Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் போர் மேகம் தயாராகிறது - ரொய்ட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் போர் மேகம் தயாராகிறது - ரொய்ட்டர்

வீரகேசரி இணையத்தளம்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இளைஞர்கள் பலவந்தமாக படைகளில் இணைக்கப்படுவதால் இளைஞர்கள் ஒளிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களிடம் அப்பிரதேசவாசிகள் பலர் உரையாடியுள்ளனர் . அமெரிக்கா , பிரித்தானியா , ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்யபட்ட விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு குடும்பத்தில் ஒருவரை வழங்க வேண்டுமென புலிகள் வலியுறுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்.

உங்கள் குடும்பத்தில் விடுதலைப்புலி போராளிகள் யாரும் இல்லை எனவே நீ கட்டாயமாக அமைப்பில் இணைய வேண்டுமென புலிகள் வலியுறுத்தினர் எனினும் நான் அதற்கு உடன்படவில்லை என்னை அவர்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் அவர்கள் என்னை என்னை போராளியாக்க முயற்சித்தனர் .

அழைத்துச் சென்று பயிற்சிகள் மற்றும் மோதல் தொடர்பாக விளக்கமளித்தனர் . எனினும் எனது குடும்பம் என்னில் தங்கியிருப்பதால் இதற்கு நான் உடன்படவில்லை என 20 வயதுடைய இளைஞனான ராஜதுரை பொன்னம்பலம் (உண்மையான பெயர் குறிப்பிட விடும்பாது பெயர் மாற்றி கூறியுள்ளார்)

இவர் தப்பியுள்ளார் எனினும் பலற்கு இவ்வாறான வாய்ப்பு இல்லை பலர் அடுத்து தாங்களே என்ற அச்சத்துடன் வாழ்கின்றனர் எனினும் புலிகள் தங்கள் பலவந்தமாக படைகளில் ஆட்களை சேர்து தொடர்பாக வெளியான கருத்துக்களை மறுத்துள்ளனர் தொண்டு நிறுவன பணியாளர்கள் புலிகள் இவ்வருட ஆரம்பத்தில் அவ்வாறு செய்தன் எனினும் பின்னர் தொண்டர்களை விதிவிலக்காக்கியிருந்தனர் என தெரிவித்துள்ளதாக ரொய்டஸ் தெரிவித்துள்ளது

எனினும் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொருவரை விடுதலை போராட்டத்தில் அர்பணிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை சில குடும்பத்திலிருந்து ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் இணைத்துகொள்ளவில்லை என்பதனை உறுதிப்படுத்தவே நாம் முயல்கின்றோம் என விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் சு.ப. தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

வடக்கே புலிகளின் பகுதிகளில் உள்ள குடும்பங்களிற்கு புலிகளிடமிருந்து யார் அமைப்பில் இணையவேண்டுமென கோடிட்டு கடிதங்கள் அனுப்படுகின்றனர் . சில சர்வதேச தொண்டு நிறுவனங்களின் தமது உள்ளுர் பணியாளர்களை அனுப்பாது தடுத்துள்ளது . சக அரசார்பற்ற நிறுவனங்களும் இவ் ஆட்சேர்பு தொடர்பான கவலையடந்துள்ளது நாங்கள் கூட அனுபப்பட்டுள்ளோம் .

அதாவது சில பணியாளர்கள் கடத்தப்படுகின்றார். காரணம் இவ் ஆட்சேர்பிற்காக எனினும் புலிகளின் அரசியில் துறைப் பொறுப்பாளர் மனிதாபிமான தொண்டர்களை ஆட்சேர்ப்பில் இணைதனர் கொள்ளப்படமாட்டார்கள் என உறிதியளித்துள்ளார் .

எனினும் அப்படி தற்போது இல்லை என தெரியவருகிறது என நோர்வே தன்னார்வ தொண்டு நிறுவனங்மான போரூட்டின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரத்தில் ஆட்சேர்ப்பு தொடர்பான விளம்பரங்கள் போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளன கரும்புலிகளின் படங்கள் கடைகள், பஸ் தரிப்பிடங்களில் ஒட்டப்பட்டுள்ளன இவற்றில் எம்முடன் இணையுங்கள் எங்கள் மண்னை சிங்கள் இராணுத்திடமிருந்து காப்போம் எனற வசனங்களுடன் துப்பாக்கி ஏற்றியவாறு நிற்கும் புலி போராளியுடன் படத்துடன் காணப்படுகிறது.

கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவரின் கயிற்றுடன் தூக்கியவாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிற்கும் பெரிதாக கிளிநொச்சி நகர்புறத்தில் காணப்படுவதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எனது ஒரு மகன் 63 நாட்களிற்கு முதல் , விடுதலைப்புலிகளுடன் இணைந்துகொண்டா எனினும் அவர் சுய விருப்புடன் இணையவில்லை அவரது தாயார் சுகவீன மடைந்துள்ளார் எனவே மகன் சென்றவுடன் தாயின் உடல் நிலை மோசமடைந்துள்ளது தெரிவித்துள்ளார்.

இன்னொருவர் தனது மகன் புலிகள் அமைப்பில் இணைந்துள்ள தனது மூத்தமகன் செல்வத்தைத் தடுக்கவே மகன் இணைந்தார் என தெரிவித்தார் . இப்பகுதிகளில் 70 சதவீதமான வறுமையில் வாழ்கின்றனர் இவர்களின் நாளந்த வருமான 1 டொலரினையும் விட குறைவு என தெரியவருகிறது.

இவ்வாறான தலைநகர் இரு தசாப்தங்களாக தொடர்கின்றது 1983 வரையான உள்நாட்டு மோதல் 70,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

ஜக்கிய நாடுகளின் சிறுவர்கிற்கான யுனிசெப் அமைப்பு தற்போதும் புலிகள் சிறுவர்களை படைகலில் சேர்ந்துக்கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

1591 முறைப்பாடுகாளை வயது குறைந்தோர் படையில் சேர்ப்பது தொடர்ப்பில் யுனிசெப் பதிவு செய்துள்ளது. இவற்றுள் ஒரு சிறுவன் 9 வயதுடைவன் என்று குறிப்பிடத்தக்கது.

அதே வேளை ஜ.நாவின் தூதுவர்கள் இராணுவத்தினர் சிறிவர்களை படையில் சேர்ப்பதற்கு கருணா குழுவினரிற்கு உதவுவதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் தாம் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக ஜ.நா தெரிவித்துள்ள கருத்தினை மறுத்துள்ளது அதே வேளை 18 வயதிற்கு மேற்பட்டோரையே தாம் படையில் சேர்ப்பதாகவும் சிலர் படையில் சேரவிரும்பு, போது தமது உண்மையான வயதினை சொல்வதில்லையென புலிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் பெரும் படை நடைவெடிக்கை செயல்படுத்தும் முகமாக ஆட்சேர்ப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் என ரொய்ட்டர் தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளது

மழை பொழியத்தானுங்கோ போகிறது. (அக்கினி மழை)

ஓ கதை அப்படி போகிறதா??

சர்வதேசத்தின் பாசையில் சொன்னால் பலாத்காரமாக படைக்கு ஆட்கள் சேர்ப்பு.

சாதாரண மக்களின் பாசையில் சொன்னால் புலிக்கு ஆள் கடத்தல்.

இது ஒரு தவிர்க்க முடியாத செயலே.

"மயிலே மயிலே இறகு போடு" என்றால் போடுமா? இது போலவே அன்று யாழ்ப்பாணத்தில் சாதாரண பிரச்சாரத்தின் போது ஒரு சிலரே படையில் இணைய முன்வந்தனர். இதன் பிறகு நடந்த சம்பவங்களை நாம் அறிவோம். இன்றும் யாழ்க்குடாநாடெங்கும் அதே மரண ஓலங்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் செம்மணியில் புதைக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் தங்கள் இறுதி நேரத்தில் ஒரு உண்மையை புரிந்துகொண்டிருப்பர்/ மனதிலே எண்னியிருப்பர் அதாவது " நாம் அன்றே இயக்கத்துக்கு போயிருந்தால் இன்று இப்படி ஆகியிராது" வாழ்வுக்கும் சாவுக்குமான இடைவெளியில் அன்று கடைசி நேரத்தில் உணர்ந்த ஒரு உண்மையை முன்னமே புத்தி சாதுரியமாக உணர்ந்திருந்தால் ஆயிரக்கனக்கான உயிரிளப்புக்களை தவிர்த்திருக்கலாம்.

