Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சபைக்குள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

'பறிக்காதே பறிக்காதே காணிகளை பறிக்காதே ' என சபைக்குள் கோஷல் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

273837040_3051582868489970_7145168589614

பாராளுமன்றத்தில்இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வன ஜீவராசிகள் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபைக்குள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான  சார்ள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றிய பின்னரே பதாகைகளுடன் எழுந்த  தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் ''பறிக்காதே பறிக்காதே. காணிகளை பறிக்காதே" " தமிழர் நிலங்களை பறிக்காதே'' என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

273823973_455639789640869_15815089901237

 தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களாக சிறீதரன், சார்ல்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம், சுமந்திரன், சாணக்கியன், கலையரசன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் விசனமடைந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரான சி.பி. ரத்னாயக்கவும், இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவும்  இந்த ஆர்ப்பாட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு சபைக்கு  தலைமை தாங்கிக்கொண்டிருந்த பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவரான அங்கஜன் இராமநாதனிடம் வலியுறுத்தினர்.

274535529_3083297885216312_6870414536676

அவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்களை கட்டுப்படுத்த முயன்றபோதும் அவர்கள் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

ஜெனீவா அமர்வுக்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செய்வதாகவும் தமிழ் மக்கள் மீதி இவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாதெனவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றம்சாட்டினார்.

பாராளுமன்ற சம்பிரதாயம் தெரியாதுவிட்டால் சுமந்திரன் எம்.பி.இடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் அவர் கூறினார். இதன்பின்னர் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சி.பி. ரத்னாயக்க மக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படாது என வழங்கிய உறுதிமொழியையடுத்து தமிழ் தேசியயக்கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர் 

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சபைக்குள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களாக சிறீதரன், சார்ல்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம், சுமந்திரன், சாணக்கியன், கலையரசன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

என்னடா இருந்தாப்போல,  என்ன நடந்தது இவர்களுக்கு? என்று ஒருகணம்  பதறிப்போனேன். அவர்களும் ஜெனிவா அமர்வுக்கு தங்களை தயார் படுத்துகிறார்கள், இவர்களும் தங்களுக்கேற்ற வரையறையில் அங்குமிங்கும் தாவுகிறார்கள்.  எனக்கென்னவோ அடிக்கடி இந்த ஜெனிவா அமர்வு வரக்கூடாதா என்று எண்ணத்தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.