Jump to content

கட்டுநாயக்க விமான நிலையத்தில், போராட்டம் – திருப்பி அனுப்பப்பட்ட பசில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில், போராட்டம் – திருப்பி அனுப்பப்பட்ட பசில்!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து அவர் திரும்பிச் செல்ல நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.கே.ஏ.ஏ.எஸ்.கனுகல தெரிவித்தார்.

அதன்படி, நேற்று  நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை உரிய கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக திரு.கே.ஏ.எஸ்.கனுகல தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1290803

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை – பொதுஜன பெரமுன

எந்தவொரு தலைவரும்... நாட்டைவிட்டு, வெளியேறவில்லை – பொதுஜன பெரமுன.

எந்த ஒரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியத் தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் காணொளிகளில் உண்மையில்லை என அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் உயர்பீட தலைவர்கள் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டிலேயே தங்கியிருப்பார்கள் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1290850

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு - விமான நிலையத்தில் நள்ளிரவுப் போராட்டம்

  • பரணி தரன்
  • பிபிசி தமிழ்
22 நிமிடங்களுக்கு முன்னர்
 

பசில் ராஜபக்ஷ

 

படக்குறிப்பு,

விமான நிலைய பட்டுப்பாதை சிறப்பு ஓய்வு அறை வளாகத்தில் பசில் ராஜபக்ஷ, நாள்: 11-07-2022

இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் வழியாக நாட்டை விட்டுச் செல்ல மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்தது. இவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தம்பி ஆவார்.

மேலும் இவர் முன்னர் நிதி அமைச்சராக இருந்தவர். தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். 2007 முதல் 2015 வரையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ஷ வந்த தகவலை பிபிசியிடம் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆனால், விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பார்த்த பயணிகள், அவருக்கு சிறப்புச் சலுகை அளிப்பதை ஆட்சேபித்தனர். அவர் அந்த வளாகத்துக்கு வந்த காட்சிகள் இடம் பெற்ற காணொளி மற்றும் படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டன.

இதேவேளை பசில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்கு துபாய்க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

பயணிகள் போராட்டம்

 

பசில் ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நிலையில், பயணிகளின் எதிர்ப்பு மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று பலரும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, பசில் விமானத்தில் செல்வதற்கும் அவரது பயண நடைமுறையை நிறைவேற்றுதவற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக பசில் மீண்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கம் (SLIEOA) நேற்று இரவு முதல் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தில் சேவை வழங்குவதில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளது.

இதனால் இன்று காலை இந்த முனையத்தில் பயணிகள் சிறப்புச் சலுகையுடன் பயண நடைமுறைகளை நிறைவேற்ற வாய்ப்பின்றி பிசினஸ் வகுப்பு பயணிகள், சாதாரண வகுப்பு பயணிகள் போல வரிசையில் காத்திருந்து விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசினஸ் வகுப்பு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக பிரத்யேகமாக இந்த 'சில்க் ரூட் பேசஞ்சர் கிளியரன்ஸ் டெர்மினல்' என்ற பெயரிலான தனி பாதை மற்றும் விரைவு விமான பயண நடைமுறையை நிறைவேற்றும் வசதி செயல்பாட்டில் உள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இது குறித்து இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கத் தலைவர் கே.ஏ.ஏ.எஸ். கனுகலா கூறும்போது, "நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை, நெருக்கடி மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தலைவர்கள் மிகப்பெரிய அளவில் இந்த பட்டுப்பாதை அனுமதி முனையத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பலமான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு எங்களுடைய சேவையை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளோம்," என்றார்.

பட்டுப்பாதை வசதி எப்படி இருக்கும்?

 

இலங்கை விமான நிலையம்

பட மூலாதாரம்,BIA SRILANKA

  • இந்த வசதியை பயன்படுத்த நாட்டின் அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதல்வர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் தகுதி பெறுவார்கள். இவர்களுக்கு இந்த சேவை இலவசமாக கிடைக்கும்.
  • அதே சமயம், பிசினஸ் வகுப்பு பயணிகள் கட்டண முறையிலும் விமான நிறுவனங்களின் தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டு திட்டத்தின் கீழும் அவற்றின் கவனிப்பில் பட்டுப்பாதை முனைய சேவையை வழங்கலாம்.
  • இது தவிர, இந்த சேவையை பெற விரும்பும் பயணி ஆன்லைனில் கிரெடிட் கார்டு அல்லது டிபார்ச்சர் சில்க் ரூட் லவுஞ்ச் அல்லது வருகை முனையத்தில் உள்ள வெளிப்புற கவுன்ட்டரில் இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்தி வசதிகளை அனுபவிக்கலாம்.
Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

