Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களிலுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை – கிங்ஸ்லி ரத்நாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களிலுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை – கிங்ஸ்லி ரத்நாயக்க

Digital News Team 2021-07-28
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் உள்ள  செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை  என ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் சமூக ஊடக பதிவுகளைக் கண்காணிக்கும் factcrescendo இணையத்தளம், இந்தச் செய்திகள் முற்றிலும் தவறானவை எனத் தெரிவித்துள்ளது.
இந்தப் பதிவுகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

gota22-300x170.jpg

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியால் எடுக்கப்படும் தீர்மானங்கள் அவரது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவிக்கப்படும் என கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை எவ்வாறு நியமிக்கலாம் என்றும் அவரை பதவியிலிருந்து நீக்குவது எவ்வாறு என்பதும் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

https://thinakkural.lk/article/157683

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சி? -முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என அபயராம விகாரையின் விகாராதிபதி,கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நாரஹேன்பிடிய அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி அடிப்படையற்றது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுயமாக பதவி விலகுவதற்கு அரசுக்குள் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவு பெறும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகமாட்டார் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நிலையினை சரி செய்யும் உபாயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சி? -முருத்தெட்டுவே ஆனந்த தேரர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:
ஜனாதிபதியை எவ்வாறு நியமிக்கலாம் என்றும் அவரை பதவியிலிருந்து நீக்குவது எவ்வாறு என்பதும் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எல்லாமே அரசியலமைப்பின்படிதான் நடக்கிறது நாட்டில். அரசியலமைப்பையே மாற்றி அமைக்கிறார்கள், இவர் வேற கனவுலகத்தில இருந்துகொண்டு. ராஜபக்ஸ குடும்பத்தினரை கைது செய்ய முன்னைய அரசு தயக்கம் காட்டியதற்கு காரணம்; மக்கள் எதிர்ப்பார்கள் என்பதே. மக்கள் விழித்தெழ முன் ஆட்சியை கைப்பற்ற துடித்து கட்டிலேறியது கொள்ளைக்கூட்டம். இப்போ இவர் பதவி விலகினால் மக்களே இவர்களை துவம்ஷம் செய்து விடுவார்கள். ஆகவே அந்த தவறை செய்ய மாட்டார்கள். ஒன்று தம்மை காப்பாற்ற இராணுவ ஆட்சி, அன்றி நாட்டை விட்டு ஓடுவது. எப்படியும் காலம் இவர்களை  காத்திருந்து  சிக்க வைத்திருக்கிறது.       

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.