Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறி...

~~~~~  

எப்போதும் நான் வெளிப்படையாகவே சொல்லி வந்திருக்கிறேன்.. நான் ஒரு பார்ப்பன சாதியில் பிறந்தவன்..

மிக ஆச்சாரமாக வளர்க்கப்பட்டவன்.. சிறு வயதில் எம் தந்தை பெரியாரை வெறுக்க கற்பிக்கப்பட்டவன்.. ஆனாலும் மிக சிறு வயதிலேயே புத்தகங்கள் வாசிக்கத் துவங்கிவிட்டதால் ஒரு குழப்பமான தெளிவோடு நான் வளர்ந்தவன்.. ஏன் என்று தெரியாது. சாமி இல்லை என்பது மட்டும் அந்த வயதில் மனதுக்குள் பதிந்து போயிருந்தது..

அப்பா  எனக்கு சிறந்த படிப்பைத் தருவதாக உறவினர்களிடம்  பெருமை பீத்தியபடி என்னை எப்போதும் அத்தை வீட்டிலும் சித்தப்பா வீட்டிலும் பாட்டி வீட்டிலுமாக படிக்க வைத்தார். பாட்டி வீடு தவிர மற்றவை எல்லாம் யூத சித்திரவதை முகாம்களுக்கு சற்றும் குறையாதவை.. விளையாட அனுமதியற்ற.. வீட்டை விட்டு வெளியே போக அனுமதியற்ற.. உடல் நிலை சரியில்லாமல் போனால் உதை வாங்குகிற.. பள்ளிப் பாடங்கள் தவிர வேறு எதை வாசித்தாலும் முதுகு உடைய அடி வாங்குகிற.. திரைப்படங்கள் பார்க்க அனுமதியற்ற.. பள்ளிப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள அனுமதியற்ற.. பள்ளி சுற்றுலாக்களுக்கு போக அனுமதியற்ற.. பள்ளி விளையாட்டுகளில் கலந்து கொள்ள அனுமதியற்ற.. ஓர் இனிமையான சிறுவன் பருவம்தான் எனது..

அப்பா என்னை பள்ளி பள்ளியாக பந்தாடி கடைசியாக ஒன்பதில் ராயப்பன்பட்டி எஸ்யுஎம்மில் சேர்த்து விட்டார். அங்கேதான் எனக்குப் புரிந்தது அப்பாவை விட கொடூரமாக அடிப்பவர்களும் ஆசிரியர்கள் என்ற பெயரில் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று.. மிதித்தே கொன்றாலும் சரி. அப்பா கையால் சாவோம் என்று ஆஸ்டலை விட்டு ஓடி வந்துவிட்டேன்.

என் அப்பா ஒரு வாரம் என்னை அடித்து ஓய்ந்துவிட்டு டே ஸ்காலராகவே போய்த் தொலையட்டும் என்று விட்டுவிட்டார்.. 

இத்தனை சித்திரவதையிலும் நான் பக்கா பார்ப்பனக் குஞ்சாகதான் வளர்க்கப் பட்டேன் என்பது குறிப்பிடத் தக்கது..

எஸ்யுஎம்மில் படிக்கையில்தான் கார்த்தி அறிமுகம்.. என்னுடைய கிளாஸ்மேட்.. குழந்தைகள் கையில் காசு கொடுத்தால் குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்று தீவிரமாக நம்பியவர் என் அப்பா. அதனால் பள்ளி இடை வேளைகளில் “வாங்கித் திங்க” கூட ஒரு போதும அவர் காசு கொடுத்ததில்லை. அதனால் எப்போதும் வெறுங்கையனாகவே நான் ஆஸ்டலிலும் சரி.. டேஸ்காலர் வாழ்விலும் சரி.. வாழ வேண்டி  இருந்தது..

ராயப்பன்பட்டியில் படிக்கையில்தான் ஒரு சின்ன ஆசுவாசம். அப்பாவின் நேரடி கட்டுப்பாடு இல்லாமல் என்னால் படிக்க முடிந்த பள்ளி அது..

அங்கேதான் கார்த்தி முதன் முதலாக அந்த கேண்டீனில் புரோட்டா வாங்கிக் கொடுத்தான். அப்போதெல்லாம் புரோட்டா என்பது மிகப் பெரிய லக்சுரி.. கார்த்தி பெரிய இடம் (என்று நானும் கார்த்தியுமே நம்பிக் கொண்டிருந்தோம்) அதனால் அவன் வாங்கி கொடுத்தான். அப்போதெல்லாம் புரோட்டாவுக்கான குழம்பு என்றால் இப்போது மாதிரி மசாலாக்கள் இல்லை.. வெறும் பட்டை சோம்பு மட்டும்தான். அங்கே நான் சாப்பிட்ட பரோட்டாவுக்கான குழம்பு சுவை என்னை அப்படியே கட்டிப் போட்டது..

