Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை மனித உரிமை நிலை குறித்து சர்வதேசப் பங்களிப்புடன் கண்காணிப்பு!

Featured Replies

இலங்கை மனித உரிமை நிலை குறித்து சர்வதேசப் பங்களிப்புடன் கண்காணிப்பு!

அமெ.வெளிவிவகாரக் குழுவில் வலியுறுத்தல்

இலங்கையில் மனித உரிமை நிலை குறித்து சர்வதேச மட்டத்திலான பங்களிப்போடு நேரடியாகக் கண்காணிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது.

இவ்வாறு அமெ. வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றக் குழுவின் சுட்டத்தில் அமெரிக்க மூத்த உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

நேற்ற முன் தினம் நடைபெற்ற அமெ. நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் நியூ ஜேர்ஸி மாநில காங். உறுப்பினர் பிராங் பலோன் இப்படி வலியுறுத்தினார்.

'இலங்கையில் புதிதாகத் தீவிரப்படுத்தபட்டிருக்கும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் நூற்றுக் கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கபட்டுள்ளனர். எவ்வித குற்றச்சாட்டுமின்றி ஆட்களை கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் புதிதாகத் தீவிரப்படுத்தப்பட்ட சட்ட விதிகள் பரந்தளவிலான அதிகாரங்களை அரசுக்கு வழங்குகின்றன" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

:'இலங்கை தொடர்பான காங். குழுவின் நிறுவுநராகவும், உப தலைவராகவும நான் இருக்கின்றேன். எனவே, இந்த அடிப்படையில் இலங்கையில் சீர்கேட்டடைந்து வரும் நிலைவரத்தை இங்கு விளக்குகிறேன்." என்ற பீடிகையோடு அவர் தம் உரையை அங்கு ஆரம்பித்துள்ளார்.

அவர் தம் உரையில் பின்வருமாறு விளக்கியும், விவரித்தும் உள்ளார். :-

இலங்கையில் இனப் பிரச்சினை மோசமடைந்து வருகின்றது. இதை நான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். வன்முறைகளிலிருந்து மூன்று லட்சம் சிவிலியன்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றார்கள். மாறாமல் தொடர்ந்து இடம் பெயயர்வுகளையே இவர்கள் மாதக்கணக்காக எதிர் நோக்குகிறார்கள்.

அவசரகாவச் சட்ட விதிகளுக்கு புதிதாக வலுவூட்டப்பட்டுள்ளது. இது குற்றச்சாட்டுகளின்றி எவரையும் கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் பரந்தளவிலான அதிகாரங்களை அரசுக்கு வழங்குகிறது. இதன் கீழ் மேலும் நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படைகள் நூற்றுக்கணக்கான தமிழாகளை கொழும்பிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இலங்கை அரசபடையினரும்,பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளும் இருதசாப்தகால இனப்பிரச்சினைச் சண்டையை மீள ஆரம்பித்துள்ளார்கள். இதன் விளைவான வன்முறைகளில் ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் மடிந்துள்ளனர். உயிரிழப்புகள் மேலும் நீடிக்கின்றன. இரு தரப்புகளும் இராணுவ அணுகு முறையையே தெரிவு செய்துள்ளனர். இந்நிலைப்பாட்டில் சிவிலியன்கள் துன்ப துயரங்களுக்கும், இழப்புகளுக்கும் இலக்காகி வருகிறார்கள்.

இவ்விரு சாரரும் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபாடு கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெட்டத் தெளிவாகின்றது. கடந்த 20 மாத காலத்துக்கு மேலாக ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணமற் போகச் செய்யபட்டடுள்ளனர் என நம்பப்படுகிறது. மற்றும 4,500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்படாத துப்பாக்கிதாரிகளால் கடந்த மாதம் மனித நேய சேவை நிறுவனமொன்றின் இரு ஊழியயர்கள் சுட்டுக் கொல்லபட்டடுள்ளார்கள். அதே வேளை , 10 மாதங்களுக்கு முன்னர் - மரண தண்டனை நிறைவேற்றும் பாணியில் - பட்டினிக்கு எதிரான செயற்பாடுகள் என்ற தொண்டர் நிறுவனத்தைச் சேர்ந்த 17 உள்@ர் ஊழியர்கள் படுகொலை செய்யபட்டுள்ளார்கள்.

