Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோரின் கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியமானவை அல்ல - பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோரின் கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியமானவை அல்ல - பீரிஸ்

(நா.தனுஜா)

 

 

பொதுமக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கோ, தனியொரு அரசியல் கட்சிக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரானது அல்ல. நாட்டில் நடைமுறையிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கும் எதிராகவே அவர்கள் போராடுகின்றார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரமன்றி, அரசியல் நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாட்டின் நிலைவரம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

தற்போது நாட்டுமக்கள் முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான நெருக்கடிகள் மற்றும் மின்விநியோகத்தடை, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக அந்நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதாக வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மின்விநியோகம் துண்டிக்கப்படுவதன் காரணமாக பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் எதிர்மறையான விளைவுகள் மக்களின் துன்பத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு மக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்புப்போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அந்த ஆற்றமையின் விளைவு என்றும், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினால் அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோரில் 80 - 85 சதவீதமானோர் அடிப்படைவாதிகளோ அல்லது அரசியல் ரீதியில் வலுவூட்டப்பட்டவர்களோ இல்லை என்றும் குறிப்பிட்டார். 

அதுமாத்திரமன்றி இலங்கை அரசியலமைப்பின் 14 ஆவது சரத்தின் பிரகாரம் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகிய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமை என்பது இலங்கையில் இயங்குநிலையில் ஜனநாயகம் உள்ளது என்பதற்கான ஓர் குறிகாட்டியாகும் என்றும் தெரிவித்தார்.

1img-1-600x356.jpeg

அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இல்லங்களுக்கு வெளியே இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்த ஜீ.எல்.பீரிஸ், அவற்றின் தீவிரத்தன்மை குறித்து அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றக்கட்டமைப்பிற்கு எதிரான கண்டனத்தையும் அதன்மீதான எதிர்ப்பையும் வெளிக்காட்டியதுடன், ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்துகின்றார்கள் என்று இராஜதந்திரிகளிடம் தெரிவித்ததுடன் வெளிநாடுகள் மற்றும் சர்வதேசக்கட்டமைப்புக்களின் உதவியுடன் இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கோ, தனியொரு அரசியல் கட்சிக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரானது அல்ல என்றும் நாட்டில் நடைமுறையிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கும் எதிரானது என்றும் அவர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

'ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியமானவை அல்ல என்பதுடன் அவர்கள் அரசியலமைப்பிற்கு அமைவாக வழங்கப்படக்கூடிய தீர்வுகளில் ஒன்றைக் கோருவதாகத் தெரியவில்லை. சமையல் எரிவாயு, எரிபொருள், அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் மின்விநியோகத்துண்டிப்பு ஆகியவற்றின்மீது காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் அவதானம் தற்போது வேறுபக்கம் திரும்பியிருக்கின்றது.

 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் உரியவாறான கணக்காய்வு மேற்கொள்ளப்படும்வரை அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவைப் பெறுவதற்கு சிலர் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார்கள். 

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளிலிருந்து விலகி, கல்வித்துறை மற்றும் ஏனைய தொழிற்துறைசார் நிபுணர்களும் நாட்டை ஆட்சி செய்வதற்கு இடமளிக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்பதுடன் உலகின் எந்தவொரு நாடும் அவ்வாறான வழிமுறையில் நிர்வகிக்கப்படவில்லை' என்று ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தபோது குறிப்பிட்டார்.

அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி ஜனாதிபதி இராஜினாமா செய்யும் பட்சத்தில், அடுத்த 60 நாட்களுக்கு அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளமுடியும் என்றும் அதன் பின்னர் தேர்தல் நடைபெறும் காலம்வரை நாட்டை நிர்வகிப்பதற்கு ஏற்ற ஜனாதிபதியொருவரைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யமுடியும் என்றும் பீரிஸ் எடுத்துரைத்தார். அதுமாத்திரமன்றி அரசியலமைப்பின் ஊடாக அரசாங்கத்தைப் பதவி விலக்குவதற்கான ஏனைய வாய்ப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது. 
 

https://www.virakesari.lk/article/125563

 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தபோது குறிப்பிட்டார்.

வெளிநாட்டு இராசதந்திரிகள் எவருமே விளக்கம் இல்லாதவர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு விளக்கம்தந்த ஒரே ஒரு இராசதந்திரி, அதுவும் சிறீலங்கா அரசின் மந்திரி யீ.எல்.பீரிசு மட்டுமே.🤗  

சூரிய மண்டலத்தில் உள்ள சனி பகவான் எந்த ராசியில் அமர்ந்திருக்கிறாரோ அந்த ராசிக்கு முன் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும் என்று சோதிட விதி சொல்கிறது. அப்படியானால் இங்கு பூமண்டலத்தின் சிறீலங்காவில் உள்ள சனி எந்த ராசியில் அமர்ப் போகிறதோ.🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

வெளிநாட்டு இராசதந்திரிகள் எவருமே விளக்கம் இல்லாதவர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு விளக்கம்தந்த ஒரே ஒரு இராசதந்திரி, அதுவும் சிறீலங்கா அரசின் மந்திரி யீ.எல்.பீரிசு மட்டுமே.

 

7 hours ago, கிருபன் said:

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளிலிருந்து விலகி, கல்வித்துறை மற்றும் ஏனைய தொழிற்துறைசார் நிபுணர்களும் நாட்டை ஆட்சி செய்வதற்கு இடமளிக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்பதுடன் உலகின் எந்தவொரு நாடும் அவ்வாறான வழிமுறையில் நிர்வகிக்கப்படவில்லை'

 

7 hours ago, கிருபன் said:

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் உரியவாறான கணக்காய்வு மேற்கொள்ளப்படும்வரை அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவைப் பெறுவதற்கு சிலர் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார்கள்.

இவர் ஏன் அஞ்சுகிறார்? தனது கல்வியில் சந்தேகமோ? தனது சொத்து விபரம் அது சேர்த்த விதம் பற்றி பயப்படுகிறாரோ? கூடியிருந்தவர்கள் எல்லோருமே சுருட்டிய கூட்டந்தான்! வெளிநாடுகளில் கொண்டுபோய் சேர்த்துவிட துடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

இவர் ஏன் அஞ்சுகிறார்? தனது கல்வியில் சந்தேகமோ? தனது சொத்து விபரம் அது சேர்த்த விதம் பற்றி பயப்படுகிறாரோ? கூடியிருந்தவர்கள் எல்லோருமே சுருட்டிய கூட்டந்தான்! வெளிநாடுகளில் கொண்டுபோய் சேர்த்துவிட துடிக்கிறார்கள்.

சிலரை அதிசிறந்த மேதாவிகள், புத்திசாலிகள் என்று மக்கள் புகழப் புகழ அவர்களுக்கு புத்தி அறளைபெயர்ந்து விடுகிறது.

உதாரணம்: இலங்கையில் யீ.எல்.பீரிசு. தமிழ்நாட்டிலும் ஒருவர் இருந்தார்.🤫

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.