Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் இலங்கையர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை - வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் இலங்கையர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை - வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. இலங்கையில் முதலீடு செய்வதற்கு எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் சேவைகளைப் பெறுவதற்காக வருகின்ற தமிழ் பேசும் சமூகத்தினர் இனிவரும் காலங்களில் எந்தவித இடையூறுகளுமின்றி தமிழ் மொழி மூலமான சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என அவர்  மேலும் கூறினார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்கொள்வதற்காக பொலிஸ்   பயிற்சி கல்லூரியொன்று வவுனியா- கனகராயன்குளத்தில்   அமைக்கப்படவுள்ளது. வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இங்கு இணைத்துத் கொள்ளப்படுவதுடன், அவர்களுக்கான நியமனங்களும்  வட மாகாணத்திலேயே  கொடுக்கப்படும் எனவும் வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்த  ஊடக சந்திப்பின்போது அவருடனான உரையாடல் கேள்வி பதில்களாக கீழே தரப்படுகிறது.

கேள்வி: புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உங்களிடம் ஏதேனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனரா?

பதில் : பேச்சுவார்த்தை என்று நடந்ததில்லை. எனினும் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு உரையாடுவார்கள்.

கேள்வி: எதனை முன்னிறுத்தியதாக அந்த உரையாடல்கள் அமையும்?

பதில் : முதலீடு சம்பந்தமானதாக இருக்கும். மேலும், கல்வி, சுகாதாரம், கலாச்சாரம் போன்றவை சம்பந்தமாக கலந்துரையாடுவார்கள். அரசியல் பற்றி பேச மாட்டார்கள். மனித உரிமைகளைப் பற்றியும் பேசுவார்கள். எனினும் முழுமையாக அதைப் பற்றியதாக பேச மாட்டார்கள்.

கேள்வி : முதலீடு சம்பந்தமாக பேசும்போது முக்கியமான  விடமாக பார்க்கப்படுவது எது?

பதில் : இலங்கையில் முதலீடு செய்வதற்கு நம்பிக்கை இருக்கிறதா என்பது பிரதானமாக பார்க்கப்படுகிறது.  ஆயினும், அவர்கள் இங்கே தங்களது வேலைகளை செய்ய முடியுமா?  மேலும், தடை நீக்கல் (கிளியரன்ஸ்) கிடைக்குமா போன்ற சந்தேகங்கள் அவர்கள் மத்தியில் நிலவுகிறது.

எவ்வாறாயினும், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தும் வாழும் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. இலங்கையில் முதலீடு செய்வதற்கு எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

கேள்வி: இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றவர்களும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியுமா? அதற்கு ஏதேனும் தடைகள் காணப்படுகிறதா?

பதில் :  எது செய்தாலும் சட்ட ரீதியாகவே செய்ய முடியும்.  இருப்பினும், அவர்கள் அங்கு வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள். ஆகவே எந்த பிரச்சினைகளும் இல்லை.

கேள்வி : வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு எதிராக ஏதேனும் வழங்குகள் இருப்பின், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்தால் ஏதேனும் சட்ட சிக்கல்கள் காணப்படுமா?அவர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்படுமா?

பதில் : இதுவரையிலும் இதுபோன்ற பிரச்சினைகள்  எமக்கு வரவில்லை. ஒருவேளை வந்தாலும்,  அது குறித்து தேடிப்பார்க்க வேண்டும். 1987 மற்றும்  2002 ஆண்டு காலப்பகுதிகளில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதன்படி பார்த்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடிம்தானே. மாறாக பாரிய பிரச்சினைகள் ஏதும் இருப்பின் ஆராய வேண்டும். எவ்வாறாயினும் பொது மன்னிப்பு சிறந்த மாற்றீடாகும்.

கேள்வி: சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க முடியுமல்லா?

பதில் : அது என்னுடைய பொறுப்பில் இல்லை.

கேள்வி : கூடுதலான அரசியல் கைதிகள் வட மாகணத்தைச்  சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆகவே, வட மாகாண ஆளுநர் என்ற ரீதியில் அவர்களை பொது மன்னிப்பின்  கீழ் விடுவிப்பதற்கு ஏ‍தேனும் முயற்சிகள் எடுக்க முடியுமல்லவா?

பதில் : ஆம். இது குறித்து அரசிடம் கோரிக்கைகளை முன்வைக்க முடியும். அதற்கான முயற்சிகளை எடுப்பேன்.

கேள்வி : பிரதமருடன் இன்று மாலை (நேற்று) கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளீர்களல்லவா? எதைப்பற்றியதாக அந்த கலந்துரையாடல் அமையவுள்ளது ?

பதில் :  வட மாகாணத்தில் விவசாயத்‍தை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.  இரண்டு ஆண்டு கால திட்டமாக வகுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கு  திட்டங்கள் தீட்டப்படவுள்ளன.  

மேலும், வட மாகணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்
 

https://www.virakesari.lk/article/124149

 

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது பாழ்கிணற்றில் தங்கள் முதலை கொட்டுவார்களா? துட்ட கைமுனுவின் நினைவிடத்தில் பிரமாணம் எடுக்கும்போது இருந்த கர்வம் என்ன? அத்தனையும் போச்சே! சொல்லிச் சொல்லி அடிச்சு கலைக்கபோறானுகள். வெட்கப்படுவாரா கோத்தா தன் செயலுக்காய்? வெள்ளோட்டம் விட்ட நாமலின் கதையும் கனவானதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

யாராவது பாழ்கிணற்றில் தங்கள் முதலை கொட்டுவார்களா? துட்ட கைமுனுவின் நினைவிடத்தில் பிரமாணம் எடுக்கும்போது இருந்த கர்வம் என்ன? அத்தனையும் போச்சே! சொல்லிச் சொல்லி அடிச்சு கலைக்கபோறானுகள். வெட்கப்படுவாரா கோத்தா தன் செயலுக்காய்? வெள்ளோட்டம் விட்ட நாமலின் கதையும் கனவானதே.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவூ.....ம் நன்றாகவே நடக்கும....😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.