Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்து அரச பயங்கரவாதத்தை அரசே செய்தது: கோப்பாய் தவிசாளர் நிரோஷ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்து அரச பயங்கரவாதத்தை அரசே செய்தது: கோப்பாய் தவிசாளர் நிரோஷ்!

AdminNovember 28, 2021
20211128_092705.jpg?resize=640%2C365

கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங் களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதைத்தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரசபயங்கரவாதம் ஆகும் . போரில் இறந்தவர்களைக் கூட மலினப்படுத்தும் இன வாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மானிடத்தன்மை அல்ல என தவிசாளர் நிரோஷ் தெரி வித்தார் . வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக ஈகச்சுடர் ஏற்றி வைத்து உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் . மேலும் , நினைவுகூர்தல் என்பது எமது உரிமையா கும் . இன்றைய நிலையில் அந்த நினைவுகூரும் உரி மையை இராணுவ பிரசன் னங்கள் , அடாவடித்தனங் கள் ஊடாகத் தடுப்பதற்கு முயற்சி கள் மேற்கொள்ளப் படுகின்றன . அவற்றுக்கு மேலாக பொலிஸார் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர் . எமது மண்ணில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுத ரீதியிலான அடக்கு முறைகளுக்கு எதிராக இனத்தைப் பாதுகாப்பதற்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவில் கொள்கின்றோம் . 

அவர்களது தியாகங்கள் மாவீரர்களை புனிதர்களாக்கியுள்ளது . இன்றும் இந்த நாட்டில் எமது இனம் அடக்கு முறைகளில் இருந்து விடுதலை பெற போராடிக் கொண்டிருக்கிறது . முடித்து 12 ஆண்டுகள் கழிந்த மக்களின் உணர்வுகளில் இருந்து அரசு . உணர்ந்தே வருகின்றது . இதனால் அரச கட்டமைப்பு எதிர்கொண்டிருக்கும் பயப்பீதியே சந்திக்கு சந்தியும் இராணுவத்தை நிறுத்தி மக்களை அச்சுறுத்தி அடக்க நினைப்பதற்கான காரணம் ஆகும் . போரிட்டு மரணித்த மாவீரர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிராகவோ அவர்களது உரிமைகளுக்கு எதிராகவோ அவர் களது தேசியத்திற்கு எதிராகவோபோரிடவில்லை . எமது இனத்தின் அடையாளங்களும் நிலமும் பூர்வீகமும் திட்டமிட்டு காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டபோது அதற்கு எதிராகவே போராடினர்.

எம்மூதாதையர் அஹிம்சை வழியில் போராடிய போது அதற்கு மதிப்பளிக்காது அஹிம்சை வழியையும் ஜனநாயகப்போராட்டத்தையும் அரச பயங்கரவாதத்தின் ஊடாக நசுக்கியமையின் விளைவாகவே விடுதலைப் போராட்டம் ஆயுதமயப்படுத்தப்பட்டது . இன்றும் கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்கள் ஆக்கப்பட்டு வித்துடல்கள்க் விதைக்கப்பட்ட கல்லறைகளை சிதைத்து அரசு கோரத்தாண்டவமாடியுள்ளது . உலகில் எங்கு மில்லாத வன்முறை எண் இறந்தவர்களின் கல்லறையை சிதைத்த அரச இயந்திரத்திடம் தான் இருக்கின்றது . எத்தனை தடவைகள் மாவீரர் துயிலும் இல்லங்களை அரசபடைகள் சிதைத்தன என்பதை உலகமே அறியும் . அவ்வாறாக கல்லறைகளை சிதைத்த உங்களால் எமது மக்களிடத்தில் இருந்து மாவீரர்களின் தியாகங்களை அகற்ற முடியாது. மக்கள் மனங்களில் உலகில் எங்குமில்லாத அளவுக்கு எமது மாவீரர்களின் தியாகங்கள் நிலைத்திருக்கையில் மாவீரர்களை நினைவேந்துவதும் வரலாற்றுக்கட மையும் தெய்வீகக் கட மையும் ஆகும் . இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாக ராஜா நிரோஷ் ஈகைச்சுடரை ஏற்றி உரையாற்றுகையில் தெரிவித்தார் .
 

http://www.errimalai.com/?p=69526

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.