Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5 ஆவது நாளாகவும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்: புதுவருட நிகழ்வுகளும் ஏற்பாடு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம்: புதுவருட நிகழ்வுகளும் ஏற்பாடு

5 ஆவது நாளாகவும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்: புதுவருட நிகழ்வுகளும் ஏற்பாடு.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கொட்டும் மழையிலும் இன்று 5 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணிமுதல் கொழும்பு, காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்றும் கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தது.

இளைஞர், யுவதிகளால் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தொடர் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 5 ஆவது நாளான இன்று புதுவருட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1276435

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says 'MARARDA! என்ன அண்ண... இனம் மறந்து மதம் கடந்து எல்லாரும் போராடுறாங்கள். நீங்கள் பேசாம இருக்கிறீங்கள்..? ARAAIDA! யாழ்ப்பாணீஸ் FB.COM/JAFNESE FB.COM/ இந்த நவம்பர் மாதம் எல்லா இன ஒற்றுமை வண்டவாளமும் வெளியவரும்... கொஞ்சம் பொறுத்திருந்து பார்..'

கார்த்திகை  மாவீரர் தினத்தில்... இவர்களின் குணம் தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'இவருக்கு அனுதாபபட்டு பாராளுமன்றத்தில் பேசி, நீதிமன்றில் வாதாடிய தமிழர்களின் ஏக பிரதிநிதியே இவரின் கதையை பாருங்கள் i தனிநாடு கோரியதாலேயே பொருளாதாரம் அழிந்தது! YOUTUBE.COM ஒரு இனம் தனிநாடு கோரியதாலேயே நாட்டின் பொருளாதாரம் அழிந்தது! ரிஷாட்'

 

 

May be an image of 3 people and text that says 'More videos Mohamed Fairoos 21 Aug 2020 ஒரு இனம் தனிநாடு கோரியதாலேயே நாட்டின் பொருளாதாரம் அழிந்தது! ரிஷாட் LANKASRI Lankasri 4 223.iews 223 Views'

2020´ம் ஆண்டு... ரிஷாட்  பதியுதீன்   பேசியது. 

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்திருந்தாலேயே எத்திப்பிழைக்கலாம். அவர் சொல்வதும் சரியே, போராடாமல் இருந்திருந்தால் தமிழன் முதுகு முறிய உழைக்க இவர்கள் அவன்மேல் சவாரி செய்து, சண்டித்தனம் விட்டு பிடுங்கி பிழைக்க முடியவில்லையே என அவர் பொருமுகிறார். அவனை  முறித்ததன்  பலன் இப்போ அவர்களே தங்களுக்குள் போராடுகிறார்கள், இவர்கள் பக்கமும்  திரும்பியது சிங்களம். இல்லையென்றால் அப்பப்ப அறுவடை திருவிழா கொண்டாடியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு - காலிமுகத்திடலில் 5 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் : புதுவருட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 5 ஆவது நாளான இன்று புதுவருட  நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

NMii0C_5?format=jpg&name=small

இந்நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, போத்தல ஜயந்த, சிவராம், நிமலராஜன், கீத் நொயார் உள்ளடங்கலாக கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி செயலத்திற்கு முன்பாக அவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குறிப்பாக பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் இளைஞர், யுவதிகள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் புதிய சிந்தனைகளுடன் பிறிதொரு பரிமாணத்தைக் கண்டுவருகின்றது.

அந்தவகையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் 'கோட்டா கோ கம'  என்ற பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டது. 

இவ்வாறு கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவிரவாக இன்று 5 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சி போராட்டம் தொடர்கின்றது.
 

https://www.virakesari.lk/article/125734

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.