Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயிரத்திற்கும்... மேற்பட்ட, தொழிற்சங்கங்கள்... இன்று, வேலை நிறுத்தப் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச, தோட்ட மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

ஆயிரத்திற்கும்... மேற்பட்ட, தொழிற்சங்கங்கள்... இன்று, வேலை நிறுத்தப் போராட்டம்!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் (UTUMO) அறிவித்துள்ளன.

‘வாக்கெடுப்புக்கு தலைவணங்கும் – அரசாங்கம் வீட்டுக்குச் செல்கிறது’ என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வி, போக்குவரத்து, தோட்டங்கள், துறைமுகங்கள், மின்சாரம், வங்கிகள், தபால் சேவைகள், சமுர்த்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள் உட்பட சகல துறைகளிலும் உள்ள மக்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியொன்றும் நாளை நண்பகல் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் உட்பட பல இடங்களில் இருந்து பேரணியாக சென்று காலி முகத்திடல் மக்கள் போராட்டக்களம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் தாம் தீர்மானிக்கவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்பன (IPPBOA) தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இன்றைய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து சேவைகளிலிருந்தும் விலகுவதற்கு அரச சேவை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (ACTWU) பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1278847

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிப்பு!

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக... இயல்பு நிலை, பாதிப்பு!

அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி  இன்று (வியாழக்கிழமை)  காலை முதல் பல்வேறு தரப்பினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்புநிலை பாதிக்கப்பட்டள்ளதுடன் பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்காத நிலையிலேயே காணப்படுகின்றது.

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய தினம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையினையடைந்துள்ளது.

சில பாடசாலைகளில் உயர்தர பிரிவு மாணவர்கள் வருகைதந்த நிலைமையினை காணமுடிந்தது. பெரும்பாலான பாடசாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் ஆசிரியர்கள் வரவு மிகவும் குறைந்தளவிலேயே காணப்பட்டது.

பிரதேச செயலகங்கள் திறந்திருந்தபோதிலும் உத்தியோகத்தர்கள் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்பட்டதுடன் மக்கள் வரவும் இல்லாத காரணத்தினால் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.இதேபோன்று தபால் திணைக்களங்களங்கள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.

தனியார் மற்றும் அரச போக்குவரத்துச்சேவைகள் வழமைபோன்று சேவைகளில் ஈடுபட்டுவருகின்றதை காணமுடிந்தது.

DSC07504-600x338.jpg

DSC07510-600x338.jpg

https://athavannews.com/2022/1278923

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தொழிற்சங்க பணி புறக்கணிப்பால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு!

யாழில்... தொழிற்சங்க பணி புறக்கணிப்பால், மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி  மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் யாழ்ப்பாண குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக செயலிழந்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகின்றது

பாடசாலைகள் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு புகையிரத சேவை தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்து ள்ளன அத்தோடு யாழ்ப்பாண நகரத்தின் வீதிகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதோடு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

IMG-20220428-WA0014-600x270.jpg

IMG-20220428-WA0026-600x270.jpg

https://athavannews.com/2022/1278933

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

தொழிற்சங்க நடவடிக்கையால், முடங்கியது... மலையகம்

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று ( வியாழக்கிழமை) பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் நிலையில், இதற்கு மலையகத்தில் இருந்தும் முழு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

அரசதுறை, அரசசார்பற்ற தனியார் துறை, பெருந்தோட்டத்துறை, வெகுஜன அமைப்புகள்  உள்ளிட்ட  பல துறைகள் கூட்டாக இணைந்தே இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள், மின்சார சபை தொழிற்சங்கங்கள், சுகாதார  தொழிற்சங்கங்கள், துறைமுக ஊழியர்சார் தொழிற்சங்கங்கள், தபால் துறைசார் தொழிற்சங்கங்கள்,  பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள தொழிற்சங்கங்கள், வங்கிசார் தொழிற்சங்கங்கள் உட்பட மேலும் பல தொழிற்சங்கங்கள், பணி புறக்கணிப்பு  போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

மலையகத்தில் உள்ள பிரதான இரு கட்சிகளான தமிழ்த் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இப்போராட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.

இதற்கமைய தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லவில்லை. வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளை அண்டியுள்ள நகரங்களில் 90 வீதான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.  கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.  ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

அதேபோல சதொச, எரிபொருள் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றின் முன்னால் நீண்ட வரிசை காணப்பட்டது. பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பித்திருந்தது.

இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபட்டன. ஆட்டோ சாரதிகள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

https://athavannews.com/2022/1278976

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: பொது வேலைநிறுத்தத்தால் முடங்கிய சேவைகள் - வீதிகளில் தொடரும் போராட்டம்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழ்
28 ஏப்ரல் 2022, 09:50 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை வேலைநிறுத்தம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, நாட்டில் இன்று பல்வேறு துறையினரால் மிகப்பெரிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தலைநகரில் இயங்கி வந்த வணிக நடவடிக்கைகள் மூடப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற தொழில்துறையினர் இன்றை வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வருகிறார்கள். ஜனாதிபதி மாளிகைக்கு எதிரே உள்ள பிரதான போராட்ட களத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் காணப்படுகிறார்கள்.

