Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி

K1024_WhatsApp-Image-2022-01-07-at-22.39அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே,

தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம், இக்காலப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்ட, இன்றும் நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்தியும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகின்றோம்.

இன்று யேர்மனியில் பதினாறு ஆண்டுகளுக்கு பின்பு ஓலாவ் சொல்ச் (Olaf Scholz) அவர்களது தலைமையிலான ஒரு புதிய அரசு பதவியேற்ற நிலையில், தமிழ்மக்களாகிய நாம் எமது நிலைப்பாட்டினை அவர்களுக்கு தெளிவுபடுத்துமுகமாக எதிர்வரும் 26.02.2022 மனிதச்சங்கிலிப் போராட்ட வடிவிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யேர்மன் நாடு தழுவிய ரீதியில் ஒரே நாளில் ஏற்பாடு செய்துள்ளோம்.

அன்பானவர்களே,

ஒரு தன்னாட்சி உரிமைக்காக போராடி வருகின்ற எமது மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் பறித்து வரும் சிங்கள இனவெறி அரசு இன்று எமது தமிழ்த்தேசிய அடையாளத்தினையே அழித்து விடுவதற்கான இறுதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான ஓர் இன அடையாள அழிவினை எதிர்நோக்கியுள்ள பெரும் இக்கட்டான காலச்சூழலில் உணர்வோடு ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய எமக்கு உள்ளது.

இப்பெரும் பொறுப்பினை உணர்ந்து கீழ்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் அனைவரும் அணிதிரளவேண்டும் என அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

1. தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்டது ஓர் இன அழிப்புத்தான் என்பதனை யேர்மனிய அரசு ஏற்றுக்கொள்வதோடு அதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை வலியுறுத்த வேண்டும்.

2. ஈழத்தமிழர்களை ஒரு தேசிய இனம் என அங்கீகரிப்பதோடு தமிழர் தாயகமான தமிழீழத்தில் வாழும் அனைத்து மக்களுக்குமான தன்னாட்சி உரிமையினை (சுயநிர்ணய உரிமை) தார்மீக அடிப்படையில் யேர்மனிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் மனித உரிமை மீறல்களையும் யேர்மனிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்புவதனை யேர்மனிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

K1024_WhatsApp-Image-2022-01-07-at-22.39.53.jpg

மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)

 

மனிதச் சங்கிலி நீளட்டும் !அகரப்பாவலன்.

K800_MK-Poster-212x300.jpgமனிதச் சங்கிலி நீளட்டும் !

——————————-------------

“போராட்டம் ”

இயற்கையின் ஒவ்வொரு

வெளிப்பாட்டிலும் நிகழ்கிறது !

ஓர் வித்து மண்ணைப் பிளந்து வெளிவருவது

போராட்டத்தின் வெற்றியாகும் ..

ஓர் நதி மேடு பள்ளங்களை தாண்டி

கடலில் சேர்வதும் போராட்ட வெற்றியாகும் ..

தமிழா ! இது உனக்கும் பொருந்தும் விதியாகும் ..

நம் தலைவன் சொன்னான் ..

“இயற்கை நம் வழிகாட்டி ”

தமிழா ! நீ லெமுரியா கண்டத்தின்

முதல் மரபின் தோற்றம் ..

எத்தனை போரைக் கண்டுவிட்டாய் !

வெற்றிவரும்வரை போராடு ..

வெற்றிபெற்றபின்பும் போராடு ..

போராட்டம் தொடர்நிலையே !

போராட்டமே பலத்தின் முதிர்ச்சி !

இன்று உன் கையில்

மனிதச்சங்கிலி போராட்டம் !

தமிழீழ சுதந்திரத்தின்

உரிமை மீட்பு போராட்டம் !

எமது “இலக்கு “தமிழீழமே !

முடிந்தமுடிவில் தலைசொறிவு ஏன் ?

போராட்டமே சுதந்திரத்தின் படிக்கற்கள் !

ஏறிச்செல் வெற்றி நிச்சியம் !

விமர்சனங்களை ஏற்றுக்கொள் ..

அதன்விடையாக வெற்றியை கொடு !

இது மனிதச்சங்கிலி இணைப்பல்ல ..

தமிழீழ உணர்வின் இணைப்பு ..

தமிழீழ மக்களின் பலத்தின் இணைப்பு ..

ஜேர்மனிய அரசின் இதயத்தை திறக்கும் இணைப்பு ..

இது முடிவல்ல ..தொடர்நிலையே ..

சங்கிலியை இணைப்போம்

தமிழீழ உரம் விதைப்போம் .

அகரப்பாவலன்.

K800_MK-Poster.jpg

மனிதச் சங்கிலி நீளட்டும் !அகரப்பாவலன். – குறியீடு (kuriyeedu.com)

Edited by nochchi
முதன்மைச் செய்தியிணைப்பு

  • nochchi changed the title to மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

26.02.2022அன்று பிராங்பேர்ட்டில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டம்..

https://www.facebook.com/inuvaiursothys/videos/671290683993525/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2022 at 23:00, குமாரசாமி said:

26.02.2022அன்று பிராங்பேர்ட்டில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டம்..

https://www.facebook.com/inuvaiursothys/videos/671290683993525/

இணைப்புக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.