Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்னலில் ஈழத்தமிழர்: இந்திய அரசு வேடிக்கை பார்க்கலாமா?

Featured Replies

இலங்கை அதிபராக உள்ள ராஜபக்சே போன்ற ஒரு மோசமான இரட்டை வேடதாரியை உலகின் அரசியல் அரங்கு இதுவரை கண்டதே இல்லை!

சிங்கள வெறித்தனத்தின் மறு உருவாகக் காட்சி அளிக்கும் அதிபர் ராஜபக்சே, எத்தகைய கோரத் தாண்டவத்தை (சுநபை டிக கூநசசடிச) கட்டவிழ்த்து விடுகிறார் என்பதற்கு அண்மைக் காலத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்த தமிழர்களை - (அவர்களில் பலரும் அங்கேயே பிறந்து அங்கேயே வாழ்ந்து வரும் குடியுரிமை உள்ள குடிமக்கள்) இராணுவத்தை ஏவிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றிடும் வெறித்தன நடவடிக்கையில் வெட்கம் சிறிதுமின்றி ஈடுபட்டதே சரியான சாட்சியமாகும்.

இலங்கை உச்சநீதிமன்றமும், அந்நாட்டு நாடாளுமன்றமும் (சிங்களர்களையே பெரிதும் கொண்ட அமைப்புகள்) `இது சட்ட விரோதம், நியாய விரோதம், மனித உரிமைப் பறிப்பு, வாழும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என்று ஓங்கி மண்டையில் அடித்த பிறகுதான், அவர்களில் சிலரை வரவழைத்தது ராஜபக்சே அரசு!

இதுகுறித்து பன்னாட்டு அரசுகளும்கூட கவலை தெரிவித்ததோடு, கண்டிக்கவும் தவறவில்லை!

இவருடைய தம்பி ஒருவர் தமிழர்களை அழித்தொழிப்பதே தனது ஒரே பணி என்று ``சங்கநாதம் செய்திடத் தவறவில்லை!

நூயூ 9 திரிகோணமலை நகரில் பேசிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தால் ஒழிய, இலங்கையில் அமைதி திரும்பாது என்றும், அதற்காக சூளுரைப்பதாகவும் பேசியுள்ளார்.

அதேநேரத்தில், நார்வே போன்ற நாடுகளும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; இப்பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச நாடுகள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் மற்றொரு குரலில் பேசிடவும் கூச்சப்படவில்லை!

விடுதலைப்புலிகளுக்கு எதிரான முழக்கம் அல்ல அது. மாறாக, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதிரான பிரகடனம் அது என்றே விவரமறிந்த எவரும் கருதுவர்!

அங்கு விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு இல்லாதிருக்குமானால், இந்நேரம் தமிழர்கள் வாழ்ந்த அந்த மண்ணில் தமிழினம் அழிந்து அந்த பூமியில் புல் பூண்டுகள் முளைத்திருக்குமே!

இந்தியா உள்பட அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், நார்வே, தாய்லாந்து போன்ற பற்பல நாடுகளும் இராணுவ நடவடிக்கை மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது; அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்று சொன்ன அறிவுரையை ராஜபக்சே கேட்கவே தயாரில்லை என்பதுதானே அவரது திரிகோணமலை ``முழக்கத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது - இல்லையா?

கூந யீடநனபந லெ ஆச. சுயதயயீயமளந ளை உடநயச னேஉயவடி வாயவ வாநசந ளை டவைவடந ளஉடியீந கடிச நவைநச நேபடிவயைவடிளே டிச யீநயஉந யவ வாந உரசசநவே தரஉவரசந. ஹள யயேடலளவள நெடநைஎந வாயவ வாந அடைவையசல யனே வாந வபைநசள யசந பநயசநன ரயீ கடிச ய அயதடிச ளாடிறனடிற வாந சூடிசவா வாந உடிஅபே னயலள யனே றநநமள

-கூந ழனேர

தற்போதைய நிலையில் பேச்சுவார்த் தைக்கோ அல்லது சமாதானத்திற்கோ சிறிதும் இடமில்லை என்பதையே ராஜபக்சேயின் முழக்கம் தெளிவாகக் காட்டுகிறது. ஆய்வாளர்கள் கருதுகிறபடி, ஓர் இறுதிப் போராட்டத்துக்கு இலங்கை ராணுவமும் புலிகளும் தயாராகி வருகின்றனர்.

நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறதே! தடுத்து நிறுத்த முன்வர வேண்டாமா?

இந்திய அரசு இதனை கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? அப்படி இருந்தாலோ அல்லது இலங்கை சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ உதவினாலோ அது தமிழின அழிப்புக்குத் துணை போனதாக ஆகிவிடாதா?

சரித்திரப் பழி இந்திய அரசு மீது விழாதா? இந்திய அரசு என்பது தற்போது தமிழ்நாட்டுக் கட்சிகளின் பெருத்த ஆதரவினால் உள்ள அரசு என்பதால் தி.மு.க., காங்கிரசு உள்பட பல கட்சிகளும் அந்தப் பழியை பங்கிட்டுக் கொள்ளவேண்டிய தேவையற்ற ஒரு நிலைக்கு ஆளாகவேண்டியிருக்கும். இது தேவையா?

ஒரு நார்வேக்கும், ஒரு பிரிட்டனுக்கும், ஒரு ஜப்பானுக்கும் இருக்கும் மனிதநேயக் கடமை உணர்வு பிறர் துன்பம் கண்டு இரங்கும் (நுஅயீயவால) உணர்வு இந்தியத் திருநாட்டிற்கு இல்லை என்றால், அதைவிட வெட்கக்கேடு வேறு ஏது? அது நமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தாதா?

அங்கே நடப்பது வெறும் கொரில்லா யுத்தம் அல்ல; வான்வழி, தரைவழி, கடல் வழி நடக்கும் தமிழர் தம் வாழ்வுரிமைக்கான தமிழர் தன்னாட்சி உரிமைப் போர்!

இந்த சுவர் எழுத்தைக் காண மறுத்து தலையைத் திருப்பிக் கொண்டால் பிரச்சினைக்குத் தீர்வு வந்துவிடுமா?

இதை மத்தியில் ஆளும் கூட்டணியாக உள்ள அத்துணைக் கட்சித் தலைவர்களும் மனதில் கொள்ளவேண்டும்.

இதனை வலியுறுத்தி, வரும் 20 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் - மாவட்டத் தலைநகர் களில் ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் இலங்கை அரசினை இந்திய அரசு உள்பட பன்னாட்டு அரசுகளும் தடுத்து நிறுத்தி, மனிதநேயப் பணியில் ஈடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்திட திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது.

அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும், தமிழ் இன உணர்வாளர்களும் இதில் பங்கேற்கத் தவறக்கூடாது.

சென்னையில் எனது தலைமை யில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாவட்டங்களில் இதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் இவ்வார்ப்பாட்டம் நடைபெறும்.

-தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் 'உண்மை' நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்.

வேஷதாரிகளை இன்னும் புரிந்துகொள்ளாமல் தாளம்போடும் நம்மவர்களை (?) என்ன செய்வது!!

இந்திய அரசின் தோற்றப்பாடே அதுதான். யாராவது தலையிடும் போதுதான் தங்கள் மூக்கையும் நுழைப்பார்கள். இந்த விடயங்கள் கைமீறிப் போகும்போது கையைச் சுட்டுக் கொண்டது போல் துடித்துப் போவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.