Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொப்பிகலையை தக்கவைப்பதற்கு அரசாங்கத்திடமுள்ள திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிகலையை தக்கவைப்பதற்கு அரசாங்கத்திடமுள்ள திட்டம் என்ன?<

வீரகேசரி நாளேடு

கேள்வி எழுப்புகிறார் மங்கள சமரவீர பாதுகாப்பு படைகள் மீட்டெடுத்துள்ள தொப்பிகலை பகுதியை தக்கவைப்பதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது ? இந்த கேள்வியை பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரிடம் கேட்கின்றோம். அரசாங்கம் திட்டமிடலற்ற முறையில் யுத்தத்தை மேற்கொண்டு வருவதால் தற்போது பெறப்பட்டுவருகின்ற தற்காலிக இராணுவ வெற்றிகள் தோல்விகளாக மாறிவிடும் அபாயமுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

யுத்தத்தை மேற்கொண்டுவரும் அரசாங்கத்திடம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு இருக்கின்றதா ? என்று கேள்வி எழுப்புகின்றோம். தாக்குதல் நடவடிக்கைகளில் நாம் வெற்றிபெற்றாலும் இறுதியில் யுத்தத்தில் தோல்வியடைந்துவிடுவோம். அரசாங்கம் தனது தவறுகளை மறைப்பதற்காகவே யுத்தத்தை நடத்தி வருகின்றது என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : பாதுகாப்பு படையினர் உயிர்த்தியாகம் செய்து தொப்பிகலையில் பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகளை பாராட்டுகின்றோம். ஆனால் அந்த வெற்றியை அரசியல் செயற்பாடாக மாற்ற முயற்சிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். பாதுகாப்பு படையினர் பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகளை வைத்து அரசாங்கம் தனது தவறுகளை மறைத்துவருகின்றது.

அரசாங்கம் யுத்தம் தொடர்பாக பாரிய பிரபலமான விடயங்களை கூறி வந்தாலும் யுத்த களத்தில் அப்பாவி இளைஞர்களே பலியாகின்றனர். நாட்டில் பல அரசாங்கங்கள், பாதுகாப்பு செயலாளர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் பாரிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்திவிட்டு தமது காலம் முடிவடைந்ததும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். ஆனால் தொடர்ச்சியாக அப்பாவி இளைஞர்களே யுத்த களத்தில் போராடி வருகின்றனர்.

தற்போது நாட்டில் திட்டமிடலற்ற முறையிலேயே யுத்தம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எந்தவிதமான நுட்பங்களும் இல்லை. ஒரு தனி நபரின் கோட்பாட்டுக்கு அமையவே யுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. தரகுப்பணத்தை பெற்றுக்கொள்வதற்காக தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தவகையில் அரசாங்கம் எவ்வாறு தொப்பிகலை பகுதியை பாதுகாக்கப்போகின்றது என்று பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரிடம் கேட்கின்றோம். தொப்பிகலை பகுதியை பாதுகாப்பதற்கு 20 ஆயிரம் படையினர் தேவை என்று முன்னாள் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். அப்படியானால் அரசாங்கம் இந்த 20 ஆயிரம் மேலதிக படையினரை எங்கிருந்து பெற்றுக்கொள்ளப்போகின்றது ? வடக்கில் உள்ள படையினரையும் கொழும்பில் பாதுகாப்புக்காக இருக்கும் படையினரையும் அரசாங்கம் கிழக்குக்கு அனுப்பப்போகின்றதா ? என்று கேட்கின்றோம்.

அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஏன் தொப்பிகலையை இதுவரை கைப்பற்றவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் இராணுவ தளபதியிடம் கேட்டுள்ளார். காரணம் கிழக்கு வெற்றியை கொண்டாடுவதற்கு 19 ஆம் திகதியை அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. இந்நிலையில் எந்தவகையிலாவது கிழக்கை கைப்பற்றவேண்டும் என்று இராணுவ தளபதிக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் தனது குறைபாடுகளை மறைக்க தொப்பிகலை வெற்றியை பயன்படுத்துமானால் அது வெற்றிகள் தோல்விகளாக மாறுவதற்கு காரணமாகிவிடும்.

தற்போது பாதுகாப்பு செயலாளரை சிறந்த கோத்தபாய என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் எந்த பாதுகாப்பு செயலாளருக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன என்று கேட்கின்றோம். அவரின் காலப்பகுதி முடிவடைந்ததும் அவர் வெளிநாட்டுக்கு சென்று தற்போது கரிபியன் தீவுகளில் வைப்பிலிட்டுள்ள நிதியில் சொகுசு வாழ்க்கை நடத்துவார். தற்போதைய நிலைமையில் நாட்டின் பொலிஸ் சேவை முழுயைமாக அரசியல்மயமாகிவிட்டது. பொலிஸார் பாதுகாப்பு செயலாளரின் தேவைக்காக செயற்படுகின்றனர். பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளரின் கைப்பொம்மையாக செயற்படுகின்றார். தற்போதைய பொலிஸ்மா அதிபர் ஒரு காலத்தில் எனக்கு செல்யூட் அடித்துக்கொண்டிருந்தவர். நான் தொலைபேசி ஊடாக பேசும்போது மறுபக்கத்தில் இருந்து செல்யூட் அடிப்பார். இப்போது எனது பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு தொலைபேசியில் அழைத்தால் பேசாமல் இருக்கின்றார்.

