Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்தனர்: நீதிமன்றில் சிறிலங்கா அரசாங்கம்.

Featured Replies

தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்தனர்: நீதிமன்றில் சிறிலங்கா அரசாங்கம்.

சிறிலங்காவில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் கொழும்பு விடுதிகளிலே தங்கியிருந்தனர் என்று சிறிலங்கா தலைமை நீதிமன்றில் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை சிறிலங்கா தலைமை நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விசாரணைகளின் போது சிறிலங்கா அரச தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி பாலித பெர்னாண்டோ, தமிழர்களை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை விளக்கினார்.

கொழும்பில் விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை என்பது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. விடுதிகளில் தங்கியிருந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் பல நடத்தப்பட்டுள்ளன. இதனால் தான் தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதற்கு எதிரான வாதங்களை மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சுமந்திரன் மற்றும் மோசன் பாலேந்திரா ஆகியோர் முன்வைத்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மேலதிக விசாரணையை நவம்பர் மாதம் 28 ஆம் நாளுக்கு ஒத்திவைத்தனர்.

-Puthinam-

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப் பட்டமைக்கு எதிரான இடைக்கால உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் வரை நீடிப்பு

கொழும்பிலும் அதன் புறநகரிலுமிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் நாள் வரை நீடித்துள்ளதாக சிறீலங்கா உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளளது.

கடந்த யூன்மாதம் 14ம் நாள் தமிழர்கள் கொழும்பிலும் புறநரிலுமிருந்து வெளியேற்றப்பட்டமை எதிராக அடிப்படை மனித உரிமை மனுவின் விசாரணையை எதிர்வரும் நவம்பர் 28ம் நாள் எடுத்துக்கொள்வதாக சிறீலங்கா உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

http://www.pathivu.com/

புலிகள் எங்கெல்லாம் இருப்பார்கள்?

உயர் நீதிமன்றில் சூடான விவாதம்!

கடந்த மாதம 7ம் திகதி கொழும்பு நகர லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியெற்றபடபட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுமீதான மற்றோரு கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது.

நீதியரசர்களான நிமால் காமினி அமரதுங்க,நிமால் திஸநாயக்க, அன்றூசோமவன்ஸ ஆகியோர் அடங்கிய ஆயத்தின் முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னதாக கடந்த மாதம் 9ம் மதிகதி இந்த வழக்கு முதற்கட்டமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு நீதிபதிகள் தடைவிதித்திருந்ததுடன், லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றபட்டடு வவுனியாவுக்கு அனுப்பட்டட தமிழர்களை மீண்டும் கொழும்பிற்கு கூட்டி வந்து அவரவர் தங்கியிருந்த இடங்களிலேயே விடுமாறும் உத்தரவிட்டிருந்தது.

நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடட்ட போது, 'நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையினால்தான் அரசினுடைய கண் திறந்தது" என்று நீதியரசர் நிமல் காமினி அமரதுங்க தெரிவித்தார்.

தமிழர்ககளைக் கொழும்பிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை யாருடைய அதிகாரத்தின் கீழ் - எவருடைய தூண்டுதலுக்கு இணங்கப் பொலிஸார்; மேற் கொண்டனர் என்பது கூறித்து விசாரிப்பதென்று உயர்நீதிமன்றம் முடிவு செய்திருகின்றது.

லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றப்பட்டட தமிர்கள் பலவந்தமாக வெளியேற்றபட்ட்டமையானது அவர்களைக் காரணமின்றிக் கைது செய்த நடவடிக்கை என்றும், வவுனியாவுக்குக் கூட்டிச் சென்று ஒருநாள் வைத்திருந்தமை, சட்ட விரோதமாக தடுத்து வைததிருந்தமைக்கு ஒப்பானது என்றும் தெரிவித்த நீதியரசர்கள், அதற்காகவும் தமிழ் மக்களை அவதூறாக நடத்தியமைக்காகவும் அரசமைப்பின் 11,13:1 , 13:2 ஆகிய சட்டவிதிகளின்படி வழக்கின் விரதிவாதிகளான பொலிஸாருக்கு எதிராக விசாரணைகள் மேற் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான சட்டதரணி என்.சுமத்திரனுக்கும், பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோவுக்கும் இடையில் சூடானவாக்குவாதம் இடம் பெற்றது.

"விடிகாலை வேளையில் அபபாவித் தமிழ் மக்கள் தமது காலைக்கடன்களைக் கூட முடிக்க முன்னர் வெளியேற்றபட்டமை மிகவும் கொடூரமான செயல்" என்றார் சட்டதரணி சுமந்திரன்.

"லொட்களில் தங்கியிருக்கும் தமிழர்கள் கொழும்பில் பலவேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள், ஈடுபட்டு வருகின்றார்கள். அதனால்தான் அவர்களை வெளியேற்ற வேண்டி ஏற்பட்டது. புலிப் பய..... ளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது." என்று சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ வாதிட்டார்.

"அப்படியானால் நீங்கள் கூறும் புலிப் பய.... கள் சாதாரண லொட்ஜ்களில் தான் தங்கியிருப்பார்ளா? ஐந்து நட்சத்திர ஹோட்டல்களளில் அவர்கள் இருக்கமாட்;டார்களா? ஏன் அங்கிருந்த தமிழர்களை நீங்கள் வெளியேற்றவில்லை...? என்று மடக்கினார் சுமநதிரன்.

"இல்லை.. இல்லை.. லொட்ஜ்களில் தங்கியிருப்பவர்கள் தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்ற தகவல் கிடைத்ததையடுத்தே அவர்கள் வெளியேற்றபட்டார்கள்". என்று கூறி பொலிஸாரின் செயலை நியாயப்படுத்தினர்.

அப்போது குறுக்கிட்ட சட்டதரணி சுமந்திரன் 'என்னையா பேசுகிறீர்கள்..? நீங்கள் கூறுகின்ற பயங்கரவாதிகள் ஜனாதிபதி மாளிகைக்குள்ளேயே இருக்கக்கூடியவர்கள். ஏன்! ஜனாதிபதி பிரேமதாஸ இருந்த போது அவரோடு, அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகி ஜனாதிபதி மாளிகையில் கூடவே இருந்த பாபு என்பவர்தானே தற்கொலைத் தாக்குதல் நடத்தி அவரைக் கொலை செய்தார்...! எனவே, இந்த இடத்தில் தான் அவர்கள் இருப்பாகள் என்று உங்களால் எப்படி வாதிட முடியும்? என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார், அத்ததோடு முடிவுக்கு வந்தது நேற்றைய விவாதம்.

இந்த வழக்கின் அடுத் விசாரணை நவம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.