அரசு, அரசு சார்பற்ற மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப் புறக்கணிப்பை நடத்தி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதன்படி போக்குவரத்து, மின்சாரம், கல்வி, துறைமுகம், தபால், சமுர்த்தி, வங்கிகள், அபிவிருத்தி அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் கருத்திற்கு தலை சாய்ப்போம் - அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

இலங்கை மக்கள் போராட்டம்

"தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும்"

அரசாங்கம் பதவி விலக தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இன்றைய தினம் முதல் கட்டமாக அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

இலங்கை பொருளாதார நெருக்கடி

''இன்றைக்கு இலங்கை வரலாற்றிலேயே பெரிய தொழிற்சங்க நடவடிக்கை நடக்கிறது. ஆயிரத்திற்கும் மேல் தொழிற்சங்கங்கள் ஒன்றாக சேர்ந்து நாங்கள் எல்லோரும் கோட்டாபய ராஜபக்ஷ அரசு வெளியேறு என்ற கோஷத்தோடு தான் நாங்கள் போறோம். அது தான் முக்கிய காரணம். இலங்கையில் தற்போது வாழ முடியாத அளவு செலவு அதிகரித்துள்ளது. ஆனால், அரசு அதனுடைய இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கான எல்லா செயற்பாடுகளையும் செய்றாங்க. அதனால், தொழிற்சங்க ஒன்றியம் என்ற வகையில் முழு இலங்கையிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை எல்லோரும் இதில் பங்குப்பற்றியிருக்கின்றார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்த நடத்தப்படுகின்ற பாரிய தொழிற்சங்க போராட்டம் தான் இது. இந்த போராட்டத்தையும் பார்த்து அரசு ஒரு தீர்மானம் எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதை தடுக்க இயலாது" என்கிறார் ஜோசப் ஸ்டாலின்.

 

ஏப்ரல் 28, 2022 அன்று கொழும்பில் மூடப்பட்டிருக்கும் ஐந்தாவது குறுக்குத் தெரு மொத்த விற்பனைச் சந்தையில் ஒரு தெருவில் போலீஸ்காரர் நடந்து செல்கிறார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஏப்ரல் 28ஆம் தேதி கொழும்பில் ஆள் அரவமற்று கிடக்கும் மொத்த விற்பனைச் சந்தை வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள ஐந்தாவது குறுக்குத் தெருவில் செல்லும் காவல்துறையினர்

"இது மக்களுக்கான போராட்டம்"

இதற்கிடையே இன்றைய போராட்டம் வெற்றி அளித்துள்ளதா என பிபிசி தமிழ் அவரிடம் வினவியது.

 

இலங்கை மக்கள் போராட்டம்

''உண்மையிலேயே வெற்றிகரமாக உள்ளது. கொழும்பு புகையிரத நிலையத்தை பார்த்தால், ஒரு ரயில் கூட இயக்கப்படவில்லை. அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. ஏ.ஜி ஓபிஸ் மூடி. எல்லா இடங்களும் மூடி. நாங்கள் மக்களோடு சேர்ந்து, நாங்கள் இவ்வளவு நாளும் போராடியது வந்து, எங்கட சம்பளத்தை அதிகரிப்பது, எங்கட சேவை பிரச்னைகள் ஆகியவற்றினாலே போராடினோம். ஆனால் இன்று இந்த போராட்டம் மக்களுக்கான போராட்டம். மக்களோடு இணைந்து செல்லும் போராட்டம். இது மக்கள் போராட்டம். கோட்டாபய அரசாங்கம் இந்த தகவலை பார்த்து வெளியேற வேண்டும். இல்லை என்றால், எங்கட போராட்டம் தீவிரமடையும்" என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

இலங்கை

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, தற்போதைய ஆளும் ஆட்சியாளர்களே காரணம் என தெரிவித்து, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டம் இன்றும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

 

இலங்கை போராட்டம்

இது மாத்திரமன்றி, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கண்டியிலிருந்து ஆரம்பித்த விடுதலைக்கான புரட்சி பேரணி கடந்த 26ம் தேதி கண்டி நகரில் ஆரம்பித்தது.

 

இலங்கை மக்கள் போராட்டம்

இந்த பேரணி கொழும்பை நோக்கி இன்று மூன்றாவது நாளாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

மே மாதம் கடைப்பிடிக்கப்படவுள்ள தொழிலாளர் தினத்தன்று, குறித்த பேரணி கொழும்பு நகரை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில், இன்று ஆயிரக்கணக்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பாரிய பணிப்பகிஷ்கரிப்பொன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொழும்புக்கு இன்று பெரும் எண்ணிக்கையிலானோர் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

கொழும்பில் இன்று பாரிய போராட்டங்களை நடத்தவும் இன்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/sri-lanka-61255576

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.