எங்கள் வீட்டில் இந்த மசாலாப் பொருட்களின் வாசனையே ஆகாது. அம்மா குழம்பு மசாலா பொடிக்கு ரைஸ்மில்லில் போய் அரைத்து வரச் சொல்லுவாள்.. நமக்கு முன்னால் யாராவது சோம்பு உள்ள குழம்பு மசால் அரைத்திருந்தால் அதன்பின் அரைக்கும் நம் மசாலாவில் சோம்பு வாசனை வந்து விடும். அதற்காகவே அம்மா மறுபடி மறுபடி சொல்லுவாள். ரைஸ்மில்  அண்ணாச்சியிடம் நம் மசாலாவை அரைக்கும் முன் சாதாரண தவிடைப் போட்டு ஒரு முறை அரைக்கச் சொல் என்று.. மீறி தவிடு அரைக்காமல் நம் மசாலாவை அரைத்துச் சென்றால் சோலி முடிந்தது. ஒவ்வொரு முறை குழம்பு வைக்கையிலும் உமட்டுகிறது என்று சொல்லி அம்மா நம்மை குற்றவுணர்வுக்கு உள்ளாகி விடுவாள். அந்தளவுக்கு சோம்பு கூட உமட்டும் பொருள் என்று நம்ப வைத்தே வளர்க்கப்பட்டிருந்தேன். அப்படி இருந்ததால் அந்த ஆஸ்டல் கேண்டீனின் பட்டை சோம்பு குழம்பு என்னை மயக்கியதில் ஆச்சரியம் இல்லை.

ராயப்பன்பட்டியில்தான் சரவணவேல்  கிளாஸ்மேட்டாக இருந்தான். அவன் முத்துலாபுரத்தின் வசதியான குடும்பத்துப் பையன்.. அப்போதே சாதி வெறியோடு இருந்தான் என்பது இப்போது யோசிக்கையில்தான் தெரிகிறது.

ஒரு முறை அவன் வீட்டுக்குப் போகையில் அவன் அம்மா சாப்புடுய்யா என்று அவனுக்கும் எனக்குமாக சோறு வைத்தார்கள். இப்படியான உபசரணையை அது வரை நான் அனுபவித்ததே இல்லை. எங்கள் வீட்டில் நாங்கள் சாப்பிடுகையில் யாராவது நண்பர்கள் வந்துவிட்டால் அவர்களை உட்கார வைத்துவிட்டு கதவை சாத்திக் கொண்டுதான் எங்களை சாப்பிடச் சொல்வார்கள். இதுதான் சரி என்று நினைத்திருந்த காலத்தில் வீட்டுக்கு வந்திருப்பவனுக்கு சோறே போடுவது என்பது நான் எதிர்பாராத ஒரு ஆச்சரியம்.. அதை சாப்பிடுகையில் ஒரு பிரவுன் நிற வஸ்து அந்த குழம்பில் இருந்தது. வழக்கம் போல பட்டை சோம்பு வாசம் இருந்ததால் அந்த குழம்பு எனக்குப் பிடித்துப் போனது. அந்த வஸ்துவை மெல்கையில் அது எனக்கு கடிபடவில்லை. வசக் வசக் என்று மெல்ல வேண்டி இருந்தது. நான் இது என்னடா என்று கேட்டால் அதாண்டா மட்டன் என்றான்.

அந்த கணமே பூமி பிளந்து என்னை விழுங்கி விடக் கூடும் என்றும்.. அந்தக் கணமே என் முன் கடவுள் தோன்றி என்னை நரகத்தின் கொதிக்கும் எண்ணைச் சட்டியில் போட்டு வறுக்கக் கூடும் என்று எதிர்பார்த்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. குழம்பும் சோறும் அவ்வளவு ருசி.. ஆனால் இந்த வசக் வசக் கறியை எப்படி தின்பது என்று தெரியவில்லை. மென்னுட்டு முழுங்கிடு என்றான் சரவணவேல்.. அப்படியே முழுங்கினேன்..

அதிலிருந்துதான் நான் இந்த திம்மி இந்துவாக மாறினேன் என நினைக்கிறேன்..

அப்புறம் ஓடைப்பட்டியில் எனது ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ படிப்பு.. அதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் தனி நாவல் எழுத வேண்டும.. அங்கே விடைத்தவன்தான் என் நண்பன் சுகுமார். அத்யந்த நண்பன். இப்போது அவன் தீவிர சங்கியாக இருக்கிறான். ஆனாலும் அப்போது அவன் தீவிர நண்பனாக இருந்தான். ஒவ்வொரு தீபாவளிக்கும் அவன் வீட்டில்தான் காலை உணவு.. அப்பி பட்டியில் காலை எட்டு மணிக்கு அவன் வீட்டுக்குப் போனால் இட்லியும்  கோழிக் குழம்பும் எனக்காக  காத்திருக்கும்.. பல வருடங்கள் இந்த சம்பிரதாயம் தொடர்ந்தது. அந்த பல வருடங்களில் நான் கறி ருசிக்கு பெரும் அடிமையாகி இருந்தேன்.

