Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி செயலகத்தின்... அனைத்து நுழைவாயில்களையும் மறித்த, கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் – படையினர் குவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மறித்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் – படையினர் குவிப்பு!

ஜனாதிபதி செயலகத்தின்... அனைத்து நுழைவாயில்களையும் மறித்த, கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் – படையினர் குவிப்பு!

காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக  சுமார் ஆயிரம் பேர் வரையில் கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கோட்டா கோ கமவில் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையிலேயே, ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து மேடைகளை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

protest-2.jpg

protest-3.jpg

https://athavannews.com/2022/1287638

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

"கோட்டா கோ கம"  போராட்டக்காரர்கள்... சிலர் கைது – கூடாரங்கள் அகற்றம்!

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் முற்றுகையிட்டு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

இதேவேளை, நிதி அமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் சிலர் கைது!

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து கூடாரங்கள் அமைத்து, நேற்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

gota-go-gama.png

https://athavannews.com/2022/1287679

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஜனாதிபதியின் பிறந்த தினம் : ஜனாதிபதி செயலக நுழைவாயிலை இடைமறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் பதற்றம் ; 19 பேர் கைது

இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்ததினத்தை முன்னிட்டு கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளது.

287521257_1101897464014479_3208339424977

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் மற்றைய நுழைவாயிலையும் நிதி அமைச்சின் நுழைவாயிலையும் இடைமறித்து கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

288415039_718161572731341_85987237056838

இதையடுத்து குறித்த ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சுமார் இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
 

https://www.virakesari.lk/article/129794

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது!

நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 21 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரும் 4 பெண்களும் 16 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள், நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்துக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் வீதியில் உள்ள இரண்டு நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்விடத்திலிருந்து இன்று காலை அவர்கள் நிதியமைச்சு மற்றும் திறைசேரி ஆகியவற்றுக்கான இரண்டு நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1287753

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.