Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகுழியிலிருந்து வெளியேற என்ன வழி ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படுகுழியிலிருந்து வெளியேற என்ன வழி ?

 

 

 

‘முறைமையில்  ஊழல் பரவலாக உள்ளது என்பது இரகசியமல்ல. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று அரசியல்வாதிகள் குறிப்பிடப்படுகிறார்கள். தற்போதைய நெருக்கடிஉட்பட அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் தரகு  பெறுவது  நன்கு அறியப்பட்டதாகும்.’

 

”அவு ஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் வருகை தந்த அணிக்கு எவ்வாறு  தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள் மற்றும் , அவு ஸ்திரேலிய வீரர்கள்எவ்வாறு  பதிலளித்தார்கள் என்பதை அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்”

00000000000000000000000

கொட்வின் கொன்ஸ்ரன்ரைன்

 
 
எ மது நாடு சீர்குலைந்து  விட்டது. எரிபொருள் விநியோகம் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் கிடைக்கும்மென அரசாங்கத்தின்  பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதனை  எவரும்  குறை சொல்லவும் இல்லை, கவனிக்கவும்  இல்லை.
ரணில் அரசாங்கத்தை பொறுப்பேற்றதும், அவ்வாறு செய்வதற்கு வேறு எவரும்  இல்லாததால், பொருளாதாரத்திற்கு தேவைப்பட்ட  டொலர்களை அவரால்  கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. சிலர் போராட்டத்தை[ அரகலயா] கைவிட்டுஅதற்கு வழங்கிய  ஆதரவை வாபஸ் பெற்றதுடன் படிப்படியாக நிலைமை சீராகும் என்று எதிர்பார்த்தனர்.
எவர்  வந்தாலும் இதே நிலைதான். தலைவர்கள் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் அல்லது அறிவு சார்ந்த பொருளாதாரம் பற்றி விள க்கமா ன  அறிவிப்புகளை மேற்கொள்ளலாம்  ஆனால் இவை எவையும்  குறுகிய காலத்தில் டொ லர்களை கொண்டு வராது.அத்துடன்  மென்  மேலும் கடன் வாங்குவதும்  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகாது. இந்த வருட த்  தொடக்கத்தில் இருந்து கடன் குறைந்தது 10% மாவது உயர்ந்திருக்கும். இப்போது கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
 
உற்பத்தி த்துறை நெருக்கடியில் உள்ளதால், ஏற்றுமதி குறைந்து வருகிறது. குறுகிய காலத்தில் நாம் சார்ந்து இருக்கக்கூடிய இரண்டு வருமான ஆதாரங்கள் மட்டுமே உள்ளன; ஒன்று சுற்றுலா மற்றும் மற்றொன்று வெளிநாட்டில்  தொழில் புரிவோர் அனுப்பும்  பணம் .
பிரதமராகப்  பதவியேற்ற பின்னர் ரணில் ஸ்கை நியூஸ் சேவைக்கு  பேட்டியளித்த போது, இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் செல்வது பாதுகாப்பானதா என்று கேட்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் உற்சாகமாக  பொழுதை  அனுபவிக்க முடியும் என்று அவர் பதிலளித்தார். இது ஒரு பாரதூரமான கேள்வி என நேர்காணல் செய்பவர் சுட்டிக்காட்டியபோது, அதற்கு பதிலளித்த ரணில், “நாங்கள் மக்கள்  வருகை  தருவதற்கு  கொண்டிருக்கும் ஆர்வத்தை குறைக்க வில்லை, ஆனால் அந்நிய செலாவணி பற்றாக்குறை நிலவும் அதேவேளை  , இடம்பெற்று கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் அவர்கள் இலங்கைக்கு வரக்கூடாது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்”. இந்த தருணத்தில்  ஒரு பிரதமர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது இலங்கைக்கு யார்  வருகைதர  விரும்புவார்கள் ? சுற்றுலா வருமானம், மார்ச் மாதத்தில் நாங்கள் சம்பாதித்ததில் அரைவாசியாக , 54 மில்லியன் டொலராக  மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
 
சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததிலிருந்து அவர்கள்  வெளியேறும் வரை அரசு சுற்றுலாதுறையில்  கவனம் செலுத்த வேண்டும்; சுற்றுலாப் பயணிகள் தாங்கள் சிறப்பாக  வரவேற்கப்படுவதுடன் கவனி க்கப்படுகிறார்கள்  என்று உணருவதை  உறுதிசெய்வதற்கு சகல  விடயங்களும்  கவனிக்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப எரிபொருள், உணவு மற்றும் இதர வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய, சுற்றுலாப் பயணிகளின் நலனை ஒரு தனி அமைச்சர் கண்காணிக்க முடியும். சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசர அழைப்பு சேவை வசதி இருக்க வேண்டும் இது வருகை  தருவதற்கான காலம்  அல்ல என்று சொல்வதை விட அவர்களை பார்வையிட ஊக்குவிக்க வேண்டும். அவு ஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் வருகை தந்த அணிக்கு எவ்வாறு  தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள் மற்றும் , அவு ஸ்திரேலிய வீரர்கள் எவ்வாறு  பதிலளித்தார்கள் என்பதை அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
 
டொ லர்களைப் பெறுவதற்கான முக்கியமான வழிகளில் ஒன்று வெளிநாட்டில் தொழில் புரிவோர் அனுப்பும்  பணமாகும்..எவ்வாறாயினும், கடந்த ஆகஸ்ட் முதல், 2022 பெப்ரவரி வரையில் நிலையான வீழ்ச்சி  ஏற்பட்டுள்ளது பெப்ரவரியில்   205 மில்லியன் டொலர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது    இந்த தொகை  சிறிது  உயர்ந்து 250 மில்லியன் டொ லர்களாக உள்ளது. இந்த ஆதாரம் ஒரு உயிர்நாடியாகும்.. டொ லர்களை சம்பாதிப்பதற்காக எவ்வளவு பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசு முயற்சிக்கிறது. பணம் அனுப்புதல் குறைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன; ஒன்று செயற்கையாக டொ லரை நிர்ணயம் செய்வது, மற்றொன்று அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடையே ஊழல் மலிந்துள்ளது என்ற கருத்து.
முறைமை யில்  ஊழல் பரவலாக உள்ளது என்பது இரகசியமல்ல. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று அரசியல்வாதிகள் குறிப்பிடப்படுகிறார்கள். தற்போதைய நெருக்கடி உட்பட அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் தரகு  பெறுவது  நன்கு அறியப்பட்டதாகும். புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க இதனை  நாம் சரியானதாக  வைக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த முடியாவிட்டால், நாம் ஒரு தேசமாக அழிந்து போவோம். ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றி கட்சி யை மாற் றுவதால் எந்த பயனும் இல்லை. நல்லாட்சி  அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர், ஆனால் இறுதியில் அந்த அரசாங்கமும் ஊழலை ஊக்குவித்தது மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர எதுவும் செய்யவில்லை, அவர்களைப் பாதுகாத்தது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  ஆட்சிக்கு வந்ததும் நாடு சரியான பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை இருந்தது ஆனால் அதற்கு நேர்மாறானது.இடம்பெற்ற து
 கடந்த ஆட்சியில்   தலைவிரித்தாடிய ஊழல்கள்தொடர்பாக  “பதிவுகள்மாற்றப்பட் ட மை  ” பற்றி ஸ்கை நியூஸ் நேர்காணலில் ரணில், பேசினார் . எவ்வாறாயினும்,நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்திய  தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் பலனளிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.என்பதுடன்  ரணிலின் தடப்பதிவுகள் அவர் ஒரு நம்பகத்தன்மையற்ற வர்  என்பதை நிரூபிக்கிறது.
நிலைமையை மாற்றுவதற்கு  தேர்தலொன்று  தேவையா? ஒரு தேர்தலானது  நிலைமையை மோசமாக்கலாம். தற்போது எங்களிடம் இருப்பது புதிய அரசாங்கம், புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் ஒப்பிடக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் வடிவம்.அவர்கள்  என்ன செய்தார்கள்? நடைமுறையில் எதுவும் இல்லை. இந்த நாடு எமது எதிர்காலம், அதை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவதற்கு  ஒருமுறைமை  மாற்றமே   எமக்குத் தேவை.
கிரவுண்ட்  வியூஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.