்லாபூரில் அமைந்துள்ள பாகம்பரி மடத்தின் ஓர் அறையில் கண்டெடுக்கப்பட்டது.

செய்தி கிடைத்தவுடன் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததாக பிரயாக்ராஜ் பகுதியின் காவல் துறைக் கண்காணிப்பாளர் கேபி சிங் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

"தற்போது இது ஒரு தற்கொலை வழக்கு போல் தெரிகிறது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கோணங்களிலிருந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது," என்று அவர் கூறினார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

நரேந்திர கிரி தனது அறிக்கைகளால் அடிக்கடி பேசுபொருளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரயாக்ராஜின் பாகம்பரி மடத்தின் துறவியான அவர், சங்கம் கரையில் உள்ள புகழ்பெற்ற பெரிய அனுமன் கோயிலின் தலைமை பூசாரியாகவும் இருந்தார்.

தற்கொலைக் குறிப்பு

நரேந்திர கிரியின் உடலுக்கு அருகில் நான்கு-ஐந்து பக்கங்களைக் கொண்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பிரயாக்ராஜ் ஐஜி கேபி சிங் ஊடகங்களுடனான உரையாடலில், இது முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாகத் தெரிவதாகக் கூறினார்.

"நரேந்திர கிரியிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பு மிகவும் மனதைத் தொடுவதாக இருக்கிறது. ஆசிரமத்தின் சில சகாக்களால்தான் மிகவும் வருத்தப்பட்டதாக அவர் எழுதியுள்ளார்."

நரேந்திர கிரி, தான் அந்த ஆசிரமத்திற்கு வந்த நாளிலிருந்து, அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல எப்போதும் உழைத்ததாக எழுதியுள்ளார்.

அவர் ஆஸ்ரமத்தின் நிதியை மிகவும் முறையாகக் கையாண்டு வந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது.

'நான் கௌரவத்திற்காகவே வாழ்ந்தேன், கௌரவத்திற்காக மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று அந்தக் குறிப்பில் எழுதியுள்ளார்.

சீடருடனான மோதல்

சமீபத்தில், அவரது சீடரும் யோகா குருவுமான ஆனந்த கிரியுடனான அவரது மோதல், தலைப்புச் செய்தியானது.

அவர் அகாடா பரிஷத் மற்றும் பாகம்பரி மடத்திலிருந்து ஆனந்த் கிரியை வெளியேற்றினார். அந்த நேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.

தற்கொலைக் குறிப்பில் ஆனந்த் கிரியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கே.பி சிங் கூறுகிறார். இருப்பினும், இந்தக் குறிப்பு (உண்மைத் தன்மை பற்றி) இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை என்றும், அதனால் அது குறித்து அதிக தகவல்கள் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

நரேந்திர கிரி

பட மூலாதாரம்,SAMIRATMAJ MISHRA/BBC

குற்றச்சாட்டும் மன்னிப்பும்

ஆனந்த் கிரி, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு அகாடாவில் உள்ள சர்ச்சை குறித்துக் கடிதங்களை அனுப்பியதோடு, மடத்தின் நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

மடத்தின் சொத்துகள் மற்றும் வருமானம் குறித்து விசாரணை நடத்தவும் அவர் கோரியிருந்தார். எனினும், இந்த விஷயத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துறவிகளும் மஹந்த் நரேந்திர கிரியை ஆதரித்தனர்.

பின்னர், ஆனந்த் கிரியும் மன்னிப்பு கேட்டார், ஆனால் அவர் மடத்துக்குள் மீண்டும் அழைக்கப்படவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு, அகில பாரத அகாடா பரிஷத் என்ற போலி ட்விட்டர் கணக்கிலிருந்து பல சர்ச்சைக்குரிய ட்வீட்கள் செய்யப்பட்டன. அது குறித்து, நரேந்திர கிரி தரகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார்.

பாகம்பரி மடத்தின் துறவி என்பதால், உள்ளூர் மக்கள் தவிர, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவரைச் சந்திக்க வந்து போய்க்கொண்டிருந்தனர்.

பிரயாக்ராஜுக்கு வரும் அனைத்துப் பெரிய தலைவர்களும் புகழ்பெற்ற நபர்களும் சங்கம் அனுமனை வணங்கியபிறகு, இவரைச் சென்று சந்திப்பது வழக்கமாயிருந்தது. ஞாயிற்றுக்கிழமையன்று கூட, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கோயிலுக்குச் சென்று இவரிடம் ஆசி பெற்றார்.

நரேந்திர கிரி

பட மூலாதாரம்,ANI

சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மஹந்த் நரேந்திர கிரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர், "அகில இந்திய அகாடா பரிஷத் தலைவர் பூஜ்ய நரேந்திர கிரியின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்தப் புண்ணிய ஆத்மாவை இறைவன் தன் திருவடியில் சேர்த்துக்கொண்டு, அவரைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைத் தரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். என மனப்பூர்வமான அஞ்சலி" என்று ட்வீட் செய்துள்ளார்.

துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேஷவ் மவுரியா, தனது ட்வீட்டில், "புஜ்ய மஹந்த் நரேந்திர கிரி மகாராஜ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் அதிர்ச்சியில் பேச்சிழந்துள்ளேன். குழந்தை பருவத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும், அவர் தைரியத்தின் உருவகம். நேற்று காலை (செப்டம்பர் 19) அவரிடம் ஆசி பெற்றேன். அப்ப்போது மிகவும் சாதாரணமாக இருந்த அவரது திடீர் மறைவு தாங்க முடியாத துக்கம் தரக்கூடியது" என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகள்

மார்ச் 2015 இல், இவர் அகில பாரத அகாடா பரிஷத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பிறகு, 2019 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் பிரயாக்ராஜில் வசித்த அவர், சச்சின் தத்தா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு 2015 ஆம் ஆண்டில் மகாமண்டலேஸ்வர் என்ற பட்டத்தை வழங்கியபோது சர்ச்சைக்குள்ளானார். பிரயாக்ராஜின் பாகம்பரி மடத்திற்கு அருகிலுள்ள பிரயாக்ராஜ் நகரத்தைத் தவிர, நொய்டாவில் பல ஏக்கர் நிலமும் உள்ளது, அதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

இது தவிர, மடம் மற்றும் சங்கம் பெரிய அனுமன் கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நரேந்திர கிரிக்கும் அவரது சீடர் ஆனந்த் கிரிக்கும் மோதல் உருவானது.

நரேந்திர கிரி பல பெரிய நிலங்களை விற்று பணத்தை தனது உறவினர்களுக்கு கொடுத்ததாக ஆனந்த் கிரி குற்றம் சாட்டினார்.

https://www.bbc.com/tamil/india-58635947

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.