Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசக் கருத்து நிலைப்பாடு கொழும்புக்கு எதிராகத் திரும்புகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-06

சர்வதேசக் கருத்து நிலைப்பாடு கொழும்புக்கு எதிராகத் திரும்புகிறது

இராணுவ நடவடிக்கைப் போக்கில் - யுத்த முனைப்பில் - தீவிரமாக இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அழுத்தம் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறாக இறுகி வருவதை அறிய முடிகின்றது. வரும் வாரங்களிலும் மாதங்களிலும் அது இன்னும் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் அந்தப் புறநிலை யதார்த்தத்தை இலங்கை அரசுத் தலைமை புரிந்து கொண்டிருப்பதாக - உணர்ந்துகொண்டிருப்பதாக - தெரியவில்லை.

இலங்கையில் சீர்குலைந்துபோயுள்ள மனித உரிமைகள் விவகாரத்தை அடிப்படையாகச் சுட்டிக்காட்டி, இலங்கைக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் முடக்குவது குறித்து அமெரிக்க செனட்சபை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் இராணுவ உதவிகள் தொடர்பான உத்தேச சட்ட முன்வரைவின் கீழ் இலங்கைக்கான இராணுவ உதவிகளை முடக்கும் பிரேரணையை முன்வைப்பதற்கு அமெரிக்க செனட்சபை தீர்மானித்திருக்கின்றது என்று கூறப்படுகின்றது.

மனித உரிமைகளை மிக மோசமாக மீறி, தனது படைகள் மூலம் அதிகாரங்களை கொடூரமாகத் துஷ்பிரயோகம் செய்துவரும் கொழும்பு நிர்வாகத்தின் போக்கு, சர்வதேசத்தின் மிக ஊன்றிய கவனிப்புக்கும் அதன் மூலம் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கின்றது.

இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யும் - மனித நேய விடயங்கள் மற்றும் நிவாரண ஒருங்கிணைப்புப் பணிகளுக்கான - ஐ. நாவின் கீழ் நிலைச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கையில் மனித நேய நிலைமைகள் குறித்தும் இவ்விவகாரங்களில் அரசின் பங்கு பணி குறித்தும் நேரடியாக ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனையடுத்து, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் ஒக்டோபரிலும் -

சித்திரவதைகள் சம்பந்தமான ஐ. நாவின் விசேட தொடர்பாளர் மான்பிரட் நொவக் நவம்பரிலும் -

உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகள் சம்பந்தமான ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி வோல்டர் கலின் டிசம்பரிலும் -

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இதேசமயம், இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி அதற்காக இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்பாக ஐரோப்பிய ஒன்றியம் வைத்திருக்கும் நகல் பிரேரணை திரும்பவும் அடுத்தமாதம் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கின்றது.

இதற்கிடையில் வழமையாக மனித உரிமை மீறல்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளை மோசமாக விமர்சித்து வரும் 'மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு இப்போது அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை காரமான வார்த்தைகளால் கண்டித்திருக்கின்றது. ""புலிகளின் பயங்கரவாதத்துடன் யுத்தம் புரிகின்ற பெயரில் தமிழினத்தையே அரசு அழித்து வருகின்றது'' - என்ற சாரப்பட அது அரசுத் தரப்பைக் கடுமையாகச் சாடியிருக்கின்றது.

இதையே, 'புலிப்பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதத்தால் எதிர்கொண்டு அழித்தல்' என்ற தந்திரோபாயத் திட்டமாக அரசு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கின்றது என்று இப்பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் நாமே சுட்டிக்காட்டியுள்ளோம்.

இனவெறியும், பேரினவாத அதிகாரத் திமிரும், மேலாதிக்க மமதையும் கண்ணை மறைப்பதால் இலங்கை அரசுத் தலைமைக்கு நீதியும் நியாயமும் புரியவில்லை. தனது படைத்தரப்பின் அட்டூழியங்கள் பெரிய விடயமாக மனதில் படவில்லை. இப் போக்கினால் சர்வதேச எதிர்ப்புணர்வு திரண்டு வருவதை அதனால் உணரமுடியவில்லை.

யதார்த்தம் - மெய்மை நிலை - சர்வதேசத்தின் மனப்பாங்கு - கொழும்புக்குத் தெரியவேயில்லை.

இலங்கைத் தீவில் சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதற்காகக் கொடூர யுத்தத்தை ஏவி விட்டிருக்கும் கொழும்பின் எதேச்சாதிகாரப் போக்குக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் மத்தியில் திரண்டுவரும் கடும் எதிர்ப்பு அலைகளை வெளிப்படுத்தும் ஒரு "ஸாம்பிளாக' - உதாரணமாக - இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பகிரங்க அறிக்கை அமையும் என விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

உரிமைகளுக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்யும் எண்ணம் மஹிந்தரின் அரசுக்கு அடியோடு இல்லை என்பதையும் -

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதை விடுத்து யுத்தத் தீவிரத்தோடு தமிழர்களை அடக்கி, நிரந்தரமாக அடிமைப்படுத்தி, தேசிய ஒடுக்குமுறையை அவர்கள் மீது முழு அளவில் கட்டவிழ்த்து விடுவதே மஹிந்தரின் அரசின் இனவாதத்திட்டம் என்பதையும் -

சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது. இந்தப் பேரினவாதத் திமிர்த்தனத்துக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் இனிமேல் மெல்ல மெல்லக் கட்டவிழ்ந்து கொழும்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

கடலவற்றும் கடல்வற்றும் என்று குடல்வற்றிச் செத்ததாம் கொக்கு என்பார்கள். கடந்த முப்பது வருடமாக தமிழத் தேசிய இனத்திற்கெதிரான அடக்குமுறையையிட்டு; சர்வதேசம் கண்டிக்கிறது, கவலைதெரிவிக்கிறது, இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது, வேறு என்னென்னமோவெல்லாம் செய்கிறது. ஆனால் பதவிக்கு வரும் சிறீலங்கா அரசாங்கங்களோ அசைந்த பாடில்லை. விரைவில் எதிர்பார்க்கப்படும் ரணிலின் அரசுக்கான சர்வதேசத்தி;ன் ஆசீர்வாதங்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. மீண்டும் ஒரு சாண்ஸ் சிங்கள அரசுக்குக் கொடுக்கப்படும். ஜாதிக ஹெல உறுமயவும் ஜேவிபியும் போதிய பலத்துடன் உருவெடுத்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து தீர்வு யோசனைகள் ரணிலால் முன்வைக்கப்படும்போது மிக மூர்க்கத்தனமாக எதிர்க்கத்தான் போகிறார்கள். சர்வதேசத்துக்கு ரணிலின் மீது ஏற்படப்போகும் அனுதாபம் அதிருப்தியாய்மாற தமிழரின் ஆயிரக்கணக்கான உயிர்கள் மீண்டும் காவுகொள்ளப்படவேண்டியிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.