Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசக் கடற்பரப்பில் செல்லும் கப்பல்களை புலிகள் தாக்குவராம் -போகொல்லாகம

Featured Replies

மணிலாவில்வைத்து போகொல்லாகம எச்சரிக்கை!

தமிழீழவிடுதலைப் புலிகள் தமது தாக்குதல்களுக்குப் புதிய விய+கம் அமைத்துள்ளனர். சர்வதேச கடல் வழியாக எரிபொருட்கள் மற்றும் வலுச்சக்தி வளங்கள் என்பனவற்றை ஏற்றிச் செல்லம் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவற்றைக் கொள்ளையிடத் திட்டமிட்டுள்ளனர்.

எனவே, புலிகளின் இத்தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து சர்வதேச கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கடற்பிரதேசப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மணிலாவில் இடம் பெற்ற செய்தியாளா மாநாடு ஒன்றிலே அவர் இப்படிக் கூறியுள்ளார்.

புலிகள் இதுவரை காலமும் தரைமார்க்கமாகவே தமது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். எனினும் எதிர்வரும் காலங்களில் கடல் வழியாக எரிபொருட்களையும் சக்தி வளங்களையும் ஏற்றி வரும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தக் கூடும். எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடல மார்க்கப் பாதுகாப்பில் சக்தி படைத்த நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் இவ்விடயம் தொடர்பாக உளவுத் தகவல்களையும பரிமாற்றம் செய்து கொள்ளவும் இப் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கவும் கூட்டாக இணைந்து செயல்பட முன் வர வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஆசியான் பிராந்திய பாதுகாப்புக் குழுவில் இந்தியாவும் உள்ளடங்குகின்றது. இதில் இலங்கை 27 அங்கத்தவ நாடாக இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கிவரும் இந்தியாவுக்குப் பாராட்டுக்களை தெரிவித்த அமைச்சர், இந்திய தனது கடல் எல்லைப் பிரதேசங்களில் தனது பாதுகாப்பைப் பெரிதும் பலப்படுத்தி உள்ளது எனவும் இதன் பிரதி பலன்களையே நாம் இப்போது எதிர்பார்ககின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

அதே வேளை, இந்தியாவின் புலனாய்வுத் துறையுடன் இணைந்து செயலபடவே இலங்கை விரும்புகின்றது.

பயங்கரவாதிகளின் கைகள் எப்போதும் ஓங்கி நிற்கின்றது. கடல் மார்க்கமான தாக்குதல்களை மேற் கொள்வதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை தம் பக்கம் திருப்பிக் கொள்ளலாம் எனப் புலிகள் நப்பாசை கொண்டுள்ளனர்.

புலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கெய்தா வலையமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில்,கடுமையான கடல் கண்காணிப்பு அவசியம். இந்தியாவும் சீனாவும், இலங்கையும் மற்றும் ஆசிய பிராந்திய அமைப்பு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பலமிக்க ஒரு சக்தியாக அமையும்.

நான் ஒரு தீவுத் தேசத்திலிருந்து வந்துள்ளேன். இதனால் கடல் பாதுகாப்பு அவசியம் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

கடந்த காலங்களில் கடுமையான கடல் கண்காணிப்பில் இலங்கை அக்கறை கொள்ளவில்லை. இதனாலேயே புலிகள் கடற்பரப்பில் தமது பலத்தை ஸ்திரப்படுதிக் கொண்டனர்.

நாம் இப்பொதும் புலிகளுடன் பேச்சு நடத்துவதைக் கைவிட்டு விடவில்லை. எனினும் ,அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். வன்முறையைத் தாங்கள் துறக்கின்றார்கள் என அவர்கள் அறிவிக்க வேண்டும்.

அவர்கள் தாமலாகவே தம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமேயன்றி அவர்களை நம்மால் திருத்த முடியாது. எனறார் அமைச்சர்.

நன்றி : சுடர் ஒளி

அப்ப பல கப்பல்களை தாக்கி அழித்து விட்டு புலிகளின் கப்பல் எண்டு படம் பிடித்து கதை அளக்க கதை வசனம் ரெடி எண்டுறார்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.