Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றில் திருமணம் செய்யுங்கள்; அல்லது நாட்டைவிட்டு ஓடுங்கள்! திருமலை இளைஞருக்கு இப்படியும் அழுத்தம்!

Featured Replies

[Friday August 10 2007 07:03:23 AM GMT]

திருகோணமலையில் தமிழ் இளைஞர்களை உடனடியாகத் திரு மணம் செய்யுமாறும், இல்லையேல் நாட்டை விட்டு ஓடிவிடுமாறும் படையினர் கட்டளையிட்டு வருகின்றனர். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து தமிழர்கள் கடும் துன்பங் களை அனுபவித்து வருகின்றனர். தமிழர் களின் பிரச்சினையை உரிமைப் போராட் டத்தை பயங்கரவாதம் என்று இந்த அரசு சர்வதேச நாடுகளுக்குக் காட்டி வருகின்றது.

புலிகள் ஏன் ஆயுதங்களை ஏந்திப் போராடு கிறார்கள் என்பதை இந்த அரசு இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை. கிழக்கைப் பிடித்துவிட்டோம் என்று அரசு தம்பட்டம் அடிக்கின்றது. அது போலியான ஆட்டம். இலங்கையில் தமிழர்களின் விகிதாசாரத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருகோணமலையில் அரச படையினர் தமிழ் இளைஞர்களை திருமணம் முடிக்குமாறும் அல்லது நாட்டை விட்டு ஓடிவிடுமாறும் கட்டளையிடுகின்றனர்.

திருகோணமலையில் அதிக கெடுபிடிகள் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்றன.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் திருமலை மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர

திருமணம் செய்துகொண்டால் தமிழ் இளையோரின் விடுதலைஉணர்வு மங்கிவிடுமென நினைக்கின்றார்கள்போல் தெரிகிறது

தமினை ஒடுக்குவதற்கு சிங்களம் எப்படியெல்லாம் சிந்தித்து செயல்படுகிறதென்பதை தமிழர்தரப்பு புரிந்துகொண்டு செயலில் இறங்கவேண்டும்

அவசரகால சட்ட முலத்துக்கு மாண்புமிகு தொண்டமான் வாக்களித்தாரா

Edited by ஈழவன்85

அவசரகால சட்ட முலத்துக்கு மாண்புமிகு தொண்டமான் வாக்களித்தாரா

என்னய்யா இது. "அதற்கு" தான் மிக முக்கியமாக அளிப்போம் என்று கனம் ....... அவர்கள் பேட்டியில் சொல்லி இருந்தாரே. மறந்திடிச்சா? :)

ஹி ஹி. தொண்டமான் அய்யா பற்றி சுவையான தகவல் இருக்கு. கள நாகரீகம் கருதி பதிக்க முடியவில்லை.

ம்.. இவங்களெல்லாம் மனிசனுகள்... :angry:

கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை விரைவில் காணலாம்.

கிட்ட தட்ட புத்தளம் மாவட்டத்தில் நடந்தது போல சிங்களவர்கள் தமிழ் பெண்களை திருமணம் முடிக்க முன் தள்ள படலாம்... அதோடு தமிழ் பாடசாலைகளில் சிங்கள கல்வி அவச்சியமாக்க பட்டு பின்னர் சிங்களத்தில் கல்வி தமிழ் ஒரு பாடம் எனும் அளவுக்கு கொண்டு செல்ல படும் சாத்தியங்கள் அதிகம்...

அதாவது புதிதாய் பிறக்கும் தலைமுறையை சிங்களவராக பிறக்க வைக்கவும். சிங்களவராக மற்றும் நடவடிக்கை நிகழ்த்த படலாம்....

இதை சிங்கள தலைமை சுயமாக சிந்தித்ததாக கொள்ள தேவை இல்லை.... ஏற்கனவே மிலோசவிச் எனும் கொடுங்கோலனால் திட்டமிடப்பட்டு சேர்பியர்கள், பொஸ்னியர்களுக்கும் பொஸ்னிய பெண்களுக்கும் செய்த கொடுமையின் பிரட்திதான் இது.....!

இப்போதிருக்கும் நிலையில் சர்வதேசம் இதன் ஒற்றுமையை கண்டு கொள்ளும் என நம்பலாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.