Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 25-07-2007 14:43 மணி தமிழீழம் [மயூரன்]

குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா

இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இந்த விடயத்தை தமிழ் அரசில்வாதி ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து தமது அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகவும் எனினும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கை விட குறைவான அதிகாரங்களை கொண்ட அலகினை தமிழ் மக்களுக்கு வழங்குமாறு அது வலியுறுத்தியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை மூலம் முன்வைக்கப்படவுள்ள தீர்வு யோசனைகளுக்கு மக்கள் ஆணையை பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பபை நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் இதனை மாற்றியமைக்க வேண்டாம் என கடும் தொனியில் எச்சரித்துள்ளதாகவும் அரசியலமைப்பின் 13வது சரத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி மாகாண மட்டத்தில் அதிகாரங்களை பகிருமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு

குதிரை இளைச்சா கொள்ளு தின்னும் என்பார்கள்.... அது போல தமிழர் தரப்பு இளைச்சதாக நினைக்கும் எல்லாரும் இப்படித்தான் கொள்ளு கொடுக்க நினைப்பார்கள்....

குதிரை இளைச்சா கொள்ளு தின்னும் என்பார்கள்.... அது போல தமிழர் தரப்பு இளைச்சதாக நினைக்கும் எல்லாரும் இப்படித்தான் கொள்ளு கொடுக்க நினைப்பார்கள்....

இது தெரிந்து தான் தலைவர் இந்தியாவுடன் கூட துணிந்து முரன்பட்டார்.........

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை சரியாக மாற்றி அமைக்காததால்தான் இந்து சமுத்திரத்தில் ஒரு வல்லரசாக மாற முடியாமல் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு விட்டிருக்கின்றது.. அயல் நாட்டு மக்களுடன் நல்லுறவைப் பேண முடியாவிடில் வல்லரசுக் கனவு கானல்நீராக மாறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கை மீண்டும் இணைத்து மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரத்தை வழங்க இந்தியா வலியுறுத்தல்

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

இன நெருக்கடிக்கு காத்திரமான தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைத்தால் மட்டுமே சர்வதேச நிதியுதவி தொடருமென இணைத் தலைமை நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் கொழும்புக்கு கடும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் பிராந்திய வல்லரசான இந்தியா, இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி மாகாண சபைகளுக்கு அதிக பட்ச அதிகாரங்களை வழங்குமாறும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமெனவும் கண்டிப்பான தொனியில் வலியுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தீர்வு யோசனைகளை துரிதமாக சமர்ப்பிக்க வேண்டுமென இந்தியா உட்பட சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து வருவதுடன் இதன் பின்னரே சமாதான முயற்சிகள் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமென சர்வதேச சமூகம் உறுதியாகத் தெரிவித்துவிட்டது.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவருடனான கலந்துரையாடலின்போது இந்தியாவின் எதிர்பார்ப்பு மற்றும் நிலைப்பாடு பற்றி ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் இளைய சகோதரருமான பசில் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்ததாகவும் அறிய வருகின்றது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி மாகாண மட்டங்களுக்கு மேலும் அதிகாரத்தைப் பரவலாக்கப்பட வேண்டுமெனவும் இந்தியா நிர்ப்பந்திப்பதாக இங்கு தெரிவித்துள்ள பசில் ராஜபக்‌ஷ இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட மாகாணங்களுக்குஅதிக அதிகாரங்கள் வழங்குவதை இந்தியா விரும்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பது மற்றும் சர்வகட்சிப் பிரதிநிதிகளின் தீர்வுத் திட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு குறித்தும் அங்கு ஆராயப்பட்டதாக மேலும் அறியவருகின்றது.

இதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட மற்றும் சில நாடுகள் இன நெருக்கடிக்கான தீர்வு யோசனைகளை உடனடியாக வெளியிடுமாறு இலங்கைக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அறியவருகின்றது.

அண்மையில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவை அழைத்து அமெரிக்காவின் அழுத்தம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளதுடன் விரைவில் தீர்வு யோசனையை வெளியிடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இணைத் தலைமை நாடுகள் ஏற்கனவே இன நெருக்கடிக்கான தீர்வு யோசனைகளை உடன் வெளியிடுமாறும் அப்போதே நிதியுதவிகள் கிட்டுமென நிபந்தனை விதித்துள்ள நிலையில் இலங்கை பெரும் அழுத்தத்தில் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகஸ்ட் மாத நடுப் பகுதியில் இனநெருக்கடிக்கான தீர்வு யோசனைகளை வெளியிட முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.