Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திரத்தில் ஒரு கண்ணீர் துளி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திரத்தில் ஒரு கண்ணீர் துளி!

 

 

 

___________________
ஞானேஷ்வர் தயாள்
___________________

  • இலங்கை பல வருடங்களாக ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு பெருந்தோல்வி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளீர்த்துக்கொள்ளாத அதன் சித்தாந்தமே இதற்குக் காரணம் . சரியான நேரத்தில் இந்தியா பாடம் கற்பது நல்லது.

 

  • இலங்கையின் துயரங்கள் தமிழர்களை அந்நியப்படுத்தவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவும் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் சிங்கள அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. அப்பட்டமான போர்க்குற்றங்களால் தமிழ் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். தமிழர்களின் எதிர்ப்பு இல்லாமல் போனாலும் , இலங்கை அரசின் பிரச்சினைகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன. அதன் பொருளாதாரம் சிதைந்துள்ளது.     

 

இலங்கை கடுமையான குழப்பத்தில் உள்ளது, நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமடைந்து செல்கிறது. பொது மக்கள் வீதிகளில் அலைந்து திரிவதுடன் அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸாரை ஒரே மாதிரியாகக் கருதுகின்றனர். எம்பி.க்களின் பங்களாக்கள் மற்றும் ஆடம்பரமான கார்களை தீயிட்டுக் கொளுத்துதலென அவர்களின் கோபத்திற்கு எல்லையே இல்லை. ஒரு காலத்தில் அவர்களால் ஆரவாரத்துடன் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அதே அரசியல்வாதிகளுக்கு எதிரான பொதுமக்களின் இந்தக் கோபம் புரிந்து கொள்ளத்தக்கது. அத்தியாவசியப் பொருட்கள் சாமானியர்களுக்குக் கட்டுப்படியாகாததாகி விட்டன. அவர்களால் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்கக் கூட முடியாது. ஒரு கிலோ பால் மா விலை 2800 ரூபாவாகும். ஒரு முட்டை விலை 45 ரூபா. வேலை வாய்ப்பின்மை வீதம் அதிகரித்துச் செல்கிறது. சுற்றுலாத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் உணவு தானிய உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது.

a-teardrop-in-the-indian-ocean--300x240.

விடயங்களை முன்னோக்கி வைக்க, 2020ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 3.57 சதவீதமாக இருந்தது. 2019 இல் இருந்து 5.82 சதவீத வீழ்ச்சியாகும். இன்னும் இரண்டு மாதங்களில் 40 சதவீதமாக உயரக்கூடிய பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 29.8 சதவீதத்தை எட்டியிருந்தது. உணவுப் பொருட்களின் விலை வருடத்தில் 46.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கொளுத்தும் வெயிலில் மக்கள் வெளியே வந்து போராடுவதும் பொலிசாரின் தடியடிகள் மற்றும் தோட்டாக்களை தைரியமாக எதிர்கொள்வதும் எளிதல்ல. ஆனால் அவர்கள் கிளர்ச்சி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற அளவிற்கு விடயங்கள் கடந்து விட்டன. பொருளாதார நெருக்கடியாக ஆரம்பித்த விடயம் இப்போது ஒரு முழுமையான தேசிய நெருக்கடியாகியுள்ளது. அவசர கால நிலையால் கூட கட்டுப்படுத்த முடியாது.

