Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு இருபது ஆண்டுகள் தற்போதைய நிலை என்ன?

Featured Replies

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு இருபது ஆண்டுகள் தற்போதைய நிலை என்ன?

[29 - July - 2007] [Font Size - A - A - A]

-கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்-

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி அப்பொழுது இந்தியப் பிரதமராயிருந்த ராஜீவ்காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோருக்கிடையில் இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இன்று இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், நிச்சயமாகப் புலப்படுவது யாதெனில், அது தோல்வியடைந்த ஒரு உடன்படிக்கை என்பதாகும். உள்ளூரில் சிலர் இன்னும் இவ்வுடன்படிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளது போல் நடந்துகொண்ட போதிலும் உண்மை என்னவெனில்,அது செயல் இழந்துவிட்ட ஒரு ஆவணம் என்பதாகும். எனவே, ஒப்பந்தத்தின் இருபதாவது ஆண்டு நிறைவில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லாத போதிலும், அதன் தாக்கத்தையும் அது விட்டுச் சென்றுள்ள கேள்விகளையும் அதன் பின்னணியில் இன்று இலங்கையில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் ஆராய்வது பயனுடையதாகும்.

அவ்வகையில், இக்கட்டுரையின் நோக்கம் என்னவெனில், ஒப்பந்தத்தின் பின்னணியில் வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்ப்பதுடன், இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள முற்படுவதாகும்.

ஒப்பந்தம்

இவ்வுடன்படிக்கை இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், கைச்சாத்திடப்பட்டது எனப் பொதுவாகக் கூறப்பட்ட போதும், அதன் பின்னணியில் நிச்சயமான இரண்டு நோக்கங்கள் காணப்பட்டன. அவற்றில் ஒன்று நிச்சயமாக 1983 ஆம் ஆண்டின் பின்னர் மிக மோசமான முறையில் அதிகரித்துச் சென்ற வன்முறை மட்டத்தை நிர்வகித்துக் கொள்வதாகும். இந்தியாவின் கோணத்தில் இருந்து நோக்குகையில் இ வதிகரித்துச் செல்லும் வன்முறையின் காரணமாக இரண்டு பிரதான பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. ஒன்று இங்கிருந்து தமிழ் நாடு நோக்கிச் செல்லும் அகதிகளின் தொகை பெரிதும் அதிகரித்திருந்தது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் ஒருவித பதற்றம் ஏற்படத் தொடங்கியிருந்தது. அது விரும்பத்தக்கதொன்றாக இருக்கவில்லை. இரண்டாவது இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நெருக்கடி பிராந்தியத்தில் இந்தியாவின் தலைமைத்துவ அந்தஸ்து மற்றும் அபிலாஷைகள் போன்றவற்றைப் பாதிப்பதாக அமைந்திருந்தது. எனவே, வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தேவை இந்தியாவுக்கு காணப்பட்டிருந்தது.

நோக்கம் என்ற வகையில், இரண்டாவது காரணி இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்வதாகும். 1980 ஆம் ஆண்டுகளின் பிராந்திய அரசியல் கெடுபிடி யுத்த யதார்த்தங்களினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இக்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மேற்கு நோக்கி, அதிலும் குறிப்பாக அமெரிக்கா நோக்கி சாயத் தொடங்கி இருந்தமை இந்திய நலன்களுக்கு உகந்ததாக இருக்கவில்லை. உண்மையில் குறிப்பாக, ஜெயவர்தனாவின் போக்கு இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார நலன்களுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்திருந்தது. எனவே, இவ்வச்சுறுத்தலை தணிக்கும் நோக்கில் பயன்படுத்தப்படக்கூடிய நிச்சயமான, இலகுவான ஒரு காரணிகயாக இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையும் தமிழ் ஆயுதக் குழுக்களும் காணப்பட்டிருந்தன.

எனவேதான், ஒப்பந்தத்துடன், இணைந்த வகையில் இலங்கையில் காணப்படுகின்ற துறைமுகங்கள், ஒலிபரப்பு வசதிகள், மற்றும் இராணுவ நலன்கள் இந்தியாவிற்கு விரோதமான சக்திகளினாலோ அல்லது இந்தியாவிற்கு விரோதமாகவோ பயன்படுத்தப்படக்கூடாது என்ற வகையிலான சரத்துகள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மட்டுமல்ல, டில்லியும் குழிதோண்டி புதைத்து விட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை

[29 - July - 2007]

