Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை

1642297502-sridaran-2-1-300x200.jpgபொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வும் பாரம்பரிய தமிழர் விளையாட்டு நிகழ்வும் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தமிழர்களின் பாரம்பரியத்தினையும் பண்பாட்டினையும் நாங்கள் தான் பேணிவளர்க்க வேண்டும், நாங்கள் தான் அவற்றை கட்டிக்காக்க வேண்டும், நாங்கள் அதற்கான முதுகெலும்பாக செயற்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் இன்றைய நாள் ஒரு பண்பாட்டு நாளாக உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்திருக்கிறது.

மிக முக்கியமாக தமிழர்களிடமிருந்து அருகிப் போகின்ற போர்த்தேங்காய் உடைத்தல் தலையணைச்சமர் முட்டி உடைத்தல் கிளித்தட்டு போன்ற எங்களுடைய பண்பாட்டோடும் பாரம்பரியத்தோடும் தமிழரோடு பிறந்து வளர்ந்த அவர்களுடைய கலாச்சாரத்தோடு இயல்புடைய கூடிய இந்த நிகழ்வுகள் எங்களை விட்டு விலகிச் செல்லுகின்றன. அவ்வாறு விலகிச் செல்லுகின்ற இந்த விளையாட்டுக்களை மீண்டும் நினைவூட்டுகின்ற வகையில் பண்பாட்டு விழாவாக தமிழர்களுடைய திருநாளான தைப்பொங்கலை மையமாக வைத்து நீங்கள் முன்னெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியானது.

இங்கே வருகிறபோது பார்த்தேன் நெற்கதிர்கள் பூத்துக்குலுங்க இந்த மண்டபம் மேடையை அலங்கரித்து இருக்கிறீர்கள். எங்கள் மக்களுடைய வரலாற்றிலே நாம் நெல்லோடும் இந்த நெல்லின் வாழ்வோடும் வாழ்ந்தவர்கள். இம்முறை விவசாயிகளுக்கான பசளைகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் விவசாயிகளின் அறுவடை என்பது மிகப் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு ஏக்கரில் 8 அல்லது ஒன்பது பை நெல்லுத்தான் அறுவடை செய்கின்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஆனால் அரசாங்கம் இப்போது மியன்மாரில் இருந்தும் வேறு நாடுகளில் இருந்தும் எத்தனையோ இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியைக் கொள்வனவு செய்ய தயாராக இருக்கிறது.

இவ்வாறு அங்கு இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட அரிசிகளை இங்கு இறக்குமதி செய்ய முனைகிறார்கள் இங்கு விவசாயம் செய்பவர்களுக்கு உரத்தை பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கிலே அறுவடை செய்கின்ற காலத்தில் இலங்கையில் ஏனைய பகுதிகளில் சிலவற்றில் இனித்தான் விதைப்பு ஆரம்பமாக இருக்கின்றது. வடக்கு கிழக்கில் விவசாயிகள் நெல் அறுவடை செய்கின்ற காலத்தில் இந்த அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து அரசியினை இறக்குமதி செய்வது மேலும் எமது மக்களை துன்பத்துக்கு உள்ளாகும்.

ஆனால் நாம் கடும் நெருக்கடியோடு வாழ்ந்தவர்கள். ஒரு கால கட்டத்தில் 90 களில் இலங்கையில் மண்ணெண்ணெய் 12 ரூபாய்க்கு விற்ற போது நாம் 300 ரூபாய்க்கு வாங்கியவர்கள் அப்போது யூரியாவை கண்ணால் காணவில்லை உடுப்பு துவைப்பதற்கு சவர்க்காரங்களைக் காணவில்லை நாங்கள் இந்த மண்ணிலே பெட்ரோலை கண்டிருந்ததில்லை சீமெந்துகளை கம்பிகளை கண்டிருந்ததில்லை அவ்வாறு இருந்தும் இந்த மண்ணிலே நாங்கள் வாழ்ந்து இருந்தோம் எங்களுடைய வாழ்க்கை நகர்ந்திருந்தது.