மனிதபிமான சேவையாளர்களுக்கு எதிரான படுமோசமான தாக்குதல் இதுவாகும். இதே வேளை, மனித உரிமைகள் துஸ்வபிரயோகங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென அரசால் புதிய அமைப்போன்று நிறுவப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவென அழைக்கப்படுகிறது.

எது எப்படியிருப்பினும் மனித உரிமை மீறல்களுக்கான எத்தனங்களையும் ஏதுக்களையும் குறைக்க அந்த ஆணைக்குழு தவறிவிட்டது. அதே வேளை, சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீனக் குழுவின் சவாலுக்கும் இந்த ஆணைக்குழுவில் நமபத்த் தன்மையும், சக்தியும் இலக்காகியுள்ளன.

தற்போது யுத்தம் மென்மேலும் முனைப்படைந்து வருகின்றது. சண்டையை நிறுத்திவிட்டு, பேச்சு மேசைக்குத் திரும்புமாறு இரு சாராருக்கும் அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகம் மேலும் காத்திரமான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இனப்படுகொலைக்கோ, யுத்தக் குற்றங்களுக்கோ வழி சமைக்கக் கூடிய அளவுக்கு, சமீபத்திய வன்முறைகள் எல்லைதாண்டவில்லை. எனினும், அந்த நிலைமையை எட்டும் அளவுச்கு அட்டூழியங்கள் தலையெடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் தடுப்பதற்கான செயலில் நாம் ஈடுபடவேண்டும்.

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் முயற்சிகள் அதிகரிக்கப்ட வேண்டும். இதற்கு ஆதரவான பிரேரணை ஒன்றை நான் இங்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். சமாதானப் பேச்சுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு, சகல தரப்புகளையும் இது அழுத்தமாக வலியுறுத்துகின்றது.

இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது. தமிழீழ விடுதலைப்புலிகள் தமது அரசியல் அபிலாசைகளின் நிமித்தமான பயங்கரவாதத்தைக் கைவிட்டு விட வேண்டும். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலான பயங்கரவாதத்தால் இலங்கையில் தமிழரின் வாழ்க்கையை வளப்படுத்த இயலவில்லை.

இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். நாடடில் நிரந்தர சமாதானம் கட்டி எழுப்பப்பட வேண்டும். இவற்றை நோக்காக் கொண்ட முயற்சிகளே தேவை. ஆதலால் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளும் பேச்சு வழிக்குத் திரும்ப வேண்டும். இப்படி அமெரிக்க வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.

நன்றி : சுடர் ஒளி

இலங்கையில் மனித உரிமை நிலை குறித்து சர்வதேச மட்டத்திலான பங்களிப்போடு நேரடியாகக்கண்காணிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இவ்வாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றக்குழுவின் கூட்டத்தில் அமெரிக்கக்காங்கிரஸின் மூத்த உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் ;குழுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் நியூ ஜேர்ஸி மாநில காங்கிரஸ் உறுப்பினர் பிராங் பலோன் இப்படி வற்புறுத்தினார்.

சிறிலங்காவில் புதிதாகத் தீவிரப்படுத்தப்பட்டிருக்கு

20 மாதகாலத்தில் 1000 பேர் வரையில் காணமல் போயுள்ளனர் - பிராங் பலோனி

இலங்கையில் கடந்த 20 மாதகாலத்தில் 1000 பேர் வரையில் காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகார குழுவிற்கு அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் பிராங் பலோனி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் வன்முறைகளால் 45000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இலட்சக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளிNறியுள்ளதாகவம் பிராங் பலோனி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கான குழு ஒன்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள போதிலும் அந்த குழுவால் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கம் அமுல் படுத்தும் அவசர கால சட்டமானது பொதும்ககளை காரணம் இன்றி கைது செய்யவும் தடுத்து வைக்கவும் வாய்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேலதிகமான அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.