இலங்கை - இந்திய உடன்படிக்கை இன்று நடைமுறையில் இல்லை. இரு நாட்டு அரசாங்கங்களும் இதற்கு உயிரோட்டம் அளிக்க விரும்பவில்லை. ஆயினும் இந்த உடன்படிக்கையிலுள்ள சில அடிப்படையான விடயங்கள் தற்போதும் உந்து சக்தியாக விளங்குகின்றன என்று புதுடில்லியின் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிபுணர் எஸ்.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

கடுமையான வன்முறைகள் , ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் கொழும்பில் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைகின்றன.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தருணத்தில் இந்தியாவிற்கு கிடைத்த பாரிய இராஜதந்திர வெற்றியென வர்ணிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்தே இலங்கையின் குழப்பம் நிறைந்த வரலாற்றில் இலங்கையானது பல்மத, பல்லின, பல்மொழி சமூக நாடு என்பதற்கான உத்தியோகபூர்வமான அங்கீகாரம் கிட்டியது.

அரசியலமைப்பு ரீதியாகவும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு மாகாண சபைகள் வடிவத்தில் நீதி, சிவில் பொலிஸ் சேவைகளை உள்ளடக்கிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தமிழ், நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டதுடன் வடக்கு, கிழக்குப் பகுதி தமிழ்மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதும் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் தமிழ் பகுதிகளில் அரச அனுசரணையுடனான குடியேற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்த உடன்படிக்கையை ஜயவர்தனா அரசாங்கத்திலிருந்த ஒருபகுதியினர் விரும்பவில்லை. அத்துடன் அச்சமயம் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி.போன்ற கடும்போக்கு கட்சிகளும் தீவிரமாக எதிர்த்தன. அதன்பின் போர் மூண்டது. இந்தியப் படை திரும்பிச் சென்றது. பல ஆண்டுகள் கழிந்தும் தற்போதும் மோதல் உக்கிரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இலங்கையின் நிலைவரம் தொடர்பாக சர்வதேச சமூகம் கடும் கவலையும், விசனமும் அடைந்திருக்கும் நிலையில் இலங்கை- இந்திய உடன்படிக்கை இப்போதும் பொருத்தமானதாக இருக்கின்றதா என்ற கேள்விக்கு அதிகாரப் பகிர்வு விடயத்தில் இலங்கை - இந்திய உடன்படிக்கையானது ஒரு தொடக்கி வைக்கும் அம்சமாக இருப்பதாக எஸ்.சகாதேவன் குறிப்பிடுகிறார்.

சட்டரீதியாக அரசியல் ரீதியாக உடன்படிக்கையானது முக்கியத்துவத்தை இழந்துவிட்ட போதிலும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் இது ஆரம்பித்து வைக்கக் கூடிய விடயமாக உள்ளதாக அவர் கூறியதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த உடன்படிக்கையானது இனமோதலுக்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான நியாயமானதும் விரிவானதுமான நிறுவனரீதியான கட்டமைப்பைத் தருகிறது என்று பிரிட்டனில் வெளியாகும் தமிழ் ரைம்ஸின் ஆசிரியர் பி.இராஜநாயகம் தெரிவித்துள்ளார்.

பலதசாப்த காலமாக தீர்வு காணப்படாமலிருந்து தமிழ் மக்களின் துன்பங்களுக்கு கணிசமான அளவு தீர்வு காணக்கூடியதாக இந்த உடன்படிக்கை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையைத் தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கை விவகாரங்கள் தொடர்பான மற்றொரு நிபுணரான வி.சூரிய நாராயணா கருத்துத் தெரிவிக்கையில், தீவிரமான முறையில் முறையாக அமுல் படுத்தப்படாமையாலேயே உடன்படிக்கை சீர் குலைந்தது என்று தெரிவித்திருப்பதுடன் உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை வழங்குவதைக் கூட விருப்பமின்றி இலங்கை அரசாங்கம் இருப்பதே இன்றைய துன்பியல் விடயம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இரு நாட்டு அரசாங்கங்களுமே உடன்படிக்கையை குழிதோண்டிப் புதைத்துவிட்டன. இலங்கை மட்டுமல்லாமல் இந்தியாவுமே இதனை ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை. நீங்கள் அதனை மறந்து விட்டால் அதனை நினைவில் வைத்திருக்க வேண்டுமென ஒருபோதுமே விரும்பாத மற்றைய தரப்பு எப்படி அதனை ஞாபகத்தில் வைத்திருக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? என்று சகாதேவன் கேள்வி எழுப்புகிறார்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமளும் புதைச்சு 20 வருசமா போச்சு இப்பவும் உது பற்றி எதுக்கு ஆராச்சி? :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.