அப்புறம்தான் கறி குறித்த எனது தேடல் துவங்கியது. பிராய்லர் கோழிகள் அறிமுகம் ஆயின.. நாட்டுக் கோழி எலும்பு என்பது கடிக்க முடியாத கம்பி மாதிரி இருக்கும். அதே நேரம் பிராய்லர் கோழி எலும்பு என்பது முறுக்கு மாதி ரி நொறுங்கும். ஒரு நண்பர்தான் தேனி ரயில்வே கிராஸ் அருகில் உள்ள சரஸ்வதி விலாசில் இட்டிலி கோழிக்குழம்பு காம்பினேஷனை அறிமுகம் செய்து வைத்தார். அதிலிருந்து அந்த பிராய்லர் கோழிக்குழம்புக்கும் இட்லிக்கும் நான் அடிமை ஆனேன்..

அப்புறம் வாழ்வு திசை மாறியது. ஒரு நண்பரோடு லோயர்கேம்ப் பக்கத்தில் உள்ள பளிய குடிக்குப் போனேன். அப்புறம் சில ஆண்டுகள் கழித்து இன்னொரு நண்பரோடு அதே பளியகுடிக்குப் போனபோது ஒரு நண்பர் அறிமுகம் ஆனார். அவர்தான் கண் முன்னால் ஓர் உடும்பை உரித்து அதன் தோலில் உப்பு தடவி காய வைத்துவிட்டு  கறியை தனியாகப் பிரித்து வைத்தார்.

ஒரு கமலாரஞ்சு பழம் அளவுக்குதான் அந்த உடும்பில் கறி இருந்தது. இது எப்படி போதும் என்று நான் நினைத்திருந்தபோது அவர் அந்த கறியை தண்ணீரில் கழுவத் துவங்கினார். ஒரு முறை இருமுறை அல்ல. ஏழு முறை தண்ணீரில் கழுவினார். என்ன என்று கேட்டதற்கு உடும்புக் கறியை எழு முறை கழுவினால்தான் வேகும் என்றார்..

ஏழு முறை கழுவி முடித்தபின் அந்தக் கறி இரண்டு பெரிய ஆப்பிள்களின் சைசுக்கு வந்து விட்டிருந்தது. இந்த imbibing process நான் அறியாதது. சரி., இவ்வளவு தண்ணீர் கறிக்குள் போயிருக்கிறது. இது எப்படி இருக்கும் என்று காத்திருந்தால் அவர்கள் போட்ட காரம் உப்பே அந்தக் கறியை சுவையுள்ளதாக்கி இருந்தது..

அந்த காட்டுக்குள் உட்கார்ந்து சாப்பிட்ட தருணம் இருக்கிறதே. அந்த தருணத்தையும் அந்த ருசியையும் இப்போதும் மறக்க முடியாது.

அப்புறம் ஒரு நண்பர் குமுளியில் உள்ள அம்பாட்டி ஓட்டலுக்கு கூட்டிச் சென்றார். இங்க கட்டைக்கால் கிடைக்கும். சாப்பிடுவோமா என்றார்.

எனக்குள் கொசுவர்த்தி சுற்றியது.. அப்போதெல்லாம் எந்த பாராக இருந்தாலும் குடிக்கணும் என்று நினைத்தால் புகுந்து விடுவேன்.. தலித்துகள் அதிகம் இருக்கிற பாருக்குப் போய் நான்வெஜ் என்ன இருக்கிறது என்று கேட்டால் கட்டைக் கால்தான் என்பார்கள்.

எங்கள் ஏரியாவில் கட்டைக்கால் என்றால் அது பன்றிக்கறி.. 

அதையும் நான் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டிருககிறேன். ஆனாலும் வெறும் காரச் சுவைதான் அதில் மிகுந்திருந்தது.

அப்புறம் ஒரு நாள் ஒரு நண்பனை சந்திக்க அவனது கிராமத்துக்குப் போயிருந்தேன். அவன் காட்டுப் பன்றியின் பங்குக்கறி கொண்டு வந்திருந்தான்.,

பங்குக் கறி என்பது சற்றே விநோதமானது.. நிலங்களில் புகுந்து சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கொல்வதற்காக அவுட்டு எனப்படும் ஒரு வேட்டு வைத்திருப்பார்கள். அவுட்டை பற்ற வைத்தும் வெடிக்க வைக்கலாம்.. அல்லது அழுத்தினால் வெடிக்கிற மாதிரியும் செட் செய்யலாம்.