அதனை இப்போது தான் சிங்கள மக்கள் படிக்கவும் உணரவும் ஆரம்பித்திருக்கிறார்கள் ஆகவே பொருளாதார தடை என்பதும் பொருளாதாரத்தின் மீதான ஒரு வகையான ஆக்கிரமிப்பு என்பதும் இப்போதுதான் சிங்கள மக்களை உணர வைத்திருக்கிறது . தமிழர்கள் ஏற்கனவே இவற்றை நேரடியாக அனுபவித்து வாழ்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கணேசலிங்கன் பாடசாலைகளின் அதிபர்கள் கிராம அலுவலர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை – குறியீடு (kuriyeedu.com)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nochchi said:

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள்

எங்கள் பொருளாதாரத்தை அடித்து நொறுக்கி, வேண்டுமென்றே பொருளாதார தடையை ஏற்படுத்தி, வீதிகளை தடுத்து, நெருக்கடிகளை விதித்து, அடக்கியபோது மகிழ்ந்திருந்த சிங்களம் அதன் அறுவடையை அனுபவிக்குது. அடித்தால் நசுங்கிப்போகும் விட்டில் பூச்சிகளல்ல நாங்கள், அன்றும் துளிர்த்தோம், இன்றும் அதைக்கண்டு அஞ்சவில்லை. அன்று எங்களுக்காக இந்த மக்கள் வீதியில் இறங்கியிருந்தால் இன்று அமைதிப்பூங்காவில் மகிழ்ந்திருந்திருக்கலாம். அன்று எங்கள் கண்ணீரையும், இழப்புகளையும், ரசித்தவர்கள் இன்று அதே நிலையில். வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எங்கள் பொருளாதாரத்தை அடித்து நொறுக்கி, வேண்டுமென்றே பொருளாதார தடையை ஏற்படுத்தி, வீதிகளை தடுத்து, நெருக்கடிகளை விதித்து, அடக்கியபோது மகிழ்ந்திருந்த சிங்களம் அதன் அறுவடையை அனுபவிக்குது. அடித்தால் நசுங்கிப்போகும் விட்டில் பூச்சிகளல்ல நாங்கள், அன்றும் துளிர்த்தோம், இன்றும் அதைக்கண்டு அஞ்சவில்லை. அன்று எங்களுக்காக இந்த மக்கள் வீதியில் இறங்கியிருந்தால் இன்று அமைதிப்பூங்காவில் மகிழ்ந்திருந்திருக்கலாம். அன்று எங்கள் கண்ணீரையும், இழப்புகளையும், ரசித்தவர்கள் இன்று அதே நிலையில். வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்.

என்னதான் வீழ்ந்தாலும் முண்டுகொடுக்க நாடுகள் உள்ளன. ஆனால், நாமோ வீழ்ந்த இடத்திலிருந்து எழும்பவல்லத் தவழக்கூட முடியாதிருக்கின்றோம். தவழ நினைத்தாலும் பின்னிழுப்பதற்கான கூட்டங்களே இருக்கிறது. இதனைக் கடந்தசெல்ல வழிநடாத்தும் தலைமையும் இல்லை. மக்களும் அன்றாடப்பிரச்சினைகளோடு அவலவாழ்வென்ற நிலை. துணிவோடு அடையாளப் போராட்டங்களையாவது மேற்கொள்ளும் மக்களோடு அரசியல்வாதிகளோ அமைப்புகளோ கரம்கோர்த்துச் செளுமைப்படுத்தி நகராத நிலை. தமிழரது அவலத்துள் நலன்தேடுவது அனைத்துலக சக்திகள் மட்டுமல்ல, எமது அரசியல்வியாதிகளுமே என்பதும் தமிழினத்தின் அவலமே. இதனை கடந்து செல்ல மக்கள் எழுச்சியடைந்தாலன்றி வேறுவழியில்லை.எந்த மாற்றமும் இன்றி அடுத்த தேர்தலிலும் இதேமுகங்கள் வாக்குக்கேட்டு வருவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும் நல்லதொரு அரசியல்  தலைமை இருந்திருந்தால். அது உருவாகிற வரை நம்ம பிரச்சனை தீரப்போவதில்லை. அவனே தீர்வு தந்தாலும் நீயா நானா போட்டியில் அவனிடமே திருப்பி கொடுத்துவிட்டு, அவனுக்கு சேவகம் செய்வதே பாக்கியம் என்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.