Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பத்திரிகைகள் பற்றிய ரணிலின் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகைகள் பற்றிய ரணிலின் கருத்து

[06 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற டி.ஆர்.விஜேவர்தன ஞாபகார்த்த விருதுகள் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிங்கள, தமிழ் செய்திப் பத்திரிகைகளைப் பற்றித் தெரிவித்த கருத்துகள் எமது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. அவர் எந்தவொரு பத்திரிகையினதும் பெயரைக் குறிப்பிடாமல் பொதுவில் பேசிய காரணத்தினால் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்பான அவரது கருத்துகளுக்கு எமது பிரதிபலிப்பை வெளியிடுவதில் தவறு ஏதும் இருக்க முடியாது என்று நம்புகின்றோம்.

ஐக்கிய இலங்கைக்காக பாடுபடுவதைவிடுத்து நாட்டை பிளவுபடுத்துவதற்கு சிங்களப் பத்திரிகைகள் முயற்சிக்கின்றன என்று குற்றஞ்சாட்டிய எதிர்க் கட்சித் தலைவர் தமிழ் செய்திப் பத்திரிகைகளும் அதேமாதிரியாகவே செயற்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறார். `நாட்டு அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் சிங்களப் பத்திரிகைகள் சிங்கள மக்களுக்கு தகவல்களைக் கொடுக்கின்ற பாணிக்கு முற்றிலும் வேறுபட்ட முறையிலேயே தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பத்திரிகைகள் தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக நாடு பிளவடைவதற்கு வழிவகுக்கப்படுகிறது. ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டால் அல்லது கொலை செய்யப்பட்டால் அவர் ஒரு தமிழராக இருந்துவிட்டால் நாம் அதைப்பற்றிப் பேசுவதில்லை. அல்லது அவரை விடுதலைப் புலிகளின் ஒரு ஆதரவாளராக அல்லது அந்த இயக்கத்தின் உறுப்பினராக காண்பிப்பதற்கே முயற்சிக்கப்படுகிறது. ஆனால், சர்வதேச சமூகம் அவர்களை பத்திரிகையாளர்களாகவே அங்கீகரிக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ எமது ஊடகங்கள் உண்மையிலிருந்து விலகி நிற்கின்றன' என்று விக்கிரமசிங்க தமதுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய முன்னணி அரசியல் தலைவர்கள் மத்தியில் ஊடகத்துறையில் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக எதிர்க் கட்சித் தலைவர் விளங்குகிறார். இலங்கையில் பத்திரிகைத் துறையின் முன்னோடி என்று கூறப்படுகின்ற டி.ஆர்.விஜேவர்தனவின் பேரனான இவரின் தந்தையார் எஸ்மண்ட் விக்கிரமசிங்க லேக்ஹவுஸை நிருவகித்த காலகட்டத்தில் அரசியலில் செலுத்திய ஆதிக்கம் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களில் ஒன்று. லேக்ஹவுஸ் தேசிய மயமாக்கப்பட்ட பின்னரும் கூட, இலங்கையின் பெருமளவு ஊடகங்கள் விக்கிரமசிங்கவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உடமையாகவே இருக்கிறது. 1993 மே தினத்தில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பிரதமரான விக்கிரமசிங்கவிடம் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் எந்தத் துறையில் ஈடுபட்டிருப்பீர்கள் என்று பத்திரிகைப் பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது, `நான் ஒரு பத்திரிகை ஆசிரியராகியிருப்பேன்' என்று அவர் பதிலளித்தது இன்றும் எமக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவ்வாறாக பத்திரிகை உலகின் சூட்சுமங்கள் சகலதையும் இயல்பாகவே தெரிந்துகொண்டவரான எதிர்க் கட்சித் தலைவர் இலங்கையில் சிங்களப் பத்திரிகைகளினதும் தமிழ்ப் பத்திரிகைகளினதும் போக்குகள் குறித்து புதிதாக எதையோ கண்டுபிடித்தவர் போன்று கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சிங்களப் பத்திரிகைகள் சிங்கள மக்களுக்கு தகவல்களைக் கொடுக்கின்ற பாணிக்கு முற்றிலும் வேறுபட்ட முறையிலேயே தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பத்திரிகைகள் தகவல்களை வழங்குகின்றன என்று கூறியிருக்கும் விக்கிரமசிங்க, ஆங்கிலப் பத்திரிகைகள் மக்களுக்கு தகவல்களைக் கொடுக்கின்ற இலட்சணத்தைப் பற்றி என்ன நினைக்கின்றார் என்பதை அன்றைய தனதுரையில் சொல்லத்தவறிவிட்டார் அல்லது தவிர்த்துவிட்டார் போலும். இலங்கை அரசியலில் இன்று மாற்றியமைக்கமுடியாத அளவுக்கு படுமோசமாகத் தீவிரமடைந்திருக்கும் இனப்பிளவுக்கு அரசியல் சமுதாயம் செய்திருக்கும் பாதகமான பங்களிப்புக்கு எந்தளவுக்கும் குறைவில்லாத பங்களிப்பை ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. ஆனால், ஊடகங்கள் அவற்றின் அணுகுமுறைகளை ஒரு வெற்றிடத்தில் வகுத்துக் கொள்வதில்லை. அந்தந்தக்கால கட்டங்களில் நிலவுகின்ற அரசியல் கலாசாரமே ஊடகங்களின் போக்குகளையும் தீர்மானித்து வந்திருக்கின்றது. ஆரோக்கியமற்ற அரசியல் கலாசாரத்துக்கு மத்தியில் நெருக்கடிகள் குறித்து உகந்ததும் செம்மையானதுமான தகவல்களை வெளியிடாத ஊடகங்களின் பிடிக்குள் மக்கள் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் சமாதானத்தை விரும்பிக்கொண்டு அதிகப் பெரும்பான்மையான மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், போருக்கு ஆதரவாக கூச்சலிடுகின்ற சிறிய எண்ணிக்கையிலான அரசியல் சக்திகளின் கருத்துகளுக்கு தென்னிலங்கையின் பெரும்பான்மையான ஊடகங்கள் அதீத முக்கியத்துவத்தைக் கொடுத்து வந்திருக்கின்றன.

இலங்கை எதிர்நோக்குகின்ற பிரதான நெருக்கடியான தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை பெரும்பான்மையான சிங்கள, ஆங்கில ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறைகளை நோக்குகையில், இருவேறு உலகங்கள் அருகருகாக சஞ்சரிப்பதைப் போன்று இருக்கிறது. ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, ஏனைய சமூக, இன மற்றும் மதக்குழுக்களை விகாரமானவையாகக்காட்டுவதற்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.