Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்.

(இன்றைய (மே 11) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, 'தினக்குரல்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டம் நடத்தும் பொதுமக்கள் வன்முறைக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடமளிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், "நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திவரும் அனைத்து குடிமக்களுக்கும் நான் எச்சரிக்கையொன்றை விடுக்கின்றேன். ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

"கட்சி சாரா பிரதமர் தலைமையில் 15 பேர் அடங்கிய சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்"

 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,AFP

 

படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை நெருக்கடி நிலைமைகளுக்கு துரித தீர்வு காணும் வகையில் கட்சி சாராத பிரதமர் ஒருவர் தலைமையில் 15 பேரை உள்ளடக்கிய சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் சிவில் தரப்பின் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழுவை அமைக்கவும் சர்வமதத் தலைவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஓமல்பே சோபித தேரர் தெரிவித்ததாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "முழு நாடும் யுத்தகளமாக மாறியமைக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். போலீசாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை. பொலிஸ் மா அதிபர் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தியுள்ளோம் எனவும் ஓமல்பே சோத தேரர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமதத் தலைவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்தார்.

நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும்.

காலி முகத்திடல் போராட்டம் குறித்து ஜனாதிபதியிடம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினோம். சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் துரிதகரமான விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்" என அவர் தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நாட்டுக்கு சேவையாற்ற தயார்"

 

இலங்கை நெருக்கடி

 

படக்குறிப்பு,

அலரி மாளிகை அருகே வெறிச்சோடியிருக்கும் சாலை.

நாட்டுக்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாக, இலங்கை முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "அனைத்து அரசியல் கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் உரியவாறான செயற்திட்டத்துடன் குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பதவியேற்கும் பட்சத்தில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கத் தக்கவாறான செயற்திட்டத்தை உருவாக்குவதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-61403574

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.