Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுடலையும் தகனமும் அறிவியலும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம் தமிழர்கள்.. சைவர்களாயின் இறந்த மனித ஜீவனின் உடலை.. சுடலையில்.. தீயில் சங்கமிக்கவிடுவர்.

இதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன..??!

சுடலை என்பது தகனம் செய்யும் இடம். இது ஊருக்கு வெளியே மக்கள் அதிகம் புழங்காத இடத்தில் இருக்கும். காரணம்.. இறந்தவர் ஏதாவது தொற்று நோய் கண்டிருப்பின் அது மற்றவர்களையும் அதிகம் பாதிக்காமல் இருப்பதற்காக இருக்கலாம்.

தகனம் செய்த பெரிய கூட்டத்தை அனுப்பவதில்லை. நெருங்கிய உறவுகள் சிலரே போவர். அவர்களும் தகனம் தொடங்கியதும் அங்கிருக்க அனுமதியில்லை. காரணம்.. மனித உடல் தகனமடையும் போது பல விதமான இராசயன வாயுக்கள் வெளியேறும். இதில் நேரடியாகச் சுவாசிக்கும் நச்சுத்தன்மை அமைய வாய்ப்புள்ள  வாயுக்களும் அடங்கும்.. அதன் காரணமாக இருக்கலாம். 

மேலும் தகன மேடைகள் திறந்த வெளியில் இருப்பதும்.. இந்த நச்சு வாயுக்கள் இலகுவாக பரம்பலடைந்து செறிவடைவதை தடுப்பதற்காக இருக்கலாம்.

எப்போதும் சுடலைக்குப் போய் வந்தால்.. குளித்து உடை தோய்து தான் வீட்டுக்குள் நுழையவே அனுமதிப்பார்கள். இதுவும் நோய்த் தொற்றுக்கள் பரவாமல் இருக்க என்று தான் அமைகிறது. இறந்த உடலில் இருந்து பலவித நோயாக்கிகளும் வெளியேறுவது குறிப்பாக ஒட்டுண்ணிகள் உள்ளடங்க அதிகம் நிகழ்வதால்.. இந்த நடைமுறை வந்திருக்கக் கூடும்.

இறந்த உடலை மஞ்சள் நீராட்டுவதும்.. தீயிட்டு எரிப்பதும்.. நோய் கிருமிகளை இதர கிருமிகளைக் கொல்வதற்காக இருக்கலாம். 

இதில் இன்னொரு முக்கிய விடயம்..

ஒருவரின் இழப்பை இந்த பிரபஞ்சத்தில் முற்றாக இல்லாது ஒழிக்க முயலக் கூடாது என்பதற்காக.. அவரின் உடலை எரிப்பதன் மூலம் வெளிவரும் ஒளி பரந்த வெளியினூடு பரவி.. இந்தப் பிரபஞ்சத்தை அடைவதன் மூலம்.. அந்த ஒளி இந்தப் பிரபஞ்சம் வாழும் வரை இருக்கும். அதாவது ஒருவரின் இழப்பை.. அந்த ஒளியின் இருப்பு எப்போதும் அவரின் இருப்பாக்கிக் காட்டும். அதாவது அவரது உடல் ஒளியாகி ஒளிர்ந்து வாழும். சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற விதிக்கமைய.

இந்த நிலையில் மூடிய அறைக்குள் மின்சாரத்தில் உடல்களைப் பொசுக்குவது நியாயமா..??!

சரி.. ஏன் இந்தச் சிந்தனை திடீர் என்று முளைத்தது என்றால்..

இந்த அறிவியல் நிகழ்வுக்குப் பின்னால் இருந்து தான்..

பூமி உட்பட இந்த அண்டம் தோன்றிய பெருவெடிப்பின் பின் தோன்றிய நட்சத்திரங்களைப் படம் பிடிக்க.. நிகழ்வுகளைப் படம்பிடிக்க.. புதிய விண்வெளி தொலைநோக்கி ஒன்று அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டு அது செயற்பட ஆரம்பித்துள்ளது. கிட்டத்தட்ட 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த ஒளியை அல்லது கதிர்ப்புக்களை இன்று படம்பிடிக்க முயல முடியும் என்றால்.. பிரபஞ்சத்தில் ஒளியாவது எப்போதும் பயணிக்கும் ஆற்றல் கொண்டிருப்பது தான் முக்கியமாகும். 

Artwork Webb telescope

James Webb telescope.

Telescope comparisons

ஹபிள் விண்தொலைநோக்கி பின் இந்த புதிய விண்தொலைநோக்கி (ஜேம்ஸ் வெப்) தான்.. இந்த வகைகளில் சிறந்ததும் இரண்டாவதும் ஆகும். 

Cosmic history

https://www.bbc.co.uk/news/science-environment-59914936

Edited by nedukkalapoovan

  • nedukkalapoovan changed the title to சுடலையும் தகனமும் அறிவியலும்.
  • கருத்துக்கள உறவுகள்

சுடுகாடு மற்றும் இடுகாடு என்று பிரித்திருப்பார்கள்......அவை ஓர் இடத்திலேயே அக்கம் பக்கமாய் இருக்கும்.....சாதாரணமாக இறப்பவர்களுக்கு சுடுகாட்டில் தகனமும், சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்களிலும் மீண்டும் தோண்டி எடுக்கப் படலாம் எனும் நிலையில் இருப்பவர்கள் இடுகாட்டிலும் புதைக்கப் படுவார்கள்.......!  😁

நன்றி நெடுக்ஸ்......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.