Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரிபொருளை வழங்குமாறு கோரி கொந்தளித்த மக்கள் : கொழும்பில் வீதிகிளை மறித்துப் பெரும் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருளை வழங்குமாறு கோரி கொந்தளித்த மக்கள் : கொழும்பில் வீதிகிளை மறித்துப் பெரும் போராட்டம்

(நா.தனுஜா)

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகத் தோற்றம்பெற்ற எரிபொருள் பிரச்சினை பல வாரங்களாகத் தொடரும் நிலையில்,  இன்று 15 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பின் சில பாகங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்த மக்கள் வீதிகளை மறித்துப் போராட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக பாடசாலைக்குச்செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்குச்செல்லும் ஊழியர்கள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்காகச் செல்பவர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.

 'வாகனங்களுக்கு அவசியமான எரிபொருளுக்குப் பற்றாக்குறை காணப்படுவதைப்போன்று தற்போதைய சூழ்நிலையில் நாட்டுமக்கள் அனைவரும் ஏதோவொரு வகையிலான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.

அவ்வாறிருக்கையில் எரிபொருளைக்கோரி வீதிகளை மறித்து, ஏனைய சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைப்பது எவ்வகையில் நியாயம்?' என்று கேள்வியெழுப்பிய பாதிக்கப்பட்டவர்கள் மக்கள், ஏற்கனவே பிரச்சினைகளுக்குள்ளாகியிருப்பவர்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்காத வகையில் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.

 காலையிலேயே ஆரம்பமான வீதிமறியல் போராட்டம்

 தமது வாகனங்களுக்கு அவசியமான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக 24 மணித்தியாலங்களுக்கும் மேலாகக் காத்திருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் அதனால் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில் 15 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னைய நாள் இரவு மற்றும் அதிகாலையிலிருந்து காத்திருந்த மக்கள் கோபமடைந்து காலை 8 - 9 மணியளவில் எரிபொருளை வழங்குமாறு வலியுறுத்தி வீதிகளை மறித்துப்போராட ஆரம்பித்தனர்.

 கடுமையான போக்குவரத்து நெரிசலும் அமைதியின்மை நிலையும்

அதன்படி தெஹிவளை, பஞ்சிகாவத்தை, முகத்துவாரம் ஆகிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த வீதிகளில் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் காலையிலேயே போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததுடன், அவ்வழியில் செல்லும் பேரூந்து உள்ளிட்ட வாகனங்கள் வேறு வீதிகளுடாக அனுப்பப்பட்டன. மேலும் மற்றுமொரு எரிபொருள் நிரப்புநிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருதானை - புஞ்சி பொரளை சந்தியிலிருந்து ஆனந்தா கல்லூரி வரையான வீதி மூடப்பட்டு, வாகனங்கள் திருப்பியனுப்பப்பட்டன. இதன் காரணமாக நேற்றைய தினம் கொழும்பு - காலி வீதி உள்ளடங்கலாக கொழும்பின் பல பாகங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பதிவானதுடன், அமைதியின்மை நிலையொன்றும் தோற்றம்பெற்றது. அத்தோடு வழமையாக பேரூந்து, முச்சக்கரவண்டி அல்லது தனியார் வாகனங்களில் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் நேற்றைய தினம் புகையிரதத்தைப் பயன்படுத்தியமையினால் அங்கு சனநெரிசல் காணப்பட்டது.

அவசர பயணங்களை முன்னெடுக்க இயலாமல் திண்டாடிய மக்கள்

திடீரென காலை வேளையில் பல பாகங்களிலும் மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த வீதிமறியல் போராட்டத்தினால் மேலும் பல பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இந்தப் போராட்டங்கள் நண்பகல் வரையில் நீடித்ததன் காரணமாகக் குறிப்பாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதிலும், மீண்டும் வீடு திரும்புவதிலும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்ததுடன் தமது பிள்ளைகளின் பாதுகாப்புத் தொடர்பில் பெற்றோர்கள் அச்சமடையும் நிலையேற்பட்டது.

அதேவேளை தனியார் மற்றும் அரச அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்குச் செல்லமுடியாமல் திணறினர். வீதிகள் மறிக்கப்பட்டதன் காரணமாக சொந்த வாகனங்களைப் பயன்படுத்த முடியாமலும், எரிபொருள் இன்மையால் முச்சக்கரவண்டிகளில் செல்லமுடியாமலும், பேரூந்துகள் வழமையாகச்செல்லும் வழி மாற்றப்பட்டமையால் குழப்பமடைந்தும் அவர்கள் அல்லலுற்றனர். மருத்துவசேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வற்கும், மரணச்சடங்கு, திருமணவைபவங்கள் போன்றவற்றுக்கும் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போராட்டம்

அதேவேளை மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள கிழக்குப்பிராந்தியப் பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திற்கு எதிரே உள்ள எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு முன்பாக நேற்றை தினம் பொதுமக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்குக் கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 பொலிஸார் அளித்த உத்தரவாதம்

இந்நிலையில் கொழும்பில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வகையிலேனும் எரிபொருளைப் பெற்றுத்தருவதாக பொலிஸார் வழங்கிய உத்தரவாதத்தையடுத்து, போராட்டக்காரரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 எரிபொருள் நிரப்புநிலையங்களில் 2 - 3 கிலோமீற்றர்களுக்கு வரிசை

இருப்பினும் வழமைபோன்று நேற்றைய தினத்திலும் கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 2 - 3 கிலோமீற்றர் நீளத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தமையினை அவதானிக்கமுடிந்தது. 

 

 

https://www.virakesari.lk/article/129546

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருளினை வழங்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள்

எரிபொருளினை வழங்குமாறு கோரி... நாட்டின் பல பகுதிகளிலும், ஆர்ப்பாட்டங்கள்

எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம்(15) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனிடையே தமக்கான எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே தெமட்டகொட பகுதியில் எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கொழும்பு பேஸ்லைன் வீதியில் இன்று முற்பகல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி காலி வீதி தெஹிவலை பகுதியில் வீதியை மறித்தது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கொழும்பு – பஞ்சிகாவத்தை பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் குருணாகல், வவுனியா, மன்னார், பதுளை, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் எரிபொருள் கோரி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

இதனிடையே எரிபொருள் இன்மையால் ஹட்டனிலிருந்து காலி மற்றும் கொழும்பு நோக்கி செல்லும் பேருந்து சேவைகள் முறையாக முன்னெடுக்கப்படாமையினால் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, பொரலாந்த, கந்தபளை, மாகஸ்தோட்டம், நானுஒயா ஆகிய பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் இடம் பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் 20 வீதமே இன்று சேவையில் ஈடுபட்டதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் தனியார் பேருந்துகளுக்கான டீசல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கான விசேட பேருந்து சேவையை ஆரம்பிக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை மாத்திரம் சாதாரண பேருந்து கட்டணத்தின் கீழ் ஏற்றிச் செல்வதற்காக தனியார் பேருந்துகளை பயன்படுத்தி இந்த விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1287127

  • கருத்துக்கள உறவுகள்

ஹைலெவல் வீதியை மூடி மக்கள் போராட்டம் – போக்குவரத்து தடை

ஹைலெவல் வீதியை மூடி, மக்கள் போராட்டம் – போக்குவரத்து தடை

எரிபொருளை வழங்குமாறுக் கோரி தெல்கந்த சந்தியில் மஹரகம சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியை மூடி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக தெல்கந்த சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக ஹைலெவல் வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1287240

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

ஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபத்திற்கு  ஏற்ற, கருத்தோவியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.