Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் வாக்களித்திருந்தால் ஈழக் கனவை ரணில் தகர்த்திருப்பார்: ஐ.தே.க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வாக்களித்திருந்தால் ஈழக் கனவை ரணில் தகர்த்திருப்பார்: ஐ.தே.க.

[செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 19:06 ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் அனைத்துலகத்தில் முன்னிலையிலேயே ஈழக் கனவை ரணில் விக்கிரமசிங்க தகர்த்திருப்பார் என்று ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஐ.தே.க. தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

வவுனியாவில் உள்ள நிறுவனம் ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். ஆனால் மகிந்த அரசு இதனை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்காது காலம் கடத்துகின்றது.

கடந்த அரச தலைவர் தேர்தலில் எட்டு லட்சம் தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு விடுதலைப் புலிகள் இடமளிக்கவில்லை. வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் தமிழீழம் என்ற கோரிக்கை உடைந்து போயிருக்கும். தமிழ் மக்கள் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்து விட்டனர் என்று அனைத்துலகத்திடம் கூறியிருக்கலாம்.

ஆனால் அதற்கு இடமளிக்காமல் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கி தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் செய்து எமது திட்டத்தை மகிந்த தடுத்துவிட்டார்.

நாங்கள் கூறும் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்தால் சிங்களப்புலி யார் என்பது தெரியும். எங்களை சிங்களப்புலி என்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது யார்?

இந்த விடயத்தை விசாரணை செய்ய நாடாளுமன்றக் குழு அமைக்கப்படாது விட்டால் அனைத்துலகத்தின் மத்தியில் இந்த பிரச்சினையை எழுப்புவோம்.

குடும்பிமலையிலிருந்து வெலிக்கந்தை உடாக விடுதலைப் புலிகள் தப்பித்த போது அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்த கிழக்கு மாகாண படை அதிகாரிகளுக்கு உத்தரவு சென்று கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளை ஏன் அரசாங்கம் தப்பிக்க விட்டது என்றார் அவர்.

puthinam

அதுதான் உண்மை தேசியத்தலைவரும் தேசத்த்தின் குரலும் என்ன மடையரே அதனால்தான் ராஜதந்திர ரீதியாக ரணிலுக்கு அல்வா குடுத்தவை

இது சம்பந்தமாக தேசத்தின் குரல் லண்டனில் உரையாற்றிய உரையில் சொல்லி இருகிறார்

கேட்டு பாருங்கோ

http://video.google.com/videoplay?docid=6911007866738886883

ரணில் குள்ள நரி ஜே ஆரின் மருமகன் என்பதை தமிழ் மக்கள் எல்லாரும் அறிவர்....

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இருக்கும் சன் தொலைக்காட்சி வைத்திருக்கும் ஒருவர், புலிகள் ஜ.தே.கட்சிக்கு பணம் குடுத்ததினால் தான் தமிழர்களை புலிகள் தேர்தலில் வாக்களிக்கவிடவில்லை என்று சொன்னார். நான் அவருக்கு உங்களுக்கு யார் சொன்னது என்று கேக்க, அதற்கு அவர் சன் தொலைக்காட்சி செய்திகளில் அடிக்கடி இது பற்றிய தகவல்கள் வருகுது என்றார். ஒரு பொய்யை அடிக்கடி சொல்லும் போது சிலர் அச்செய்தியை உண்மை என்றே நம்புகிறார்கள். ஈழத்தமிழர்களின் ஊடகங்களை பார்க்காத ஆதரவு அளிக்காமல் சன் தொலைக்காட்சி பார்ப்பவர்களில் பலருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. சிறிலங்கா அரசுச் செய்திகளை பெரும்பாலும் வெளியிடும் சன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்து தாங்களும் அழிந்து, தெரிந்தவர்களையும் அழிக்க முயல்கிறார்கள். அண்மையில் தமிழக மீனவர்களைக் கடத்தியது விடுதலைப்புலிகள் என்று தமிழைக் கொலை செய்யும் சன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் கடத்தப்பட்ட சிறுவன் ஒருவரின் பேட்டியை மக்களுக்கு வழங்கிய தமிழை நேசிக்கும் மக்கள் தொலைக்காட்சி கடத்தியவர்கள் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையினைச் சொன்னது.

அந்த செய்தி உண்மையாக இருந்தால் கூட ஒரு கல்லில் இரண்டு மாங்காய்தான்!

ஏமாறும் தலைமைகள் இப்போது எம்மிடத்தில் இல்லை. அதுதான் மகிந்தவுக்கும், ரணிலுக்குமுள்ள கொதிப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.