Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 24,000 கிலோ கிராம் அப்பிள், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gite Bleu  Bear Eating GIFs | Tenor  

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 24,000 கிலோ கிராம் அப்பிள், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

 

இறக்குமதிச் செய்த உரிமையாளர்கள், அதனை பெற்றுக் கொள்ளாமையால், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவின் தீர்மானத்துக்கு மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளிடம், அவை இன்று கையளிக்கப்பட்டன.

கொழும்பு சர்வதேச துறைமுகத்தின் சி.அய்.சி.டி பகுதிக்கு, பெப்ரவரி மாதம் சீனாவில் இருந்து குறித்த அப்பிள் கொள்கலன்கள் (கென்டய்னர்கள்) வந்துள்ளனர்.

அந்த அப்பிள் கொள்கலன்களை, இறக்குமதி செய்தவர்கள் இதுவரையில் கொண்டு செல்லாமல் இருப்பது தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே, சி.அய்.சி.டி நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன் பின்னரே, அவற்றை மிருகக்காட்சிசாலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவிக்கின்றார். இறக்குமதிச் செய்யப்பட்டவர்களால், பொருள்கள் கொள்வனவு செய்யப்படவில்லை எனில், அவற்றை வீணாக்காமல், அழிக்காமல், பிரயோசனமான விடங்களுக்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு துறைமுக அதிகாரிகளுக்கு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த கொள்கலன்களில் 24,000 கிலோ கிராம் நிறை கொண்ட அதாவது சுமார் ஒரு இலட்சம் ஆப்பிள்கள் இருப்பதாக சி.அய்.சி.டி நிறுவனத்தின் பிரதானி ஜெக் உவாங் தெரிவிக்கின்றார்.

அந்த அப்பிள் தொகையின் பெறுமதி சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்தவை என துறைமுகத்தின் பணிப்பாளர் பிரபாத் ஜயன்த தெரிவிக்கின்றார்.

இந்த அப்பிள் கொள்கலன்களை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை துறைமுக அதிகார சபையும் சி.அய்.சி.டி நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

அப்பிள் கொள்கலன்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர, துறைமுக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பிரசன்ன ஜயமான்ன உப தலைவர் கயான் அலகியவத்தகே மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஆர்.சி.ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.

https://thinakkural.lk/article/182493

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ இருக்கு?!

  • தமிழ் சிறி changed the title to வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 24,000 கிலோ கிராம் அப்பிள், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.