  • சோதனை நடவடிக்கையின்போது ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • தற்போது புறப்பாடுக்கான பட்டு பாதை ஓய்வறையில் குடியேற்ற வசதிகள் வழங்கப்படுவதில்லை.
  • அதேசமயம், வருகை பட்டுப்பாதை வழியாக வெளியே வர அனுமதிக்கப்பட்ட பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நிலையத்துக்குள் நுழைந்ததுமே அவரை இந்த முனையத்தின் சேவைப்பிரிவு பிரதிநிதிகள் வரவேற்று அழைத்துச் செல்வர். இன்னொரு குழு பயணியின் உடைமைகளை துரிமாக எடுத்து வந்து பயணிகளிடம் ஒப்படைக்கும். இடைப்பட்ட நேரத்தில் சிறப்பு ஓய்வறையில் பயணிகள் தங்கி இளைப்பாறவும் அவர்களை உபசரிக்கவும் பிரதிநிதிகள் இருப்பார்கள். விமான நிலையத்தில் இருந்து அந்த பயணிகள் வாகனத்தில் புறப்படும்வரை அவர்களுடன் ஒரு பிரதிநிதி பிரத்யேகமாக இருந்து வழியனுப்பி வைப்பார்.

மக்களே உருவாக்கிய தணிக்கைச்சாவடிகள்

 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தமது விலகல் கடிதத்தை இன்றே வழங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் அந்த மாளிகைகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது தவிர, நாட்டின் அரசியல் தலைவர்களில் குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் யாரும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக போராட்டக்காரர்கள் தற்போது தாங்களாகவே பல முக்கிய பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ளூர் போலீஸாரும் உள்ளனர்.

இந்த நிலையில், பசிலின் அண்ணன்களான முன்னாள் பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கோட்டாபய ஆகியோரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கொழும்பில் ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தப் பின்னணியில் ஜூலை 13ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கெனவே கூறியது போல முறைப்படி பதவியில் இருந்து விலகினால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சித்த தலைவர்களுடன் பேசிய பிறகு நாடாளுமன்றத்தில் ஜூலை 20ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62131361

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

பசில் ராஜபக்சவின் விமானச் சீட்டு.   கொழும்பு  ---  டுபாய்  ---  வாசிங்டன். 
நேற்று, விமான நிலையத்தில் இருந்து பசில் திருப்பி அனுப்பப் பட்டார். 

 👉   https://www.facebook.com/100009615912887/videos/pcb.3147311598932673/2032978690231223  👈