தவறான பொருளாதார முகாமைத்துவமே இந்த நெருக்கடிக்கு வழிவகுத்தது என்று பொருளாதார நிபுணர்கள் எம்மை நம்பச் செய்கின்றனர். அரசாங்கம் ஒரே ஒரு துறையை மட்டுமே நம்பியுள்ளது. அது ஓரளவு உண்மைதான். இருந்தபோதிலும், அது எப்போதுமே ஓர் அரசியல் நெருக்கடியாகவே இருந்தது, அது உள்ளீ ர்க்கப்படாத ஓர் அரசியலாகும் . அத்துடன் அதன் சொந்த மக்களுக்கு எதிராக எப்போதும் பாகுபாடு காட்டப்பட்டது. இது பொருளாதார ரீ தியாக தவறான முகாமைத்துவமாக இருந்தாலும் , நாட்டை பெரும்பான்மைவாதத்துடன் நிலைநிறுத்தியதே முக்கிய காரணமென குற்றம் சாட்டப்படுகிறது. இலங்கை என்ன செய்யத் தீர்மானித்ததோ அது போன்ற முடிவுகளைப் பெறுவது உறுதி. இலங்கை அரசியலின் அடையாளமாக இருந்த இந்த ஆபத்தான சித்தாந்தம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு இழுத்துச் செல்கிறது. பௌத்த தேசத்தில் சமாதானம் உச்சத்தில் உள்ளது. அதே விடயம் நம் சொந்த நாட்டிலும் அதிர்வுகளைக் கண்டறிகிறது. இங்கும் காலங்காலமாக வாழ்ந்து வரும் சிறுபான்மையினரின் விழுமியங்கள் மற்றும் தத்துவங்களுக்கு முற்றிலும் புறக்கணிப்பு உள்ளது.

இலங்கையின் துயரங்கள் 1980களில் தமிழர்களை அந்நியப்படுத்தவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவும் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் சிங்கள அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. அப்பட்டமான போர்க்குற்றங்களால் தமிழ் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர் (ஐ.நா. இந்த எண்ணிக்கையை 70,000 எனக் கூறுகிறது). தமிழர்களின் எதிர்ப்பு இல்லாமல் போனாலும் இலங்கை அரசின் பிரச்சினைகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன. அதன் பொருளாதாரம் சிதைந்துள்ளது. சர்வதேச பயணிகள் விலகிச் சென்றுள்ளனர். அதன் சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்துள்ளது. நஷ்டத்தை நல்லதாக்க, இலங்கை சீனாவை நாடி சாய்ந்து சென்றதுடன் மூலோபாய காரணங்களுக்காக அதை நாடிப் பெற்றுக்கொண்டது. ‘தாராளவாதிகளான’ சீனர்கள் தீவு தேசத்தின் மிகப்பெரிய சாபங்களில் ஒன்றாக மாறினர். அதிகாரத்தில் இருந்தவர்கள் சீனர்கள் பணத்தைக் கொண்டு, சொத்துக்கள், சொகுசு கார்கள் வாங்கினார்கள். இதற்கிடையில், கடன்கள் பெருகிக்கொண்டே இருந்ததுடன் அமைதியின்மை வளர்ந்து கொண்டே இருந்தது. பொருளாதாரம் நலிவடைந்து, மக்களின் கஷ்டங்கள் தாங்க முடியாததாகி விட்டது.

