Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யேர்மனியை விமர்சிப்பதா? மோசடிப் பேர்வழிகள் அமைச்சர்களா? 50 வாக்குகள்கூட வாங்க இயலாத டக்ளசை வைத்து தீர்வா?: கொதிக்கிறார் அமைச்சர் அனுரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியை விமர்சிப்பதா? மோசடிப் பேர்வழிகள் அமைச்சர்களா? 50 வாக்குகள்கூட வாங்க இயலாத டக்ளசை வைத்து தீர்வா?: கொதிக்கிறார் அமைச்சர் அனுரா

[சனிக்கிழமை, 28 யூலை 2007, 20:29 ஈழம்] [செ.விசுவநாதன்]

சிறிலங்காவில் அரசியல் நிலைமைகள் குறித்தும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடைமுறைகள் குறித்தும் மகிந்த அரசாங்கத்தின் அமைச்சரான அனுரா பண்டாராநாயக்க மிகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் வார இதழ் ஓன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்:

இரண்டு பிரதான கட்சிகளின் ஐக்கியம் இல்லாமல் இந்த நாட்டைப் பாதுகாக்க முடியாது. இரண்டு பிரதான கட்சிகளிடையேயான ஒப்பந்தத்தை பாழடித்தது ஒரு தேசியக் குற்றமாகும்.

50 வாக்குகள் கூட வாங்க முடியாத டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை வைத்துக் கொண்டு நம்மால் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

நாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கொழும்பிலிருந்து பெரிதாக பேசிக் கொண்டிருப்பதால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. வடக்கு - கிழக்கை மீள இணைக்க வேண்டும் என்றும் முழுமையான அதிகாரப் பகிர்வையும் விடுதலைப் புலிகள் கோருகின்றனர். இணைப்பாட்சி என்ற பெயரில் சிலருக்கு ஒவ்வாமை உள்ளது. இணைப்பாட்சிக்கு மாற்றாக 100 பெயரை வைத்துக் கொள்ளுங்கள். இருந்தபோதும் அரசாங்கம் அதற்கு முதலில் தயாராக இல்லை. எத்தனை முறைதான் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று நாமும் கூறுவது? யுத்தத்தினாலோ அல்லது அது போன்ற நடவடிக்கை ஒன்றினாலோ நம்மால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.

யுத்தத்தின் வழியே தேசிய இனச் சிக்கல்களுக்குத் தீர்வை எந்த ஒரு நாடும் கண்டதில்லை. யுத்தத்தின் விளைவால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து, இராணுவத்தினரின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு அவர்களது குடும்பங்கள் பாழடைந்து, மக்களின் வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்து இந்த நாட்டை எதிர்காலத்தில் இருட்டில் தள்ளப் போகிறோம்.

வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருப்பது என்பது உண்மைதான். வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாமல் கிராம மக்கள் எப்படி தீயை எரிப்போம் என்று கேட்கின்றனர். ஒவ்வொருவருமே அரசாங்கத்தை குறை கூறுகின்றனர். மண்ணெண்ணெய் விலை உயர்வினால் ஏழை மக்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்குள்ளாகி உள்ளனர். மக்கள் தற்போது யுத்தத்தைப் பற்றி பேசவில்லை. தங்களது வாழ்க்கைச் செலவினம் குறித்து கவலைப்படுகின்றனர். நாம் இந்த நாட்டை நேசிப்பது உண்மையானால் மேலதிக அதிகாரப் பகிர்வுடன் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் வடக்கு - கிழக்கை இணைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

குடும்பிமலை கொண்டாட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி.யினர் புறக்கணித்துள்ளனர். ஹக்கீம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் அவர் அதனை பின்னர் விமர்சித்தார். இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய நாடுகள் அந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. அது நமக்குப் பாரிய பின்னடைவு.

அனைத்துலக அரசியல்ல் நாம் எறும்புகளாக இருந்துகொண்டு பெரிதாகப் பேசுகின்றோம். ஒரு அமைச்சர் யேர்மனியை அச்சுறுத்துகிறார். ஆனால் யேர்மனியோ 26 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளது. உலக பொருளாதார வல்லமையில் 3 ஆவது நாடு அது. அவர்களால் வழங்கப்படும் நிதியினை நாம் சார்ந்திருக்கிறோம்.

இந்த நாட்டின் இரண்டாவது சக்தியாக வருவதற்கு ஜே.வி.பி. மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுமே உபயோகமற்றவை. கடந்த காலங்களில் அவர்கள் பெற்றிருந்ததை இழந்து விட்டனர். சுதந்திரக் கட்சியினருடன் இணைந்துக்கொண்டதால் அமைச்சர்களையும் 40 நாடாளுமன்ற ஆசனங்களையும் ஜே.வி.பி. பெற்றது. அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதது இது. ஆனால் மக்கள் இப்போது ஜே.வி.பி.யின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் மக்களிடம் சொல்வது ஒன்று. ஆனால் செய்வது வேறு. ஜே.வி.பி. எனும் அழகிய தாமரை இதழ்கள் இப்போது உதிர்ந்துகொண்டிருக்கின்றன. அதன் காம்பு மட்டும்தான் உள்ளது.

அமெரிக்காவில் மிக அதிக விலை மதிப்புள்ளது சரிஸ்லெர் வாகனம். அந்த வாகனத்தில் செல்கிறார் தர்மதாச பண்டா. பசியால் வாடும் மொனறாகல மக்களுக்கு மட்டும் இது தெரிந்தால் அதனை தூள் தூளாக்கி நொறுக்கிவிடுவர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவிய பின்னர் இத்தகைய வாகனத்தை வாங்கிக் கொண்டால் யார் சகிப்பது? அந்த வாகனத்தில் அவர் வந்தபோது நான்கூட அதிர்ந்து போனேன்.

அமைச்சர் மேர்வின் சில்வா மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் நல்ல மனிதர்தான். ஆனால் தவறுகளைச் செய்ய அவருக்கு உரிமை இல்லை.

மாவிலாறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை மோசடி செய்ததாக அமைச்சர் சந்திரசேன மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

செவனகல சீனி ஆலையிலிருந்து 50 மில்லியன் ரூபாயை மோசடி செய்ய முயற்சித்ததாக அமைச்சர் ஜகத் புஸ்பகுமார மீது குற்றச்சாட்டுள்ளது. இவைகள் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ள்ளன என்றார் அவர்.

puthinam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி அனுராவுக்கு இப்ப என்ன நடந்தது?இல்லாட்டி மனுசன் இவ்வளவு காலமும் கோமாவிலை இருந்தவரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.