Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு 25 மில்லியன் டொலர் நிதி உதவி: ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு 25 மில்லியன் டொலர் நிதி உதவி: ஐரோப்பிய ஒன்றியம்

[புதன்கிழமை, 25 யூலை 2007, 20:53 ஈழம்] [ப.தயாளினி]

இலங்கை இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு 25 மில்லியன் டொலர் மனிதாபிமான நிதி உதவி வழங்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்ரியத்தின் நிதி ஆணையாளர் லூய்ஸ் மைக்கேல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. இனப்பிரச்சினையால் அனைத்துலக மனிதாபிமான விதிகள் மீறப்பட்டுள்ளன.

இந்த இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வாழும் அகதிகள் உட்பட அனைவருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த மனிதாபிமான நிதி உதவி வழங்கப்படும்.

சுத்தமான குடிநீர், வாழ்விடம், உணவு, அடிப்படை மருத்துவ வசதி, கல்வி மற்றும் கழிப்பிட வசதிகளுக்கு இந்நிதி உதவி பயன்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காளிகளாகச் செயற்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினூடே இந்தத் திட்டங்கள் செயற்படுத்தப்படும். உதவி வழங்கும் நிறுவனங்கள், பாதிக்கப்பட்டோரை முழுப் பாதுகாப்புடன் அணுக வேண்டும். மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமான விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மனிதாபிமான பணியாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டனம் செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் மோதல் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் தொடரும் மோதல் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணிப்பாளர் லூயிஸ் மைக்கேல் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தோன்றியுள்ள வன்முறைகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான வகையில் பொதுமக்களை உபாதைகளுக்கு உட்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அண்மை நாட்களாக இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 21 மில்லியன் டொலர் நிதி உதவியிளை வழங்குவதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும் இந்தியாவின் தமிழ் நாட்டில் தங்கியுள்ள மக்களுக்கும் இந்த நிதி உதவி மூலம் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிதி உதவியானது இலங்கையில் செயல்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான நிறுவனங்களின் ஊடாகவே மக்களை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவியினை ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் வழங்காமல் ஏனைய அமைப்புகள் மூலம் மனிதாபிமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானித்துள்மை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஸ்ரீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான உதவிகளை வழங்குமாறு அனைத்துலகிடம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவியினை நேரடியாக வழங்காமல் தவிhத்துக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

-பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.