Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

100 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் தென்பட்ட அரியவகை வண்ணத்துப்பூச்சி; உற்சாகத்தில் ஆய்வாளர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி ஸ்பாட்டட் ராயல்

  • Share
  •  
  •  
  •  
  •  

கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் 'தி ஸ்பாட்டட் ராயல்' என்ற வண்ணத்துப்பூச்சியை 1800களின் இறுதியில் ஆய்வாளர்கள் நீலகிரியில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

 

யுனெஸ்கோவால் நாட்டின் பல்லுயிர் வளம் நிறைந்த முதல்‌ உயிரச்சூழல் மண்டலமாக நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் அறிவிக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள பல உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக இந்த நீலகிரி காடுகளே விளங்கி வருகின்றன. இந்தக் காடுகளில் இன்னும் அறியப்படாத பல உயிரினங்கள் இருக்கலாம் என ஆய்வாளர்களே அதிசயிக்கின்றனர். சில அரியவகை உயிரினங்களையும் அவ்வப்போது கண்டறிந்து வருகின்றனர். அது மட்டுமல்லாது, முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் அஞ்சிய சில உயிரினங்களையும் கண்டறிந்து வருகின்றனர்.

வனஉயிர் புகைப்படக்காரர்கள்
 
வனஉயிர் புகைப்படக்காரர்கள்
இந்த நிலையில், வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பு மற்றும் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் 'வின்ட்டர் பிளைத்' எனும் அமைப்பு அரியவகை வண்ணத்துப்பூச்சி இனம் ஒன்றினை தமிழகத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கண்டறிந்துள்ளனர். இது ஆய்வாளர்களிடையே பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தி ஸ்பாட்டட் ராயல், டஜூரியா மாக்கு லேட்டா என்ற அறிவியல் பெயரைக் கொண்ட (The Spotted Royal, Tajuria maculata) என்ற அரியவகை வண்ணத்துப்பூச்சி மீண்டும் கண்டறியப்பட்டது குறித்து வின்ட்டர்‌ பிளைத் அமைப்பின் அறங்காவலர் வினோத் ஸ்ரீராமலு, "வண்ணத்துப்பூச்சிகள் தொடர்பான ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சரிவுப் பகுதியில் சமீபத்தில் இந்த வண்ணத்துப்பூச்சி தென்பட்டது. கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் 'தி ஸ்பாட்டட் ராயல்' என்ற வண்ணத்துப்பூச்சியை 1800களின் இறுதியில் ஆய்வாளர்கள் நீலகிரியில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

வினோத் ஸ்ரீராமலு
 
வினோத் ஸ்ரீராமலு

சுமார்‌ 100 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் மீண்டும் தற்போது நான் பதிவு செய்திருக்கிறேன். இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் மரங்களில் வளரும் ஒரு குறிப்பிட்ட ஒட்டுண்ணி தாவரத்தில் முட்டையிடும் தன்மையைக் கொண்டவை. அந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட வகை தாவரங்களும் தென்பட்டன. இது அவற்றின் இனப்பெருக்கத்துக்கான நல்ல அறிகுறியாக உள்ளது. இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பது வனவளம் பெருகுவதற்கும் உகந்ததாக அமையும்" என்றார்.

100 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் தென்பட்ட அரியவகை வண்ணத்துப்பூச்சி; உற்சாகத்தில் ஆய்வாளர்கள்! | A rare butterfly species spotted after 100 years in Tamilnadu - Vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.