Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து: மன்னிப்புக் கோருகிறார் ஜோன்சன்  பதவியை இழக்கும் இக்கட்டில் அவர் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து: மன்னிப்புக் கோருகிறார் ஜோன்சன் 
பதவியை இழக்கும் இக்கட்டில் அவர் 

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் 
கொரோனா பொது முடக்க காலத்தில்
நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து
விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவல
கத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக்
கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது.

அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த
விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன்
சன் முதல் முறையாகத் தனது மன்னிப்
பை வெளியிட்டிருக்கிறார்.உத்தியோக
ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே
பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப்
புக்கொண்டிருக்கிறார்.நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகளை உற்சாகப்படுத்துவதற்
காகவே தொழில் முறையான அந்தக் கூட்டத்துக்குத் தான் அழைப்பு விடுத்தி  ருந்தார் எனவும், விருந்து நடைபெற்ற பூங்கா தனது பணியிடத்தின் ஒரு நீட்சியே என்றும் அவர் விளக்கமளித்
துள்ளார். 

கடந்த ஆண்டு மே மாதம் நாடு முதலாவது
முடக்கத்தில் இருந்த சமயத்திலேயே
"நம்பர் 10, டவுணிங் வீதி"அலுவலகத்தின்
பூங்காவில் பலர் ஒன்று கூடிய குடிபான
விருந்து நடந்தது. பிரதமர் ஜோன்சன்
அவரது துணைவியார் உட்பட முப்பது
பேர் அதில் பங்குபற்றினர் என்பதைச்
சாட்சிகள் உறுதி செய்துள்ளன.வெளி இடங்களில் ஒருவருக்கு மேல் ஆட்கள் 
கூடுவதுகூடத் தடுக்கப்பட்டிருந்த- மிக
இறுக்கமான- கட்டுப்பாடுகளுக்கு மத்
தியில் தனது அலுவலகத்துக்கு வருமாறு
பலரை அழைத்ததைப் பிரதமர் ஒப்புக்
கொண்டிருப்பதால் அந்தத் தவறுக்காக
அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் அவரது சொந்தக் கட்சிக்குள்
ளேயே எழுந்துள்ளன. எனினும் அவரது அமைச்சரவை அவருக்கு முழு ஆதரவை வெளியிட்டுள்ளது.

பிரதமரது அலுவலகத்துக்கு வெளியே
சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகை
களுடன் கூடியுள்ளனர். அங்கு விருந்து
நடைபெற்ற மே மாதத்தில் வைரஸ் தொற்
றினால் உயிரிழந்தவர்கள் சிலரின் உற
வினர்களது கருத்துக்களை பிபிசி ஒளி
பரப்பியுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜோன்சன்"சட்டத்தை மீறிவிட்டார்,பொய் கூறி விட்டார், தனது அலுவலகத்தை இழிவுபடுத்திவிட்டார்" என்று கோஷம் எழுப்பினர்.

"நாங்கள் ஒக்சிஜன் கருவிகளைப்
பொருத்திக் கொண்டிருந்த சமயத்தில்
அவர்கள் கூடிக் குலவிக் குடிபானம் அருந்திக் கொண்டிருந்தனர்" என்று
மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறி
யதை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. 

அலுவலகத்தில் விருந்து நடந்தது என்ற
குற்றச்சாட்டு வெளியாகிய ஆரம்பத்தில்
அதனைத் தொடர்ந்து மறுத்துவந்தவர் பொறிஸ் ஜோன்சன். ஏழு, எட்டு மாதங்
கள் கடந்து இப்போது அவர் அதனை ஒப்புக்கொண்டிருப்பது அரசியலில் அவரது நிலையை மிகவும் பலவீனப்
படுத்தியிருக்கிறது.

பொறிஸ் ஜோன்சன் அரசில் சுகாதார
அமைச்சராக இருந்த மற் ஹான்கொக் (Matt Hancock) கொரோனா சுகாதார விதி
களை மீறிப் பெண் ஒருவரை முத்தமிடு
கின்ற கண்காணிப்புக் கமெரா காட்சி
வெளியாகியதை அடுத்துக் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்
கது. 
--------------------------------------------------------------------
  நன்றி- குமாரதாஸன்.

https://www.facebook.com/1328781225/posts/10228395747101949/?d=n
                                                      

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் உருவானதாக சொல்லப்படும் சீனாவில் மொத்த கொவிட் மரணம் 4000 - 6000 க்கும் இடையில் தான். உலகத்துக்கு மருத்துவம் சொல்லிக்கொடுப்பதாக பீற்றிக்கொள்ளும் பிரித்தானியாவில்.. கொவிட் மரணம் 150,000.

மக்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றனும் என்ற அக்கறையில்லை.. அரசுக்கும் தான் விதித்த விதிகளை தானே மதிக்கனுன்ன நோக்கமும் இல்லை. அப்ப எப்படி கொவிட் கட்டுப்படும்.

150,000 மரணங்களில் சுமார் 70% தவிர்க்கப்படக் கூடிய மரணங்கள். சரியான கொவிட் விதிகளை அமுலாக்கி.. சுகாதார நடைமுறைகளை இறுக்கமானப் பின்பற்றி.. test to free என்று கொவிட் சோதனை செய்து ஆக்களை வீட்டவிட்டு வெளியேறும் நடைமுறையை கொண்டு வந்திருந்தால்.. அத்தோடு... வக்சீனையும் போட்டுக் கொண்டு வந்திருந்தால்.. அவுஸி.. சிங்கப்பூர்.. ஜப்பான்.. நியூசி.. போல இங்கும் கட்டுப்படுத்தி இருக்கலாம்.. எத்தனையோ மரணங்களை. 

மக்களும் சரியில்லை.. அரசும் சரியில்லை.. கொவிட் காலத்தை தவறாகக் கையாண்டுவிட்டார்கள் என்பதே உண்மை. இதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்கிய மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூட்டுப்பொறுப்பாவர். வேடிக்கை என்னவென்றால்.. அவர்களுக்கு அரசியார் சேர் பட்டம் வழங்கி கெளரவிச்சிருப்பது தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.