Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான வீதி பொதுமக்களின் பாவனைக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான வீதி பொதுமக்களின் பாவனைக்கு!

spacer.png

சவூதி அரேபிய நிதி  உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதியின் பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதி 275 கிலோமீற்றர் நீளமானது. பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் நீளமான வீதி ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில்  இன்று (செவ்வாய்க்கிழ்மை) விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுகிறது .

பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியின் நீளம் 86.7 கி.மீ. இந்த வீதி அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு கடந்த 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த வீதியை  இரண்டு உள்ளூர் நிர்மாணத்துறை நிறுவனங்கள் மூன்று கட்டங்களாக நிர்மாணித்துள்ளனர்.

முதற்கட்டமாக பிபில முதல் பதியத்தலாவை வரையிலான 29 கிலோமீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. . இரண்டாம் கட்டமாக பதியத்தலாவ தொடக்கம் தம்பிட்டி வரை 30 கிலோ மீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டமாக தம்பிட்டிய முதல் செங்கலடி வரையிலான 27.7 கிலோமீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. பிபிலை முதல் செங்கலடி வரையிலான வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கு 7,200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீதி நிர்மாணத்தின்  போது நிலங்களையும் சொத்துக்களையும் இழந்த பிபில, ரிதீமாலியத்த, பதியத்தலாவ மற்றும் மஹாஓயா ஆகிய பிரதேச  செயலக பிரிவு மக்களுக்கு 12.4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாளேந்திரன்,     சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாத்,  நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,   நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

spacer.png

spacer.png

spacer.png

https://athavannews.com/2021/1258971

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. இத்தோடு தெற்கில் இருந்து மட்டகளப்பு போகும் 2 வீதிகளும் செப்பனிடப்பட்டாகிவிட்டது.

ஆனால் இந்த ரோட்டில் பதியதலாவ-செங்கலடி வரை மேய்சல் நிலத்தூடு போவதால் அடிக்கடி மந்தைகள் குறுக்கிடும்.

இனி வாகனங்கள் வேகமாக போய் இவற்றை மோதுவது கூடக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நல்லது. இத்தோடு தெற்கில் இருந்து மட்டகளப்பு போகும் 2 வீதிகளும் செப்பனிடப்பட்டாகிவிட்டது.

ஆனால் இந்த ரோட்டில் பதியதலாவ-செங்கலடி வரை மேய்சல் நிலத்தூடு போவதால் அடிக்கடி மந்தைகள் குறுக்கிடும்.

இனி வாகனங்கள் வேகமாக போய் இவற்றை மோதுவது கூடக்கூடும். 

ஆமாம் இது அங்குவாழும் சமூகங்களின் இறைச்சி உணவுத் தேவையையும் பூர்த்தி செய்யும்.

ஓட்டமாவடியிலிருந்து புனானை நோக்கிய 2 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் தண்டவாளத்தைக் மாட்டு மந்தைகள் அடிக்கடி கடப்பதுண்டு. கடக்கும் வேளையில் அவை புகையிரதத்தினால் மோதப்படுவதும் உண்டு. மாடுகள் மோதப்பட்டதை அறிந்தவுடன், அவற்றுள் உயிருடன் துடிக்கும் மாடுகளைக் கைப்பற்றி, கடவுளை வேண்டித் தொழுதபின் கழுத்தறுத்து அவைகளின் இறைச்சியை எடுப்பதற்காக ஒரு சமூகம் பறந்தோடிவரும். அவர்கள் சென்றபின், வேற்றுச் சமூகம் சேர்ந்தோர் இறந்த மாடுகளின் இறைச்சியை எடுத்துச்செல்ல வருவார்கள்.

இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்குள்ளேயே இப்படி என்றால்! பேராதனை பதுளை செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி தூரத்திற்குள், வாகனங்களால் மோதுப்படும் மந்தைகளைக் கைப்பற்ற வரும் மக்கள் சமூகங்களை எண்ணிப் பார்க்க மலைப்பாக இருக்கிறது.🤔

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Paanch said:

ஆமாம் இது அங்குவாழும் சமூகங்களின் இறைச்சி உணவுத் தேவையையும் பூர்த்தி செய்யும்.

ஓட்டமாவடியிலிருந்து புனானை நோக்கிய 2 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் தண்டவாளத்தைக் மாட்டு மந்தைகள் அடிக்கடி கடப்பதுண்டு. கடக்கும் வேளையில் அவை புகையிரதத்தினால் மோதப்படுவதும் உண்டு. மாடுகள் மோதப்பட்டதை அறிந்தவுடன், அவற்றுள் உயிருடன் துடிக்கும் மாடுகளைக் கைப்பற்றி, கடவுளை வேண்டித் தொழுதபின் கழுத்தறுத்து அவைகளின் இறைச்சியை எடுப்பதற்காக ஒரு சமூகம் பறந்தோடிவரும். அவர்கள் சென்றபின், வேற்றுச் சமூகம் சேர்ந்தோர் இறந்த மாடுகளின் இறைச்சியை எடுத்துச்செல்ல வருவார்கள்.

இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்குள்ளேயே இப்படி என்றால்! பேராதனை பதுளை செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி தூரத்திற்குள், வாகனங்களால் மோதுப்படும் மந்தைகளைக் கைப்பற்ற வரும் மக்கள் சமூகங்களை எண்ணிப் பார்க்க மலைப்பாக இருக்கிறது.🤔

இன நல்லிணக்கத்தை மாட்டில் இருந்து….சே….மட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.