Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

385 மில்லியன் செலவில் கொழும்பில் புதிய உதைபந்தாட்ட மைதானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

385 மில்லியன் செலவில் கொழும்பில் புதிய உதைபந்தாட்ட மைதானம் [12 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] சுகததாச விளையாட்டு அரங்குக்கு அடுத்தபடியாக சர்வதேச தரத்திலான ஒரு உதைபந்தாட்ட அரங்கை கொழும்பில் அமைப்பதற்கான அடிக்கல்லை, விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே கடந்த வியாழக்கிழமை கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில் நாட்டி வைத்தார். இவ்வைபவத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற விவகார அமைச்சர் எம்.எச். முகமட்டும் கொழும்பு சிற்றி லீக்கின் முன்னாள் தலைவர் எப்.ஏ. யூசீனும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவ்வைபவத்தில் மேற்படி லீக்கின் செயலாளர் எம். பிரேமதாச உரையாற்றுகையில் கூறியதாவது; "1902 ஆம் ஆண்டு எமது லீக் உருவானது. எமது லீக்கில் அங்கம் வகித்த வீரர்கள் தான், இலங்கை உதைபந்தாட்ட அணி சிறப்பாக உருவாவதற்கு பெருமளவில் உதவினார்கள் என்பதை நான் துணிந்து கூறுவேன். 1977 ஆம் ஆண்டுதான் இந்த இடத்தில் ஒரு சிறிய அளவிலான நிலப்பரப்பு விளையாட்டு மைதானமாக எமக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், நாம் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த போராட்டத்தினால் தான், இன்று இந்த பெரும் நிலம் எமக்குக் கிடைத்துள்ளது. இதேநேரம், இலங்கை உதைப்பந்தாட்டச் சங்கம் கொழும்பு பம்பலப்பிட்டியில் ஒரு பழைய கட்டிடத்தின் அறையிலேயே இயங்கி வந்தது. இந்த தலைமைச் செயலகம் பின்பு கொழும்பு றீட் அவனியூவில் உள்ள குதிரைத்திடல் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது, ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுத்தலைவருமான மணிலால் பெர்னாண்டோ இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்பே இலங்கையின் உதைப்பந்தாட்டத் தரம் துரிதகதியில் வளர்ச்சி அடைந்தது. மணிலால் பெர்னாண்டோ இலங்கையில் உதைப்பந்தாட்ட வளர்ச்சிக்காக சிறப்பாக சேவையாற்றி வருவவதனாலேயே, இவர் ஆசிய உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் பின்புதான், இவர் மேற்கொண்ட விடாமுயற்சியினால், சர்வதேச உதைப்பந்தாட்ட கூட்டமைப்பிடம் (FஈFஆ) இருந்து நிதி உதவி பெற்று, இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனத்துக்கான தலைமைச் செயலக கட்டிடத்தை றீட் அவனியூவில் நிர்ணயித்தார். அந்த புதிய கட்டிடத்தை சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் ஜோசப்பிளட்டரே திறந்து வைத்தார். இதேநேரம் மணிலால் பெர்னாண்டோ, வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்ட லீக்குகளின் அபிவிருத்திக்காக, கோடிக்கணக்கான பணத்தை, ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மூலமும், சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பின் மூலமும் பெற்று வழங்கி வருகின்றார். குறிப்பாக சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட மைதானத்தை உருவாக்கும் திட்டத்தை மன்னாரில் ஆரம்பித்துள்ளார். நாட்டின் நிலைமை சீரில்லாததனால் இத்திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்பு, இன்று சர்வதேச தரத்திலான உதைப்பந்தாட்ட அரங்கை கொழும்பில் நிர்ணயிப்பதற்கு திட்டங்களை ஆரம்பித்துள்ளார். இதற்கு நாம் அனைவரும் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம் என்று பிரேமதாசா கூறினார். இவ்வைபவத்தில் மணிலால் பெர்னாண்டோ சிறப்புரை ஆற்றுகையில், இலங்கையில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானங்கள் பல இருக்கின்றன. உதைபந்தாட்டத்துக்கு என, சர்வதேச தரத்தைக் கொண்ட, சுகததாச விளையாட்டு அரங்கை விட, இலங்கையில் வேறு அரங்குகள் ஏதும் கிடையாது. இன்று, கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில், சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட மைதானம் உருவாவதற்கு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 385 மில்லியன் ரூபாவில் முற்றுப்பெற இருக்கும் இத்திட்டம் 9 மாதங்களுக்குள் முடிவடைந்து விடும் என்று கூறினார். இவ்வைபவத்தில் உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே `இத்திட்டம் எதுவித தடங்கலுமின்றி நிறைவுபெற எனது அமைச்சு அனைத்து உதவிகளையும் செய்யும்' என்று உறுதிமொழி வழங்கினார். http://www.thinakkural.com/news/2007/8/12/...s_page33463.htmவடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி நடை பிணமாக திரிகிறார்கள்.இந்த இலட்சணத்தில் 350 மில்லியன் ரூபா செலவில் உதைபந்தாட்ட மைதானம் வேறு.

மகிந்த குடும்பத்துக்கு கப்பம் இந்த காசில் அரைவாசியா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.