Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டை... முடக்க, தயாராகின்றது அரசாங்கம்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை முடக்க தயாராகின்றது அரசாங்கம்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாட்டை... முடக்க, தயாராகின்றது அரசாங்கம்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் எனவும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது நாட்டை முடக்கும் நிலை அல்ல எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எந்த நேரத்திலும் முழுமையாக முடங்கும் அபாயத்தில் இலங்கை?

இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தீர்மானம்

புகையிரத சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அறிவிப்பு!

பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படும்

https://athavannews.com/2022/1288738

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

எந்த நேரத்திலும்... முழுமையாக முடங்கும் அபாயத்தில், இலங்கை?

இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதல் ஒன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் தற்போது ஆயிரத்து 100 தொன் பெற்றோல் மற்றும் 7 ஆயிரத்து 500 தொன் டீசல் மட்டுமே உள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை கடனை செலுத்த தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கியிடம் உத்தரவாதம் கோருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் எதுவும் வரவில்லை எனவும், விரைவில் எரிபொருள் கப்பல் வரவில்லையென்றால், பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக முடங்கிவிடும் எனவும் குறித்த நாழிதல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள குறைந்தளவான எரிபொருட்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்ற விடயம் எனவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாததால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2022/1288728

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

இன்று நள்ளிரவு முதல்... அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம், எரிபொருளை விநியோகிப்பதற்கு தீர்மானம்.

நாட்டில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைசார்ந்த வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறுந்தூர போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் பெருமளவு இடைநிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நகரபுற பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கிராமபுற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1288720

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

தொழிலாளி, விவசாயி, குடும்பத்தலைவி,  அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் 
எல்லாரும் மணிக்கணக்காக, வரிசையில் நின்றால்... நாடு முடங்கும் தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

May be a cartoon

தொழிலாளி, விவசாயி, குடும்பத்தலைவி,  அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் 
எல்லாரும் மணிக்கணக்காக, வரிசையில் நின்றால்... நாடு முடங்கும் தானே. 

இன்று எனது நண்பன் மகனை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு ஏற்றி வரும்போது வழியில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் முடிந்து தள்ளிக்கொண்டு நடந்து வந்தவர்களாம், வெயில் சுட்டு மகனுக்கு காய்ச்சல்.
அவருடைய மனைவி தாதியாக பணிபுரிகிறார், வேலை முடிந்து தெல்லிப்பளையில் இருந்து யாழ் சென்று அங்கிருந்து ஊர் வந்து சேர 8.30 மணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.