தற்போது குற்றப்புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாக ஒரு காலத்தில் சுதந்திரக் கட்சியின் கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியை கேட்டவர். அத்துடன் நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது தனது மகனுக்கு வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் பதவியொன்றை வழங்குமாறு கேட்டவர்.

நாட்டில் கடத்தல், கப்பம் கோரல், படுகொலை என்பன அதிகரித்துவிட்டன. ஆனால் பொலிஸார் என்ன செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் மங்களவுடன் யார் இருக்கின்றனர் என்று தேடி அவரிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. புலிகள் வான் வழியாக தாக்குதல்களை நடத்திவிட்டு செல்கின்றனர். பாதுகாப்பு பிரிவினர் என்ன செய்கின்றனர் என்று தெரியவில்லை. அதற்கு பதிலாக கொழும்பில் உள்ள அப்பாவி தமிழர்களை வெளியேற்றுகின்றனர். கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் இருந்தார் என்பதற்காக அந்த ஹோட்டலை மூடிவிடுவதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 13-07-2007 21:00 மணி தமிழீழம் [மயூரன்]

குடும்பிமலையை பயிற்சி முகாமாகவும் சோளன் பயிர் செய்கை நிலமாகவும் மாற்றத் திட்டம்

குடும்பிமலைப் பகுதியில் சிறீலங்கா படையினரால் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயிற்சி முகாம் ஒன்று அமைப்பதற்கான திட்டத்தை சிறீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் குடும்பிமலையைப் பகுதியை சோளன் பயிர் செய்கை நிலமாக மாற்ற மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த திட்டத்தை சிறீலங்கா ஜனாதிபதி சிறீலங்கா விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறீசேனவிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

சோழனுடைய புலிக்கொடி பறந்த இடமானதால சோளப்பயிர் போடப்போறார் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
cartoonl.gif:):D:lol:
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களை அதிகரிக்கும் செலவீனங்களில் இருந்து பாதுகாக்க, தொப்பிக்கலவில் சோளம் பயிரிட்டு சோளங்கஞ்சி ஊத்தப்போகின்றார் மகிந்த மாத்தயா.. நல்ல விடயம்தான்!

கறுப்பி அக்கா செய்தியளை போடக்க தலையங்கத்தை பார்த்து போடுங்கோ சரியா

  • கருத்துக்கள உறவுகள்

சோளப் பயிர்ச்செய்கை நிலம் ஆக்கப் போகின்றார் என்பதன் அர்த்தம், அங்குள்ள காடுகளும், மரங்களும் அழிக்கப்படப் போகின்றன என்ற அர்த்தமாகும். சந்திரிக்கா ஆடு;சியில் ஜெயசிக்குரு நடந்த நேரம், வன்னியில் பல மரணங்கள் தறிக்கப்பட்டன. அதிக விலைக்கும் விற்கப்பட்டன.

அதனால் வன்னிக் காடுகள் பல அழிவுற்றன. அவ்வாறே தொப்பிக்கலவும் மிகப்பெரிய வனாந்தரமாகும். அங்குள்ள பயன்தரு மரங்களை வெட்டிப் பணம் சம்பாதிக்க மகிந்த மறைமுகமாகச் சொல்லுகின்றார் போல. இதனால் எம் மண் வறண்ட நிலமாக மாறுவதற்கான வாய்ப்பு உண்டு.

சோளப் பயிர்ச்செய்கை நிலம் ஆக்கப் போகின்றார் என்பதன் அர்த்தம், அங்குள்ள காடுகளும், மரங்களும் அழிக்கப்படப் போகின்றன என்ற அர்த்தமாகும். சந்திரிக்கா ஆடு;சியில் ஜெயசிக்குரு நடந்த நேரம், வன்னியில் பல மரணங்கள் தறிக்கப்பட்டன. அதிக விலைக்கும் விற்கப்பட்டன.

அதனால் வன்னிக் காடுகள் பல அழிவுற்றன. அவ்வாறே தொப்பிக்கலவும் மிகப்பெரிய வனாந்தரமாகும். அங்குள்ள பயன்தரு மரங்களை வெட்டிப் பணம் சம்பாதிக்க மகிந்த மறைமுகமாகச் சொல்லுகின்றார் போல. இதனால் எம் மண் வறண்ட நிலமாக மாறுவதற்கான வாய்ப்பு உண்டு.

இராணுவ பயிற்ச்சி முகாம் என்பது தான் கொஞ்சம் நல்ல யோசனையாக இருக்கிறது.... காரணம் அதன் சாத்தியப்பாடு நல்ல பயனை அவர்களுக்கு தரும்..! அங்கு வழங்கப்படும் பயிற்ச்சி வேலைகளின் பழு அதிகரிப்பால் பயிற்ச்சியில் இருந்து ஓடும் இராணுவத்தின் எண்ணிக்கை அதிகமாகலாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.