Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடற்படை முகாமுக்காக காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை முகாமுக்காக காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

கே .குமணன்

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள "கோட்டாபய கடற்படை கப்பல் ' என்னும் கடற்படை முகாமுக்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு இன்று (07) நில அளவை திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

1.png

கடந்த சில வருடங்களாக  வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ள 617 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் நில அளவை திணைக்களத்தினரின் ஒத்துழைப்போடு அளவீடு செய்து காணி சுவீகரிப்புக்கு  கடற்படையினரால் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில்  மக்களின் எதிர்ப்பு போராட்டங்களால் அளவீடு முயற்சிகள்  கைவிடப்பட்டிருந்தது.

IMG_1640.jpg

இந்நிலையில் இன்றையதினம் காலை எட்டுமணிக்கு  காணிகளை சுவீகரிப்பதற்க்காக நில அளவை திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில்  காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு  எதிர்ப்பை வெளியிட்டு நில அளவை திணைக்கள வாகனத்தை கடற்படை முகாமுக்குள் செல்ல விடாது கடற்படை முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  

இதனால் அளவீட்டு முயற்சிகள் தடுக்கப்பட்டது. காணி உரிமையாளர்களில் 15 பேர் தமது காணிகளை கடற்படை முகாம் தேவைக்காக வழங்க முன்வந்திருப்பதாகவும், அதனையே அளவீடு செய்ய வந்திருப்பதாக நில அளவையாளர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெரிவித்ததோடு, காணிகளை வழங்க முன்வந்தவர்கள் என தென்பகுதியை சேர்ந்த மூன்று  காணி உரிமையாளர்களும் அவ்வேளையில் பிரசன்னமாகியிருந்தனர். இருந்த போதிலும் 15 பேர் காணிகளை வழங்க முன்வந்திருப்பதாக நில அளவை அதிகாரி தெரிவித்திருந்த போதிலும் ஏனைய எவரும் அவ்வேளையில் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.

அவ்வாறு 15 பேர் காணி வழங்க முன் வந்திருப்பின் அதே பகுதியில் எமது காணிகளும் கடற்படையதினரால் வேலி போட்டு மறித்து அடைக்கப்பட்டுள்ளது.

எனவே கடற்படைமுகாமுக்கு காணி வழங்க முன்வந்தவர்களுக்கு காணிகளை அளவீடு செய்து வழங்கும் முன் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள எமக்குரிய காணிகளையும் அடையாளப்படுத்தி அளவீடு செய்து எமக்கு வழங்கிவிட்டு கடற்படை முகாமுக்கு  காணி வழங்க முன் வந்தவர்களின் காணிகளை அளவீடு செய்யுமாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நில அளவையாளரிடம் தெரிவித்ததோடு, இதற்கான கோரிக்கை கடிதத்தையும் கையொப்பமிட்டு வழங்கியதையடுத்து நில அளவையாளர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

IMG_1639.jpg

நில அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டம் மேற்கொண்ட போது அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் பொதுமக்களை தள்ளி மற்றும் இழுத்துவிழுத்தி இடையூறுகளை ஏற்படுத்தியதோடு புலனாய்வாளர்கள் , கடற்படையினர் மற்றும் தென்பகுதியிலிருந்து வருகைதந்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்களை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.

IMG_1615.jpg

IMG_1638.jpg

இந்த எதிர்ப்பு போராட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் சிவநேசன் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/129017

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஆமிக்காரருக்கு வருந்தி கண்ணீர் விட்ட சுமந்திரன் என்ன சொல்லுறார்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.