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Trump Shuttle எனும் விமானசேவை நான் வந்த காலத்தில் இருந்தது.
    • அதற்கான வேலையில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.
    • "தேயாதே வெண்ணிலவே"     முன்னொரு காலத்தில், மலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான கிராமத்தில், அல்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். இந்த கிராமம் அதன் வளமான நாட்டுப்புறக் கதைகளுக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த வசீகரிக்கும் புராண கதைகளுக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஒரு புராணக்கதை ஒன்று "தேயாதே வெண்ணிலவே" என்பதைப் பற்றிப் பேசியது, இது சந்திரன் அதன் வழக்கமான குறைந்து வரும் கட்டத்தை எதிர்க்கும் ஒரு மாயாஜால நிகழ்வாகும்.   அல்லி, ஆர்வமுள்ள, சாகச மற்றும் அழகான இளம் பெண்ணாகும், குழந்தை பருவத்தில் இருந்தே தன் தாயிடமும் மற்றும் மூத்தவர்களிடமும் இருந்து இந்த வசீகரிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தாள். தேயாத வெண்ணிலவை ஒரு முறையாவது தான் பார்க்க வேண்டும் என்று அவள் கனவு கண்டாள். பலர் அதை கற்பனையான கட்டுக்கதை என்று கருதினாலும். மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆளாகாமல், புராணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்கும் தேடலை அவள் தொடங்கினாள்.   அல்லி கிராமப் பெரியவர்களைக் கலந்தாலோசித்தார், அவர்கள் 'சந்திரன் மறையாதே' என்று பேசும் பண்டைய நூல்களின் குறிப்புகளை அவளுடன் பகிர்ந்து கொண்டனர். என்றாலும் சந்திரன் மறைய மறுப்பது வரவிருக்கும் அழிவின் அறிகுறி என்று நூல்கள் சுட்டிக்காட்டின. எனவே பேரழிவு நிகழ்வுகள் குறித்து அவர்கள் எச்சரித்ததுடன் அப்படியான ஒரு நிகழ்வு என்றும் நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.   எது எப்படியாகினும் அல்லி தனது உறுதியால் உந்தப்பட்டு, தனது ஆராய்ச்சியில் ஆழ்ந்தார். வானியல் நிகழ்வுகளைப் பற்றி தனது கிராமத்தில் உள்ள நூலகத்தில் பண்டைய நூல்களில், புராணங்களில் எழுதிய பல பழைய குறிப்புகளைக் கண்டுபிடித்தார். அந்த குறிப்பில் சந்திரனின் முழுமையை பாதுகாக்கும் மற்றும் தேயும் வெண்ணிலாவை தடுக்கும் திறன் கொண்ட, இன்று மறந்துபோன சடங்கு பற்றிய ரகசிய குறிப்புகள் இருந்தன. அது அவளுக்கு உத்வேகம் கொடுத்தது. நீண்ட நேரம் வாசித்த களைப்பில் அவள் நூலக மேசையிலேயே கண்ணயர்ந்து விட்டாள்.   அல்லி, புராண கதையில் கூறிய அந்த மர்ம இடத்தை நோக்கி, எவருக்கும் சொல்லாமல் தன்னந் தனிய தனது சவாலான பயணத்தைத் தொடங்கினாள், எவராலும் உள்போகாத, ஆராயப்படாத காடுகள் மற்றும் பயங்கர மலைகளுக்குள் நுழைந்தாள், புராண நூல்களில், வாசித்து அறிந்த, ரகசிய துப்புகளால் அவள் வழிநடத்தப்பட்டாள். அவளுடைய பாதையில், அவளின் தைரியத்தையும் உறுதியையும் சோதிக்கும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டாள். அவள் பயங்கரமான பள்ளத்தாக்குகளை கடந்தாள், புராண கதைகளில் காணப்படும் பல அதிசய உயிரினங்களை எதிர்கொண்டாள், அத்துடன் சக்திவாய்ந்த புயல்களை, மின்னல்களை எதிர்கொண்டாள், என்றாலும் எதற்கும் சற்றும் சளையாது தன் பயணத்தை தொடர்ந்தாள்.   பல வாரங்கள் இடைவிடாத நடைகளின் பின், அல்லி ஒரு கம்பீரமான மலை உச்சியில் ஒரு ஒதுக்குப்புற தோப்புக்கு வந்தடைந்தாள். பழங்கால கல் தூண்களால் சூழப்பட்டு, சந்திரனின் வெள்ளி ஒளியில் அவள் முற்றாக நனைந்தாள். சற்று தேடுதலின் பின், புராணக் குறிப்பில் கூறப்பட்ட சடங்கு செய்ய வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தாள். புராண கதையில் கூறப்பட்ட அறிவுரைகளின் படி புனிதமான பொருட்களை ஏற்பாடு செய்தாள் மற்றும் கடந்த தலைமுறையிலிருந்து வழி வழி வந்த மந்திரங்களை உச்சரித்தாள்.   அல்லி சடங்கை முடித்தவுடன், அவள் பூசை செய்த அமைதியான அழகான தோப்பை சூழ்ந்து, அதன் இயற்கையான சுழற்சியை மீறி, சந்திரன் தனது தேய்தலை இடைநிறுத்தி, அவளுக்கு மேலே பிரகாசமாக பிரகாசித்தது.. அல்லியின் முயற்சிகளை அறியாத கிராமம், தங்களின் வீடுகளின் மேலே தேயாத வெண்ணிலாவின் ஒளிர்வைப் பார்த்து பிரமித்தார்கள்!   அடுத்தடுத்த நாட்களில், கிராமவாசிகள் நிலவின் மறையாத, தேயாத பிரகாசத்தைக் கண்டு வியந்தனர், என்றாலும் வரவிருக்கும் பேரழிவிலிருந்து தங்கள் உலகம் காப்பாற்றப் பட வேண்டும் என்று பெரும் பூசைகள் செய்யத்தொடங்கினர். அதன் முழக்கம் அல்லியின் காதிலும் பல நூறு மைல்கள் தாண்டி கேட்டது. அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். தான் இன்னும் தனது கிராமத்து நூலகத்தில், புராணக் கதைகளின் நடுவில் இருப்பதைக் கண்டு மிக மிக வெட்கப்பட்டு தலை குனிந்தபடி தள்ளாடி தள்ளாடி வீட்டை நோக்கி புறப்பட்டாள், தனது முடியாத தேடுதலை நோக்கி, "தேயாத வெண்ணிலா"வாக!!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • முரளிதரனுக்கு வாழ்த்துக்கள். இதற்கான பயிற்சிகள் எடுத்தாரோ?
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.