பின்னர் அரசாங்கம் ஒரு தூய பௌத்த இராச்சியம் என்ற காலத்தால் நிரூபிக்கப்பட்ட தந்திரத்தை விளையாடியது. பெரும்பான்மை ஆதரவைப் பெற சிறுபான்மையினரைத் துன்புறுத்தத் தொடங்கியது. மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, அது தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கியது; இந்து கோவில்களை அழித்து, அதன் மீது புத்த விகாரைகளைக் கட்டியது. அது ‘ஹலால்’ இறைச்சியைத் தடை செய்தது, போதகர்களைக் கடத்திச் சென்று தாக்கியது. போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை விலக்கீடு இருந்தது; அவர்களுக்கு உயர் அரச பதவிகள் வழங்கப்பட்டன. உயர்ந்த இடங்களில் ஊழல் காளான்களாக வளர்ந்து வரும் நிலையில் இவை அனைத்தும் இடம்பெற்றிருந்தன. முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோதும், தேவாலயங்கள் மீது கல்லெறியப்பட்டபோதும், வெறுப்புணர்ச்சியில் மூழ்கிய மக்கள் வீதி களில் நடனமாடினர். 2019ஆம் ஆண்டு கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க மக்கள் வாக்களித்தனர். போர்க் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், அவர் எதிர்க்கட்சியான தேசியவாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். 2009ல் விடுதலைப் புலிகளுடனான உச்சக்கட்டப் போரின் போது கோத்தபாய மற்றும் மகிந்த ராஜபக்ஷ சகோதரர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தனர். அவர்கள் உள்நாட்டுப் போரில் தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்த போதிலும் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்களாக இருந்தனர். அது தெளிவானதாக இருந்தது.
தவிர, இலங்கை பாராளுமன்றத்தில் சுவாரஷ்யமான நிழல் மல்யுத்தம் நடக்கிறது. சர்ச்சையில் சிக்கியுள்ள சிறிசேனவும் விக்ரமசிங்கவும் தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தத் தவறிவிட்டதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மக்கள் ஒரே ம ரபணுவை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள்; அவர்கள் தங்கள் மதம் மற்றும் மரபுகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். மதத்தின் பெயரால் அவர்களை யாரேனும் கையாண்டால் அவர்கள் அப்பாவிகள்.

உங்கள் பின்புறக் கண்ணாடியில் இதனைப் பாருங்கள்; இலங்கையின் கதை இந்தியக் கதையாக இருக்கலாம். கஷ்டங்கள் பெருகிக்கொண்டிருக்கும் அதே வேளையில், முழுமையான தவறான பொருளாதார முகாமைத்துவம் கஷ்டங்களுக்கு கொண்டு செல்கிறது, மக்கள் இந்து-முஸ்லிம் மோதல்களில் மும்முரமாக உள்ளனர். பணவீக்கம், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்,வெளிநாட்டு நேரடி முதலீடை திரும்பப் பெறுதல் அல்லது ரூபாய் மற்றும் நிகர தேசிய உற்பத்தி வீழ்ச்சி ஆகியவற்றால், நாம் இலங்கையிலிருந்து வெகு தொலைவில் இருக்க முடியாது. தற்போது எவரும் திருப்தியுடன் இல்லை ; பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களென இரு தரப்பினராலும் மருந்து மற்றும் உணவு கூட வாங்க முடியாது!

கவனத்தைத் திசை திருப்புவதற்காக வெளிநாட்டில் எமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த தங்களால் அதிகபட்சம் இயன்றதைச் செய்துகொண்டிருக்கும் ‘விளிம்பு நிலையிலுள்ள சக்திகள்’ எங்களிடம் உள்ளன. மேலும் இது இந்து மறுமலர்ச்சிக்கான தருணம் என்று தங்களைப் பின்பற்றுவோருக்கு அவர்கள் சொல்கிறார்கள். விலைவாசி அதிகரிப்பைப் பற்றியோ அல்லது வேலையில்லாம இருக்கும் உங்கள் மகனைப் பற்றியோ பொருட்படுத்த வேண்டாம். இது ஒரு பெரிய நோக்கத்திற்கான சிறிய தியாகங்கள்![என்ற தொனியில் உள்ளது] இதைக் கண்டுபிடிக்க நீங்கள் ஒரு மேதையாக இருக்க வேண்டியதில்லை: புத்த மதத்தை இந்துத்துவாவாகவும், தமிழர்களுக்குப் பதிலாக முஸ்லிம்களையும் வைத்து நீங்கள் பார்ப்பீர்களேயானால் நாங்கள் கால் பதித்துக்கொண்டிருக்கும் பாதையை நீங்கள் பார்க்க முடியும்.

(எழுத்தாளர் கட்டுரையாளரும் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளருமாவார். அவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் தனிப்பட்டவையென இக்கட்டுரையை பிரசுரித்திருக்கும் ‘த பயனியர் ‘ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.)

https://thinakkural.lk/article/183474

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.