Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு: நிராகரித்த உயர் நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு: நிராகரித்த உயர் நீதிமன்றம்

17 ஜூன் 2022, 05:17 GMT
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்
 

நளினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

நளினி

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த 7 பேரையும் அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்வது என 2018ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து அந்த முடிவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது.

இரண்டரை ஆண்டுகாலம் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருந்த ஆளுநர் பிறகு அதை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார்.

இதை தமிழ்நாடு அரசு ஆட்சேபித்தது.

அத்துடன், பேரறிவாளனும் தம்மை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச்,

ஒரு சிறைவாசியை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை முடிவெடுத்து அதனை பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பிய பிறகு, 161வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை செயல்படுத்தாமல் இருப்பது அல்லது அப்படி செயல்படுத்துவதில் விவரிக்க முடியாத தாமதத்தை ஏற்படுத்துவது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உரியது என்று கூறியதுடன்,

மாநில அமைச்சரவையின் பரிந்துரையை இரண்டரை ஆண்டு காலம் கழித்து குடியரசுத் தலைவருக்கு மாநில ஆளுநர் அனுப்பியிருக்கும் செயலை அரசமைப்புச் சட்டம் ஆதரிக்கவில்லை; அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கும் அது விரோதமாக இருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் கருத்தை ஆளுநர் பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.

 

ராஜிவ் காந்தி

பட மூலாதாரம்,KEYSTONE/GETTY IMAGES

அத்துடன், மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநருக்கே திரும்பி அனுப்புவது பொருத்தமற்றது என்று கூறிய உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக கூறியது.

இந்த தீர்ப்பு பேரறிவாளனை விடுதலை மட்டும் செய்யவில்லை. தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் நடவடிக்கை அல்ல என்பதையும் குறிப்பிட்டது. ஆனாலும், அந்த தீர்மானம் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளது. இந்நிலையில், மேலும் இதே வழக்கில் சிறையில் உள்ள 6 பேரில் நளினி மற்றும் ரவிச்சந்திரன், தங்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகினர்.

உயர் நீதிமன்றம் என்ன சொன்னது?

தங்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், அந்தத் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் கால தாமதம் செய்வதால், சிறையிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென நளினி தரப்பு வாதிட்டது.

இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்திற்கு 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் போல உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவில்லை என்பதால், தாங்கள் விடுவிக்க முடியாது என்று கூறி நளினி மற்றும் ரவிச்சந்திரனின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு துவங்கியபோது, பேரறிவாளன் விடுதலையை முன்வைத்து இந்த வழக்கில் வாதங்களைச் செய்யப் போகிறீர்கள் என்றால், தாங்கள் இந்த வழக்கை விசாரிக்கப்போவதில்லையென்றும், நேரடியாக உச்ச நீதிமன்றத்தையே அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இதனால், இரு வழக்குகளையும் தொடர்புபடுத்தாமல் தனது வாதங்களை முன்வைத்தார் நளினி தரப்பு வழக்கறிஞரான ராதாகிருஷ்ணன். தன்னை விடுவிக்க வேண்டுமென 2014லும் 2018லும் தமிழ்நாடு அரசு முடிவுசெய்த நிலையிலும் தாங்கள் சிறையில் வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று வாதிடப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றம் போல அரசியல் சாஸனத்தின் 142வது பிரிவைப் பயன்படுத்தி விடுவிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அப்படி விடுவிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

https://www.bbc.com/tamil/india-61836834

  • கருத்துக்கள உறவுகள்

நளினியின் விடுதலை வழக்கு: நீதிமன்றம் தீர்ப்பு!

spacer.png
 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரனின் விடுதலை தொடர்பான மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 17) காலை தள்ளுபடி செய்தது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. நளினி, முருகன் , ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆளுநரின் முடிவு வரும் வரை காத்திருக்காமல் 2018ல் தமிழக அமைச்சரவை கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் நளினி தரப்பில், தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் இரண்டரை ஆண்டுகளாக முடிவெடுக்காமலிருந்ததும், அதன் பின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநர் முடிவுக்கு விடக்கூடாது என்று வாதிடப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, ‘விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் போல் உயர் நீதிமன்றத்தால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இவ்விவகாரத்துக்கு உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது. அதில், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதே சமயத்தில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை குறித்து உயர் நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களைத் தொடர்ந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட நளினி மற்றும் ரவிச்சந்திரனின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியதோடு, அரசியல் சாசனம் 142-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று, உயர் நீதிமன்றத்தால் நளினியையும், ரவிச்சந்திரனையும் விடுதலை செய்து உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

 

https://minnambalam.com/politics/2022/06/17/18/rajivi-gandhi-convict-Nalini-release-case-court-order

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.