இவர்கள் நன்கு சுட்ட கப்பைக் கிழங்கை மாவாக பிசைந்து கொள்வார்கள். அவுட்டை  எடுத்து அதை கப்பைக் கிழங்கு சுட்ட மாவில் பொதித்து உருண்டை பிடிப்பார்கள். அவரவர்கள் நிலத்தை சுற்றி வைப்பார்கள். 

இரவானால் வரும் காட்டுப் பன்றி அந்த சு,டட கிழங்கின் வாசனைக்கு அந்த உருண்டையை கடிக்கும். அதன் கடியின் அழுத்தத்தில் அவுட்டு வெடிக்கும்.  காட்டுப் பன்றி தலை சிதறி செத்துப் போகும். அதைப்பார்க்கும் மற்ற பன்றிகள் ஓடிப் போய்விடும்.

அப்படி செத்த பன்றியை அறுத்து அங்கேயே கறி போட்டு விடுவார்கள். ஒரு வேளை நீங்கள் அந்தப் பக்க்ம போய் வேடிக்கை பார்த்தால் உங்களுக்கும் ஒரு பங்கு  கொடுத்து விடுவார்கள். நாளைக்கே அவர்கள் காட்டுப் பன்றியை கொன்றதாக நீங்கள சாட்சி சொன்னால் நீங்களும் அதை பங்கு வாங்கி தின்றவர்கள்தானே.. அதுதான் இதில் இருக்கும் ட்விஸ்ட்டு.

அப்படி வாங்கி வந்திருந்த காட்டுப பன்றி பங்குக் கறியை அந்த நண்பன் குக்கரில் சமைத்து வெளியே எடுத்து தேங்காய் பூ தூவி வதக்கிக் கொடுத்தான். இப்போது வரைக்கும் அதை விட ஒரு பெரிய டேஸ்ட்டை நான் எந்த பன்றிக் கறியிலும் பார்த்ததில்லை.

அப்புறம் ஒரு நண்பர் திடீரென்று கேரளா அம்பாட்டி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். இங்கே வெண் பன்றிக்கறி ஃபேமஸ்.. என்றார். வரவழைத்தோம். சாப்பிட்டால் அமிர்தம் என்றால் தேவாமிர்தம்.. அவ்வளவு பூப்போல வெந்த பன்றிக்கறியை நான் எங்கேயும் சாப்பிட்டதில்லை. அப்போதிருந்து இப்போது வரைக்கும் நான் அந்த பன்றிக்கறி ஃபிரைக்கு அடிமை..

அப்புறம் சாலிகிராமத்தில் நிறைய தள்ளுவண்டிக் கடைகளில் பீஃப் எனப்படும் மாட்டுக்கறி ஃபிரை விற்பார்கள்..

அதை வெறும் “கறி” என்று சொல்வார்கள்.

அதில் எனக்கு ஃபேவரைட் கடை ஒன்று இருந்தது.

சாலிகிராமம் காந்தி நகர் போகும் வழியில் பாலுமகேந்திரா ஸ்டூடியோவுக்கு எதிரில் ஒரு அண்ணன் பீஃப் ஃபிரை தள்ளுவண்டிக்கடை வைத்திருப்பார். அவரிடம் முன் கூட்டியே சொல்லி விடவேண்டும்.. எக்ஸ்ட்ரா காரம் போடாதீங்க என்று.. அப்படி எக்ஸ்ட்ரா காரம் போடாமல் அவர் தரும் பீஃப் ஃபிரையைப் பொன்ற மென்மையான மாட்டுக்கறியை நீங்கள் உலகில் எங்கேயும் சாப்பிட்டிருக்க முடியாது..

இப்போது அந்தக் கடை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.

எனக்கு கறி வகைகள் ரொம்ப பிடிக்கும். மீன் குழம்பு அவ்வளவு பிடிக்கும்.. ஆனாலும் சாப்பிடும் அளவு குறைவாக இருக்கும்..

இம்புட்டு கறி வகையை எல்லாம் சாப்பிட்ட திம்மி இந்து என்ற வகையில் சொல்கிறேன். 

அசைவம் எனப்படும் கறி வகைதான் ஆரோக்கியமானது. இந்த சைவ சமையல் என்பது நம் உடல் நலத்தை பாதிக்கக் கூடியது.. ஆக திம்மி இந்துவாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.

அசைவத்தின் சுவையை இழந்து விடாதீர்கள்..

திம்போம். வாழ்வோம்..

https://www.facebook.com/1542901587/posts/10226815062192952/?d=n

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா போகுது கதை. இரசிக்கும் படியாக இருக்கின்றது........!  👍

பகிர்வுக்கு நன்றி ஓணாண்டியார்......!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.