தாயுக்கும் பயன்படாமல் தாய் நாட்டுக்கும் பயன்படாமல் வீணே மரணித்த ஆயிரம் ஆயிரம் அந்த உயிர்களின் கையில் முறையே ஒரு துப்பாக்கி சிங்கள இராணுவத்துக்கு எதிராக நீண்டிருந்தால் அன்று அந்த யாழ்க்குடாநாட்டின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியிருக்கலாம் அதே நேரம் இந்த கோரக் கொலைகள் நடந்திருக்காது இன்று காணாமல் போனோர் பட்டியல் வந்திருக்காது.

ஒரு தாய் தன் குழந்தைகளை மரனத்துக்கு தப்புவிக்கவேண்டும் என நினைப்பது சாதாரணம். ஆனால் எமது தேசத்தில் மரனம் எந்த வித்திலேயோ வரத்தான் போகிறது. அதனை ஏன் நாம் எமது கைகளில் ஆயுதம் ஏந்துவதன் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது? முடியும் ஆனால் அதனை என் பிள்ளை செய்வதா? இப்படியான மன நிலையிலேயே இங்கு அதிகமான பெற்றோர்கள் இன்னமும் வாழ்கின்றனர். இப்படியான சுயநலப்புத்தியினால் தான் எம் தேசத்தில் யுத்தம் இன்னமும் நீண்டு செல்கிறது.

சுகமாக ரசித்து ரசித்து சோறு உண்ண நினைப்பவர்கள் அதனை சமைப்பதற்கு பின் நின்றால் யார் சமைப்பது எப்படித்தான் உண்பது? இந்த நேரத்தில் அங்கு எந்த உணவும் சமைக்கப்படவில்லை என்றால் அங்கு இருக்கும் சிறுவர்களோ சிறுமியரோ எம் அம்மாவோ அப்பாவோ அக்காவோ அண்ணாவோ முன்னின்று சமைத்திருந்தால் இப்போ நாம் ஏன் பட்டிணியில் வாடவேண்டும் என்று அவர்கள் மேலேயே குறைப்படுவர். இந்த நிலையிலேயே இன்று நாம் இருக்கிறோம். எம் முன்னோர்கள் விட்ட பிளைக்காக நாம் அவர்கள் மீது குறைப்படுகிறோம்.

எமது எதிர்கால சந்ததி இனி எம் மீது பழிபோடக்கூடாது என்பற்காகவே தலைவர் தீர்க்க தரிசனமாக செயற்படுகின்றார். இந்த இறுதி நேரத்தில் தலைவரின் மதி நுட்பத்துக்கு ஏது வாக செயற்ர்பட்டாலே ஒளிய அன்றி இனியும் தாமதித்தால் வன்னியில் ஒரு செம்மணி உருவாகுவதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இன்று ஓலம் பாடும் சர்வதேசம் அன்று கைகட்டி வாய்பொத்தி சிங்கள அரக்கர்கர்கள் செய்யும் செயல்களை ஹரிபோட்டர் படம் பார்த்த மாதிரி பார்க்கும்.

இந்த நேரத்தில் வெளிநாடுகளில் வயது வந்தோர்க்கு கட்டாய இராணுவ பயிற்சி / இராணுவ சேவை நடைமுறையில் உள்ளது எனும் போது அவசர காலத்தில் இது எம் தேசத்தில் நடந்தால் அது சர்வதேசங்களுக்கு தப்பாக படுகின்றதோ?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து உடலை முறுக்கிக் கொண்டு திரியும் எத்தனைபேர் திரும்பவும் போய் நாட்டு விடுதலைக்காகப் போராட உள்ளீர்கள் என்ற கேள்விகளோடு சிலர் வரும்போது வந்து விடை பகருங்கள்! :)

இது சம்பந்தமான அரசியல் துறை பொறுப்பாளரின் செவ்வியை கேட்டால் சரியான நிலைப்பாடு என்ன என்பதை புரிய முடியும்...

எழுந்த மானத்தில் கற்பனையை அடித்தளமான கொண்டு சொல்ல படும் கருத்துக்கள் போராட்டத்தின் பாதையை திசை திருப்புவதோடு தமிழர்க்களின் நிலைபாடும் இதுதுதான் என , எதிரிகளால் கருத்து முன்மொழிய வகையை உங்ககளின் கற்பனை சொற்களுக்கு இடம் கொடாதீர்கள்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.