Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தராதரம் பாராமல்... சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என பொலிஸார் எச்சரிக்கை – போராட்டக் களத்தினை விட்டு வெளியேற, சிலர் மறுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை – போராட்டக்களத்தினை விட்டு வெளியேற சிலர் மறுப்பு!

தராதரம் பாராமல்... சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என பொலிஸார் எச்சரிக்கை – போராட்டக் களத்தினை விட்டு வெளியேற, சிலர் மறுப்பு!

காலி முகத்திடல், அதனை அண்மித்த பிரதேசத்தில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கைகளை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது.

குறித்த கால அவகாசம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடையவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டக் களத்திற்கு நேற்றைய தினம் மீண்டும் வந்த கோட்டை பொலிஸார் காலிமுகத்திடலை விட்டு வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைவாகவும், பொதுமக்களை வன்முறை ஏற்படுத்தாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் தங்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரின் அறிவிப்பிற்கு இணங்கி நேற்று ஒரு குழுவினர் போராட்டப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

எனினும் வேறு சில தரப்பினர் அந்த இடத்தை விட்டு எந்த வகையிலும் வெளியேற மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1293664

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2022 at 14:41, தமிழ் சிறி said:

அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

On 5/8/2022 at 14:41, தமிழ் சிறி said:

பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகா ......ஆகா........ இதுவல்லோ உண்மையான நீதி, சமாதானத்தை பாரபடசமில்லாமல் நிறைவேற்றும் போலீசார்!  நோபல் பரிசு அளிக்கப்படவேண்டும் இவர்களுக்கு.

On 5/8/2022 at 14:41, தமிழ் சிறி said:

தற்போதுள்ள சட்டத்திற்கு அமைவாகவும்,

முந்தையது என்ன சட்டம்? தற்போதைய சட்டம் எதுவென விளக்கினால் விளங்கிறதுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கும்.

On 5/8/2022 at 14:41, தமிழ் சிறி said:

பொலிஸாரின் அறிவிப்பிற்கு இணங்கி நேற்று ஒரு குழுவினர் போராட்டப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதுக்கு மேல் என்ன நடைபெறுமென விளங்கிக்கொண்டவர்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.