Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மறதியாளர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லையே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மறதியாளர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லையே!
 
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் முக்கியஸ்த்தரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், 43ஆவது படையணியின் இணைப்பாளருமான, பாட்டளி சம்பிக்க ரணவக்க. (Patalee champika ranawaka.) இவர் கடுமையான இனவாதக் கருத்துகளின் முன்னைநாள் சொந்தக்காரராகவும் இருந்தவர். நல்லாட்சி அரசாங்கத்தில் 50 வீத ஞானோதயத்தைப் பெற்றவர்.
மற்றையவர் சிறிலால் லக்திலக (Shiral Lakthilaka) 90களில் சாள்ஸ் அபயசேகர தலைவராக இருந்த போது, நிதிக்கும் சமத்தவத்திற்கும் இயக்கத்தில் (movement for justice and equality) மனித உரிமைச் செயற்பாடுகளிலும், சட்டம் சார்ந்த விடயங்களிலும் பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் நாமும் பணியாற்றிய இதே அமைப்பே சரிநிகர் மற்றும் யுக்த்திய பத்திரிகைகளை வெளியிட்டு இருந்தது..
2000 ஆண்டுகளின் பின் அரசியலில் புகுந்த சட்டத்தரணி சிறிலால் லக்திலக ஐக்கியதேசியக் கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினராக இருந்து அதில் இருந்து வெளியேறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசகராக பணியாற்றி, இப்போ சம்பிக்க ரணவக்கவின் அருக்கில் இருக்கிறார்.
இனி விடயத்திற்கு வருவோம் – ”கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய நிகழ்வுகளை மறக்க முடியாவிட்டாலும், அவற்றை மறந்து அவற்றிற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்” என பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டும் அல்ல ”புலம்பெயர்ந்தவர்கள் எம்முடன் மீண்டும் இணைந்து கைகோர்க்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய வரலாற்றை மறக்க முடியா விட்டாலும் அவற்றை மன்னிக்க வேண்டும்” எனகேட்டுள்ளார்.
”சிங்கள மக்கள் பெருவாரியான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தார்கள். ஆனாலும் தற்போது அதே சிங்கள மக்கள் அவரை வெறுக்கின்றார்கள். 2023 ஆம் ஆண்டு இடம் பெறும் ஜனாதிபதித் தேர்தலில் நேர்மையான துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுகின்ற ஒருவர் களமிறக்கப்படுவார்.”
”எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதை தான் செய்வோம் செய்வதைச் சொல்வோம் எங்களுடன் நீங்களும் கைகோர்க்க வேண்டும்.
43 படையணியை நீங்கள் படையணியாக கருதக்கூடாது எதிர்காலத்தில் அரசியலில் வியூகங்களை வகுக்க உருவாக்கப்பட்ட அமைப்பே இதுவாகும்.1943 நமக்கு கிடைத்த இலவசக் கல்வி அடிப்படையாக கொண்டு 43 படையணி இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எம்முடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என்றார்.
என் அறிவுக்கு எட்டியவகையில், ஜேவிபியின் 71 சேகுவரா புரட்சி நடந்த போது, ஏற்பட்ட நெருக்குதல்களில் தமிழ் மக்கள் கைகோர்க்க வேண்டும் என்றீர்கள்.
1987ன் பின்னான ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது தெற்கில் ஆறுகளிலும், குளங்களிலும், சடலங்கள் மிதந்தபோது, வீதிகளில் அனாதரவாக சிங்கள இளைஞர்கள் சுடப்பட்ட போது, ஆயிரக்கணக்காணவர்கள் காணாமல் போனபோது, தெற்கின் முற்போக்கு சக்த்திகளும், இடதுசாரிகளும், அன்னையர் முன்னணியும் வடக்கு நோக்கி வந்து தமிழ் மக்கள் கைகோர்க்க வேண்டும் என்றீர்கள்.
தெற்கில் நீங்களே தெரிவுசெய்யும் ஆட்சியாளர்கள், கொடுங்கோல் ஆட்சியை நடத்தும் போதெல்லாம், ஆட்சி மாற்றத்திற்கு தமிழர்கள் கைகோர்க்க வேண்டும் என்றீர்கள்.
இப்படி சந்திர்க்கா முதல், ரணில் மைத்திரி வரை ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின் திறவுகோலாக தமிழர்களே அல்லது சிறுபான்மையினரே தங்கள் கைகளை உங்கள் கைகளுடன் கோர்த்தார்கள்.
நீங்கள் பங்காளியாக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தை தமிழர்கள் மலையாக நம்பினார்கள். நீங்கள் முறித்து விழாமல், தமிழத்தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு மிண்டு கொடுத்தது. ஆனால் பத்தோடு பதினொன்றாக நீங்களும் அவர்களின் நம்பிக்கைகளை மூழ்கடித்தீர்கள்.
இப்போது நீங்களே உங்கள் மக்களே பெருவாரியாக வாக்குகளை அள்ளி கொடுத்து, 69லட்சம் வாக்குகளால் தேர்வுசெய்த ஆட்சியாளரின் ஆட்சியை சகிக்க முடியாத நிலை ஏற்படும் போது, அதனை மாற்றவேண்டும் அதற்கு தமிழர்களும் கைகோர்க்க வேண்டும் என்கிறீர்கள்.
1956, 1977, 1983, என அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடரும் இரத்தம் சிந்தல்களை தமிழர்கள் மறக்காவிடினும் மன்னித்து ஒவ்வொரு தடவையும் ஆற்றைக்கடக்க கைகோர்க்கிறார்கள். ஆனால் ஆற்றைக் கடந்தவுடன் நீங்கள் யார் என மீண்டும் மீண்டும் கேட்டிர்கள், கேட்கிறீர்கள்.
2008 – 2009 முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் பின்பும், அவற்றை மறக்காவிட்டாலும் மன்னித்து, ஆட்சிமாற்றத்திற்காய், நல்லாட்சிக்காய், தமிழர்கள் வாக்களித்தார்கள். குறைந்தபட்சம் அரசியல் கைதிகளையாவது விடுவித்தீர்களா?
இப்போ மிண்டும் உங்கள் நெருக்குதல்களில் இருந்து மீள தமிழர்கள் கைகோர்க்க வேண்டும் என யாழில் கோரிக்கை விடுத்துள்ளீர்கள். ஆக தமிழர்கள் எப்போதுமே மறதிக்காரர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்பது போல், 2023 ஜனாதிபதி தேர்தலிலும், இருக்க வேண்டும், கைகளை கோர்க்க வேண்டும் என வேண்டியுள்ளீர்கள்.
கவலைப்படாதீர்கள் தற்போதைய தமிழ்த் தலைவர்கள் தம்மக்கள் பற்றி சிந்திக்கும்வரை, அவர்களின் அரசியல் தொடரும் வரை, மறதியாளர்களாகவும், மன்னிப்பை வழங்கும் இரட்சகர்களாகவுமே இருப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை. 
May be an image of 6 people, people standing and people sitting
 
 
 
 

சுருக்கமாக ஆனால் நன்றாக எம் 'ஏமாறுதல்' அரசியலை எழுதியிருக்கின்றார் குரு. 

இணைப்புக்கு நன்றி நுணா. 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நுணா .......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.