Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் கூலிக்கு ஆள் வைத்துத் தனது தந்தையை கொலை செய்த மகன் மற்றும் கொலையாளி கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் கூலிக்கு ஆள் வைத்துத் தனது தந்தையை கொலை செய்த மகன் மற்றும் கொலையாளி கைது!

AdminMarch 19, 2022
http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/Father-Murder-Son-Murderer-Arrested-1024x576.jpg

மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் தனது தந்தையைக் கொலைசெய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து  கூலிக்கு ஆள் வைத்து வெட்டிக் கொலைசெய்த 21 வயதுடைய கூலிக்காரன் மற்றும் கொல்லப்பட்டவரின் 22 வயதுடைய மகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கடந்த (17.03.2021) வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த  13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளாண்மைக் காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த விவசாயிக்கு 3 பெண் பிள்ளைகளும் 22 வயதுடைய ஓர் ஆண் பிள்ளையுமாக 4 பிள்ளைகள் உள்ளனர். மாட்டுப்பட்டிக்கு சொந்தக்காரரான இவர் விவசாயமும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் இவரின் 22 வயதுடைய சிந்துஜன் எனும் மகன் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதனால் மதுபானம் வாங்கத் தந்தையிடம் பணம் கேட்பது மற்றும் தனது மாட்டுப்பட்டியிலுள்ள மாடுகளைத் திருடி விற்பது போன்ற நடவடிக்கையால் தந்தைக்கும் இவருக்கும் இடையே  தொடர்ந்து தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து சிந்துஜன், கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இட்ணராஜா நிரோசன் என்பவனை கடந்த முதலம் திகதி (01-03-2022) சந்தித்துத் தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக அவனிடம் பேரம் பேசியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவனிடம் தொலைபேசியில் பலமுறை தொடர்புகொண்டு தந்தை கொலை தொடர்பாக வினவி வந்துள்ளான்.

இதன் பின்னர் கொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டது.

கடந்த மார்ச் 12ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் படுகொலை செய்யப்பட்ட பரசுராமன், அவரது வேளாண்மை காவலுக்காக வயலில் உள்ள கொட்டகைக்குத் தனிமையில் சென்று காவலில் ஈடுபட்டுள்ளார்.

பரசுராமன் தனிமையில் சென்றிருப்பதை அறிந்த கூலிக்கு கொலை செய்ய அமர்த்தப்பட்ட இரட்ணராஜா நிரோசன் அந்தக் கொட்டகைக்குச் சென்றுள்ளான். மகனின் நண்பனான  நிரோசனைக் கண்ட பரசுராமன், அவனுடன் பேசிக் கொண்டு அவனுக்கும்  இரவு உணவைப் பகிர்ந்து கொடுத்து இருவரும் சேர்ந்து உண்டுள்ளனர். 

பின்னர் அங்கிருந்த கச்சானை வறுத்து இருவரும் சாப்பிட்டு நள்ளிரவு கடந்து ஒரு மணியளவில்  நித்திரையாகியுள்ளான். அதன் பின்னர் பரசுராமனும் நித்திரையாகியுள்ள நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் கொலை செய்யச் சென்ற நிரோசன் கண்விழித்துப் பார்த்தபோது பரசுராமன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டு அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவரின் தலையில் போட்டுள்ளான். இதில் அவர்  உயிரிழக்காததையடுத்து, அவன் கொண்டு சென்ற கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளான். அப்போதும் அவருக்கு உயிர் போகவில்லை.

அதனைத் தொடர்ந்து தனது இடுப்பிலுள்ள நாடா ஒன்றை எடுத்து அவரின் கழுத்தை சுற்றி இழுத்து நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். அங்கிருந்து தப்பி அதிகாலை 4.00 மணியவில் தனது நண்பனான சிந்துஜனிடம் கையடக்கத் தொலைபேசி ஊடாக  விடயத்தை தெரிவித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளான். 

தந்தையைக் கொலை செய்யப் பேரம் பேசியவாறு பணத்தை கொடுப்பதற்காக தனது நண்பனைத் தேடி  14ஆம் திகதி திங்கட்கிழமை கிரான் பகுதிக்குச் சென்று சந்தித்துப் பேசிக்கொண்டு பின்னர் இருவரும் மோட்டார்சைக்கிளில்  அங்கிருந்து வந்தாறுமூலைப் பகுதியிலுள்ள  நகைக்கடை ஒன்றின் முன்னால் நண்பனை நிற்குமாறு தெரிவித்து நகைக்கடைக்குச் சென்று அங்கு தங்க ஆபரணம் ஒன்றை ஈடுவைத்து 50 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனை கொலை செய்த நண்பனிடம் வழங்கியுள்ளான்.

பேரம் பேசிய பணத்தைப் பெற்ற நிரோசன் அங்கு ஏற்கனவே நகைக்கடை ஒன்றில் 23 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்த  நகையை ஈட்டில் இருந்து மீட்டுக் கொண்டு அங்கிருந்து இருவரும் பிரிந்து சென்றுள்ளதாகக் கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் பொலிசார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் நாடா, கல் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இந்தக் கொலை தொடர்பாக முதலில் கொலை செய்யப்பட்டவரின் மகனைக் கைதுசெய்து விசாரணையில் கொலையாளியான கிரானைச் சேர்ந்த நித்தி என்கிற நிரோசனைக் கைதுசெய்துள்ளதாகவும் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கரடியனாறு காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

http://www.errimalai.com/?p=72209

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.